உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் டங்கு புங்குணு ஆடுராறே நீர்வளத்துறை அமைச்சர்; இ.பி.எஸ், கிண்டல்

சட்டசபையில் டங்கு புங்குணு ஆடுராறே நீர்வளத்துறை அமைச்சர்; இ.பி.எஸ், கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ஆரம்பத்திலேயே தி.மு.க., அரசு எதிர்த்திருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது என்று இ.பி.எஸ்., கூறினார்.டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்திருந்ததால், இந்த பிரச்னை வந்திருக்காது என்று எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., சட்டசபையில் கூறினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3vyrn7he&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து, அவைக்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்களுடைய போராட்டத்தை சமாதனப்படுத்தும் நோக்கத்தில் தான், முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். கடந்த 10 மாதமாக இந்த சுரங்கத் திட்டத்தை ஏன் எதிர்க்கவில்லை என்று மத்திய கனிமவளத்துறை அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார். ஆரம்ப காலத்திலேயே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை கோரும் போதே, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தால், இந்தப் பிரச்னையே வந்திருக்காது. முதல்வர் பிரதமர் மோடியை 2 முறை சந்தித்து பேசியுள்ளார். அப்போதாவது, இதைப்பற்றி பேசி, இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம். அலட்சியமாக அரசு செயல்பட்டுள்ளது. இதனை எடுத்துச் சொன்னால், கோபப்படுகிறார்கள். தமிழக மக்கள் பாதிக்கும் எந்த திட்டங்களையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அது எங்கள் நிலைப்பாடு. மக்களின் நலன் கருதி, இந்தத் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம். கனிமவளங்களை வெட்டி எடுக்க மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என்று 2023ல் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் போது ஏன் எதிர்க்கவில்லை? தற்போது, அந்த வாய்ப்பை தவற விட்டு விட்டார்கள். கனிமவள சட்டத்திருத்த மசோதாவை தி.மு.க., எதிர்க்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி, பார்லிமென்ட்டை அ.தி.மு.க., எம்.பி.,க்கள் முடக்கினர். அதுபோன்று செய்திருக்க வேண்டும். நானும் பல முறை பேசிவிட்டேன். எங்களைப் பேச விடமாட்டீங்கறாங்களே! எழுந்து எழுந்து டங்கு புங்குணு ஆட்டம் போடுறாரே நீர்வளத்துறை அமைச்சர். 'டிவி'யில் நீங்க பார்த்திருப்பீங்களே! அவங்க பேசுவதை முழுசா காட்டுவாங்க. நாங்க பேசுவதை எடிட் பண்ணிடுவாங்க. அவர்கள் செய்த தவறை மறைப்பதற்கு பல்வேறு நாடகங்களை அரங்கேற்றுகின்றனர், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

அப்பாவி
டிச 10, 2024 07:46

இவரிடமிருந்து. 10 பர்சண்ட் கேளிக்கை வரி வசூலிக்கணும்


M Ramachandran
டிச 09, 2024 19:31

ஐயா ஜாக்கிரதை இரட்டையிலை கோவிந்தா . இன்னும் தீவிரமாக அரசைய்ய எதிர்த்தால் கொடைய்ய நாடு உயிர்த்தெழும்


Oru Indiyan
டிச 09, 2024 17:22

புரியல. எவ்வளவு டங்ஸ்டன் தமிழ்நாட்டில் உபயோகப்படுத்துகிறது. எந்த சுரங்கத்திலிருந்து அந்த டங்ஸ்டன் உற்பத்தி செய்யப்பட்டது? நிலாவிலிருந்தா? வீனஸ் கிரகத்திலுருந்தா? மற்ற நாட்டிலிருந்து தானே? சீனா தானே கொடுக்கிறது. தமிரத்தில் ஏமாந்தோம். இப்போது டங்ஸ்டன். ஏன் நெய்வேலியில் நிலக்கரி சுரங்க அனுமதி கொடுத்தார்கள் கேடு கெட்ட காங்கிரஸ் ஆட்சி.


Dharmavaan
டிச 09, 2024 17:03

இப்படி எல்லா திட்டங்களையும் எதிர்த்தால் நாடு பிச்சை எடுக்க வேண்டியிருக்கும் மூடர்களுக்கு சொல்லுவது யார் அன்னமே கடிதம் எழுதியது தவறு மத்திய பிஜேபி அரசு சட்டத்திற்கு மாநில பிஜேபி தலைவர எதிர்ப்பு தெரிவித்திருப்பது கேலிக்கூத்து ஒழுங்கின்மை


sundarsvpr
டிச 09, 2024 16:28

சட்ட மன்ற எல்லா மேஜைகளிலும் ஓமாந்தூர் ராமசாமி சேலம் ராஜகோபாலன் விருதுபட்டி காமராஜ் ராஜபாளையம் குமாரசாமி மேலூர் கக்கன் மது தாண்டவதே லால் பகதூர் ரரேந்திரன் படங்கள் இருந்தால் சட்ட மன்றத்தில் வாய்மை ஜொலிக்கும். இது ஒரு நம்பிக்கைதான்.


nalledran
டிச 09, 2024 15:06

கள்ளக்கூட்டணியாளர் குதிப்பதை நிறுத்தட்டும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ஆரம்பத்திலேயே தி.மு.க., அரசு எதிர்த்திருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது என்று இ.பி.எஸ்., கூறினார். இது தாங்கள் வெளியிட்டுள்ள செய்தி. 2020-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் ஆய்வு நடைபெற்றுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. அப்போது ஆட்சியில் இருந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 1957, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி திருத்தம் திருத்தச் சட்டத்தில் சட்டப்பிரிவு 11டி-ஐ சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் முக்கியமான மற்றும் உத்திசார் கனிமங்கள் தொடர்பான சுரங்க குத்தகைகள் மற்றும் கூட்டு உரிமங்களை பிரத்தியேகமாக ஏலம் விட ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. அன்றைக்கு மோடியுடன் கொஞ்சிக் குலாவியது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். பாஜக-வுடன் கள்ளக்கூட்டணி வைத்திருந்த அதிமுக-வுக்கு இது தெரியாதா? மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என்று 2023ல் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் போது ஏன் எதிர்க்கவில்லை? எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். நாட்டின் நலன் கருதி ஏற்கத்தான் வேண்டும் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என தமிழக அரசிற்கு பதிலளித்துள்ளது ஒன்றிய அரசு.


nalledran
டிச 09, 2024 15:00

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ஆரம்பத்திலேயே தி.மு.க., அரசு எதிர்த்திருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது என்று இ.பி.எஸ்., கூறினார். இது தாங்கள் வெளியிட்டுள்ள செய்தி. 2020-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் ஆய்வு நடைபெற்றுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. அப்போது ஆட்சியில் இருந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 1957, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி திருத்தம் திருத்தச் சட்டத்தில் சட்டப்பிரிவு 11டி-ஐ சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் முக்கியமான மற்றும் உத்திசார் கனிமங்கள் தொடர்பான சுரங்க குத்தகைகள் மற்றும் கூட்டு உரிமங்களை பிரத்தியேகமாக ஏலம் விட ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. அன்றைக்கு மோடியுடன் கொஞ்சிக் குலாவியது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். 2020-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் ஆய்வு நடைபெற்றுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. அப்போது ஆட்சியில் இருந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என்று 2023ல் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் போது ஏன் எதிர்க்கவில்லை? எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். நாட்டின் நலன் கருதி ஏற்கத்தான் வேண்டும் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப் படுகிறது என தமிழக அரசிற்கு பதிலளித்துள்ளது ஒன்றிய அரசு.


தனசேகரன்,காரைக்குடி
டிச 09, 2024 15:38

அடிச்சிவிடு அடிச்சிவிடு உன் கட்சியின் அமைச்சரே அடிச்சு விடும் போது அறிவாலய அடிமை தொண்டனான நீ மட்டும் என்ன விதிவிலக்கா?


ஆரூர் ரங்
டிச 09, 2024 15:42

அப்போ மீத்தேன் ஆய்வுக்கு அனுமதி தந்தது திராவிட பங்காளிதானே? இரண்டுமே PAGE 21 தான்.


சுராகோ
டிச 09, 2024 16:47

2020 லும் 2023லும் எதிர்க்கவில்லை. 2024 லில் எதிர்ப்பு எங்கோ இடிக்கிறதே. பேரம் பாடியவில்லை போலும்.


sankar
டிச 09, 2024 14:56

கனிமவள கான்ட்ராக்ட்டுக்கு ஆசைப்பட்டு - திட்டம் கொண்டுவரசொன்னதே திமுக அரசு என்று அண்ணாமலை மிக தெளிவாக சொல்லிவிட்டார்


நிக்கோல்தாம்சன்
டிச 09, 2024 14:18

அனுபவிங்க eps


கண்ணன்,மேலூர்
டிச 09, 2024 15:40

அதே போல இந்த எடப்பாடி பாப்பா மாதிரி தவழ்ந்து, பாம்பு போல ஊர்ந்து போனதையும் டிவியில பாத்தோம்.


Kadaparai Mani
டிச 09, 2024 14:14

Dear EPS sir. Rs. bharathi media will not show the real proceedings in in their tv shows and print media. For vivadham they will take useless topics


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை