உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / களைகட்டுது : ஒன்று சேர்ந்தனர் பன்னீர், செங்கோட்டையன், தினகரன்

களைகட்டுது : ஒன்று சேர்ந்தனர் பன்னீர், செங்கோட்டையன், தினகரன்

மதுரை : அ.தி.மு.க., சண்டை, மீண்டும் களைகட்ட துவங்கி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் ஒன்று சேர்ந்தனர். அதேநேரத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியோ, “எவ்வளவு சோதனை வந்தாலும் எதிர்ப்பேன். பன்னீர், செங்கோட்டையன், தினகரன் ஆகியோர், தி.மு.க.,வின் பி டீம்,” என்று கொந்தளித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின், ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியில் இருந்து பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். மீண்டும் கட்சியில் இணைய விரும்பிய அவரை சேர்க்க, பழனிசாமி முன்வரவில்லை. நம்பியிருந்த பா.ஜ., தலைமையும் கைவிட்ட நிலையில், அரசியலில் பன்னீர் தனித்து விடப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d2057fj5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடுத்து, தன்னுடன் இணக்கமாக செல்லாத மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனையும் பழனிசாமி ஓரம் கட்டினார். கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என குரல் எழுப்பியதை தொடர்ந்து, அவரது கட்சி பதவிகளையும், ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்து, அதிரடி காட்டினார் பழனிசாமி. பழனிசாமியால் தனித்து விடப்பட்ட செங்கோட்டையன், பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோர் இணைந்து செயல்பட முடிவு செய்தனர். இதற்கான நிகழ்வாக, தேவர் குருபூஜை அமைந்தது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக, நேற்று முன்தினம் இரவே செங்கோட்டையன் மதுரை வந்தார். தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவரை, நேற்று காலை மதுரை வந்த பன்னீர்செல்வம் சந்தித்தார். பின், தேவர் குருபூஜையில் பங்கேற்க, இருவரும் ஒரே காரில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்றனர். பசும்பொன் அடுத்த நெடுங்குளம் கிராமம் அருகே இருவரும் காத்திருந்தனர். அங்கு தினகரன் வந்து சேர்ந்தார். போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சசிகலாவை, அவர்களால் வரவேற்க முடியவில்லை. எனவே, சசிகலா தவிர மற்ற மூன்று பேரும், பசும்பொன் கிராமம் சென்று, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தாமதமாக அங்கு வந்த சசிகலாவை சந்தித்தனர். தேவர் குருபூஜையில் சந்தித்துக் கொண்ட மூவரும், அரசியலில் இணைந்து செயல்பட முடிவு செய்தனர். இதை அறிந்ததும் கோபமான பழனிசாமி, “எவ்வளவு சோதனை வந்தாலும் எதிர்ப்பேன். தினகரன், பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர், தி.மு.க.,வின் 'பி டீம்' ஆக செயல்படுகின்றனர்,” என கொந்தளித்தார். இதுகுறித்து, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மதுரை முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “எங்களை, 'பி டீம்' என சொல்லும் பழனிசாமி, தி.மு.க.,வின், 'ஏ1 டீம்' ஆக உள்ளார். முதல்வர் ஸ்டாலின் நிழலில் அரசியல் செய்து வருகிறார்,” என்றார். இதற்கிடையே தேர்தல் நெருங்குவதால், பன்னீர்செல்வம் புதிய கட்சி துவக்க திட்டமிட்டு, தேர்தல் கமிஷனிடம் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் ஆகியோரை, அ.தி.மு.க.,வில் சேர்க்க மறுத்தால், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு சசிகலா சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அ.தி.மு.க,வில் மீண்டும் சண்டை களைகட்ட துவங்கி உள்ளது. 'த.வெ.க.,வுடன் பேசவில்லை' அ.தி.மு.க., தலைமையில், பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளது. த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை; அவர்களும் எங்களுடன் பேச்சு நடத்தவில்லை. அ.