மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39
சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், ஒரு சில இடங்களில், ஆகஸ்ட் 3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை சற்று ஓய்ந்துள்ளது. இருப்பினும், பிற மாவட்டங்களில் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. இது, அடுத்த சில நாட்களுக்கு தொடரும்.இந்நிலையில், இன்று முதல், ஜூலை 30 வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.வலுவான தரைக்காற்று, மணிக்கு,, 40 கி.மீ., வேகத்தில் வீசலாம். இதேபோல, ஆகஸ்ட் 3 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 55 கி.மீ., வரையிலான வேகத்திலும்; இடையிடையே, மணிக்கு 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசலாம் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 hour(s) ago | 3
4 hour(s) ago | 2
7 hour(s) ago | 39