உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டு மனையில் சர்ச் கட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு

வீட்டு மனையில் சர்ச் கட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு

கரூர்: கரூர் மாவட்டம், காதப்பாறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன் நகரில், வீடு கட்ட வாங்கிய மனையில், சர்ச் கட்ட அனுமதி வழங்க கூடாது என, விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில சேவா பிரமுகர் பாலசுப்பிரமணி தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதில், கூறியிருப்பதாவது:

கரூர் அருகில், காதப்பாறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன் நகரில் வீட்டு மனைகள் பிரித்துள்ளனர். அதில் ஒரு மனை வாங்கப்பட்டு, சர்ச் கட்டுமான பணி துவங்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை. இப்பகுதியில், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். எதிர்காலத்தில் தேவையில்லாமல் பிரச்னை ஏற்படக் கூடும். எனவே, சர்ச் கட்ட அனுமதி வழங்கக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M.R. Sampath
நவ 15, 2024 07:13

நாட்டின் சட்ட ஒழுங்கை கடைபிடிக்கத் தவறும் போக்கு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அதுவும் சில குழுவினர் தற்போதைய அரசியல் தங்களுக்கு சாதகமாக இருப்பதான பார்வையை கொண்டுள்ளதாக நினைக்கப்படும் சூழ்நிலையில் தைரியமாக சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். வீடு கட்ட வாங்கிய மனையில் தேவர் ஆலயம், அது எந்த மதம் சார்ந்ததாக இருந்தாலும் அமைக்க உரிமை இல்லாதபோது அதை சாத்தியமாக்க ஈடு படும் துணிச்சல் பெற்றுள்ளனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இத்தகைய அத்து மீறல் செயல்களை கண்டிக்காமல் விட்டால் மற்ற மதத்தினரும் இதை எடுத்துக்காட்டாக கொண்டு கட்டுப்பாடின்றி இத்தகைய அத்து மீறல்களில் ஈடு படுவார்கள் என்பதில் ஐயம் இல்லை.


S. Rajan
நவ 12, 2024 01:15

மொதல்ல சர்ச் கட்டுவான். பின்னால் எல்லோரும் கிறிஸ்தவன் ஆகணும் என்பான். மரக்கட்டை முன் மண்டிபோடனும் என்பான். வாராவாரம் தட்டில் பணம் போடணும் என்பான். இந்துக்கள் விழித்திருப்பது மிக முக்கியம். . .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை