வாசகர்கள் கருத்துகள் ( 47 )
கட்சியினரை ஒழுங்கு படுத்துவதா அல்லது ரசிகர்களை ஒழுங்கு படுத்துவதா? எல்லாக் கட்சிகளிலும் விஜய் ரசிகர்கள் இருக்கின்றார்கள். நயன்தாராவுக்கும் ஸ்மிதாவுக்கும் கோவில் கட்டியவர்கள் இந்த ரசிகர்கள். ஆனால் எதோ ஒரு கட்சி தொண்டர்களாக இருப்பார்கள்.
தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளும் நேர்மையாக அரசியல் செய்ய தயாராகயில்லை. அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் மாறிமாறி குறைகூறிக்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமே. அதனால் கண்டிப்பாக குறைந்தபட்சம் ஒரு முழுமையான அரசியல் மாற்றம் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதனை மக்கள் ஒட்டு மூலமாக மட்டும்தான் கொண்டுவரமுடியும். இதனை மக்கள் புரிந்துகொண்டால் மட்டுமே அடையமுடியும்.
இந்த பாரத நாட்டை வழி நடத்தும் ஆற்றல் ......
படித்தவனுக்கு வேலை கிடைக்க வேண்டும். இருக்கின்ற வேலையை தக்க வைக்க வேண்டும் என்பது கவலை. அதே போல தொழில் செய்பவனுக்கு லாபம் வர வேண்டும் என்று கவலை. எவனாவது வேலை உள்ளவன் அங்கே போய் 8 மணி நேரம் காத்திருந்து உயிரை கொடுப்பானா?
ராகுல், விஜயிடம் அப்படி என்ன பேசி இருப்பார் ? 15 நிமிடம் ?? இனி காங்கிரஸ் விஜய் பக்கம் சாயுமா ? திமுக என்ன செய்யும் ?
அரசியல் ஆளுமை இருப்பவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை மக்கள் ஆதரவு இருப்பவருக்கு அதற்கான ஆளுமை இல்லை
இந்த உலகத்தில் அனைவரும் குழந்தையாக பிறந்து படிப்படியாக கற்று கொள்பவர்கள்தான். நீங்கள் சொல்வது போல் பார்த்தால் புதியவர்கள் யாரும் எந்த தொழிலுக்கும் போகமுடியாது. அரசியலிலும் மற்றவர்கள் அனைவரும் முன்பு ஆளுமை இல்லாமல், வந்தபிறகு ஆளுமையை பெற்றவர்கள்தான்.
ஆண் ,பெண் பிள்ளைகள், பெற்றோர் பேச்சை கேட்பதில்லை கணவன் மனைவி ஒருவர் பேச்சை மற்றொருவர் கேட்பதில்லை , இது அனைத்தும் விஜய்க்கும் பொருந்தும். பின் அவர் பேச்சை எப்படி அவர் தொண்டர்கள் கேட்பார் .?
அதற்கு திராவிட சிந்தனை முழுவதுமாக மாறவேண்டும். தமிழ் அறிவு மீண்டும் துளிர்க்கவேண்டும்.
அறிவார்ந்த சமூகமாக மீண்டும் தமிழகம் மாற வேண்டும் அதற்க்கு திராவிட சிந்தனை ஒழிய வேண்டும் மரபியல் வேர்கள் மீண்டும் தழைக்க வேண்டும் அப்பொழுது உலகம் போற்றும் சமூகமாக உலகுக்கே வழி காட்டும் சமூகமாக நாம் மாற முடியும்
ரொம்பவும் கனவு காணாதீர்கள் ...
கட்சியை, கட்சியினரை ஒழுங்கு செய்யும் ஆற்றல் விஜய்க்கு இல்லை. ஒரு ஒழுங்கான மக்கள், தேசிய நல கொள்கை வெளிப்படுத்த வில்லை. சினிமா கூட்டாளிகள் தவறான கருத்துக்கள் மக்களிடம் பதிந்துள்ளது. 500, 1000 ரூபாய் கொடுத்து சினிமா பார்ப்பது, 1000 மேல் பணம் டாஸ்மாக்குக்கு செலவு செய்வது . ஆனால், ஒரு நபருக்கு ஆண்டுக்கு 100 ரூபாய் அரசின் பொது சேவைக்கு வரியாக வசூலிக்க முடியாது. ஒரு ரூபாய் ஒரு டாலர் மதிப்பு எப்போது பெறும்? மத்திய அரசு, மாநில நிர்வாகம் பொருளாதார பொறுப்பை தேர்தல் ஆணையம் வகுத்தால் , கமல், விஜய் போன்ற பலர் கட்சி துவங்க முடியாது. அரசியல் சுத்தமடையும்.
சிறுபான்மை வோட்டு யாருக்கு?? அதுதான் விடியலுக்கு வியர்த்து கொட்டுது ...
உங்களுக்கு பிரச்சினை இல்லை. மைனாரிட்டி சமூக வாக்குகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பே கிடையாது