தி.மு.க., கூட்டத்தில், த.வெ.க., கொடி காட்டியதற்காக, தொண்டர்கள் பிள்ளையார் சுழி போட்டதாக சொன்னேன். எங்கள் கட்சி கூட்டத்திற்கு விருந்தாளி போல வந்தவர்கள், த.வெ.க., தொண்டர்கள். அவர்களை வேண்டாம் என சொல்ல முடியுமா? - பழனிசாமி பொதுச்செயலர் அ.தி.மு.க., “துரோகிகள் எல்லாம் தற்போது அடையாளம் காணப்பட்டு விட்டனர். களைகள் அகற்றப்பட்டு, அ.தி.மு.க., செழித்து வளரும்,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: நான் விரக்தியின் உச்சத்தில் உள்ளதாகவும், தினமும் பொய்யான அறிக்கையை வெளியிட்டு வருவதாகவும், அவதுாறு கருத்துக்களை கூறி வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான், அக்., 21ல் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட கொள்முதல் நிலையங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்தேன். அங்கு கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள், 15 நாட்களாக கொள்முதல் செய்யப்படாமல் இருந்தன. தினசரி, 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டன. இதை எடுத்துக் கூறினால், அவதுாறு பரப்புவதாக முதல்வர் கூறுகிறார். உணவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில், 2022- - 23ம் ஆண்டு 29.48 லட்சம் டன்; 2023 - -24-ல் 29.46 லட்சம்; 2024 - -25ல் 28.26 லட்சம்; 2025-- 26-ல் 28.30 லட்சம் டன் என, மொத்தம் 1 கோடியே 15 லட்சத்து, 49,000 டன் நெல் மட்டுமே, தி.மு.க., ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆண்டுதோறும், 42.5 லட்சம் டன் கொள்முதல் செய்துள்ளதாக, முதல்வர் பொய்யான தகவலை கூறி வருகிறார். சென்னையில், பள்ளிக்கரணை சதுப்புநிலம் அருகேயுள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. வரும் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என்ற பயத்தில், வாக்காளர் திருத்தப்பணி மேற்கொள்ளக்கூடாது என, தி.மு.க., எதிர்க்கிறது. செங்கோட்டையன், தினகரன், பன்னீர்செல்வம் ஒன்று சேர்ந்து பேசியது, ஏற்கனவே அவர்கள் போட்ட திட்டம் தான். இப்படிப்பட்டவர்களின் துரோகத்தால் தான், கடந்த முறை அ.தி.மு.க., வீழ்த்தப்பட்டது. செங்கோட்டையன் குழி பறித்ததால் தான், அந்தியூர் தொகுதியில், அ.தி.மு.க., ஜெயிக்க முடியவில்லை. மூவரும் ஒன்றிணைவதால், அ.தி.மு.க.,வுக்கு எந்த பலவீனமும் இல்லை. செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில், எந்த தயக்கமும் இல்லை. மூவரும் ஒன்றிணைந்து பேசியது எதற்கும் உதவாது. தி.மு.க.,வின் 'பி டீம்' ஆக செயல்படுகின்றனர். துரோகிகள் எல்லாம் தற்போது அடையாளம் காணப்பட்டு விட்டனர். எனவே களைகள் அகற்றப்பட்டு, அ.தி.மு.க., செழித்து வளரும். இவ்வாறு அவர் கூறினார். எல்லாமே 'சர்ப்ரைஸ்' சசிகலா 'சஸ்பென்ஸ்' “நான் என்ன செய்கிறேன் என பொறுத்திருந்து பாருங்கள். 'சர்ப்பைரஸ்' ஆக எல்லாமே நடக்கும். அ.தி.மு.க., அட்சியை மீண்டும் கொண்டு வருவேன்,” என, சசிகலா கூறினார். அவர் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும், நான் எல்லாரையும் சந்திப்பேன். எத்தனை பேரை கட்சியில் இருந்து நீக்க முடியும்? அ.தி.மு.க., பழைய நிலைக்கு திரும்பும். யார் துரோகி என அ.தி.மு.க., தொண்டர்களிடம் கேட்டால் தெரியும். அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, இது இரண்டாவது முறை நடக்கும் பிரச்னை. நிச்சயம் சரிசெய்வேன். கட்சியை ஒன்றிணைக்கும் வேலையை, ஏற்கனவே தொடங்கி விட்டேன். அரசியலில் எடுத்தோம், கவிழ்த்தோம் என செய்வது, என் பழக்கம் இல்லை. என்னைப் பற்றி, 'சீனியர் லீடர்'களுக்கு தெரியும். ஜெயலலிதாவை திட்டியவர்களை கூட, நாங்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகராகவும் ஆக்கி உள்ளோம். என், 'மூவ்' தனியாக தான் இருக்கும்; ஆனால், அது தனியாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Natchimuthu Chithiraisamy
அக் 31, 2025 20:13

செங்கோட்டையான் மானம் போனாலும் பராயில்லை சசிகலா காசு கைக்கு வந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் கேட்டு பார்க்கலாம் அதற்குள் அடிப்படை உறுப்பினர் போச்சு. இனி கோபியில் யாரும் மதிக்க மாட்டார்கள் பெரியகுளம் போய்தான் செட்டில் ஆகா வேண்டும் வாரிசுகளுக்கும் அவமானம்.


Natchimuthu Chithiraisamy
அக் 31, 2025 20:07

பன்னீர் சசிகலாவை எதிர்த்து ஜெ சமாதி சென்று அதனால் சசிகலா கூவத்தூர் சென்று, யார் முதல்வர் என்கிற சண்டையில் எடப்பாடியாரை நியமித்து சசிகலாவும் தினகரனும் பிரிந்து, RK நகர் மூலம் முதல்வர் ஆக துடித்து அதையும் இழந்து தினகரன் தனி கட்சி ஆரம்பித்து அந்த கட்சியை கலைக்காமல் அதிமுகவை ஒருங்கிணைக்க இப்போது செங்கோட்டையன். வலுவானது எடப்பாடியார் அதிமுகவா இல்லை பிரிந்து சேர்ந்த பன்னீர் சசிகலா இல்லை பிரிந்து சேந்த பன்னீர் தினகரா இல்லை பிரிந்து சேர்ந்த பன்னீர் செங்கோட்டையனா இல்லை பிரிந்து சேர்ந்த சசிகலா தினகரன இல்லை பிரிந்து சேர்ந்த சசிகலா செங்கோட்டையனா இல்லை தினகர் செங்கோட்டையனா உண்மையில் இவர்களிடம் பணம் இருக்கிறது. செய்தி களைகட்டுது.


SANKAR
அக் 31, 2025 19:51

appo ilavarasi divakaran etc thani katchiyaa?!


RAMESH KUMAR R V
அக் 31, 2025 17:42

தேர்தல் நெருங்க நெருங்க இதுபோல புது புது செய்திகள் வந்துகொண்டே இருக்கும். ஆனால் வருகின்ற தேர்தல் தமிழக மக்களின் குறிப்பாக இளம் தலைமுறையினர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல். மக்களே உஷார். தற்போது தமிழகத்தில் நடக்கின்ற செய்திகள் நாளுக்குநாள் பத்திரிக்கை வாயிலாக பார்க்கிறோம். சிந்தித்து செயல்படுங்கள் அதுவே புத்திசாலித்தனம். கரணம் தவறினால் மரணம்.


SUBBU,MADURAI
அக் 31, 2025 15:59

களையும் கட்டல முளையும் கட்டல இவனுக மூணு பேரும் சேர்ந்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டு கொண்டுள்ளனர். தினகரனும் சரி பன்னீர் செல்வமும் சரி கிழவியானதற்கு பின் கெட்டுப் போனவர்கள் ஆனால் இந்த செங்கோட்டையன்தான் பாவம் கிழவியாவதற்கு முன் கெட்டுப் போனவர் இவர்கள் மூவரும் திமுக கூட்டணியில் சேர்ந்து அதிமுகவை வீழ்த்த பாடுபடலாம் அதுதான் இவர்களுக்கு இருக்கும் ஒரே வழி...


ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 20:10

அதிமுகவை துண்டாக்கி வீழ்த்துவதற்கு தானே பாஜக முயற்சிக்கிறது , கூட்டணி என்ற போர்வையில்.


SUBRAMANIAN P
அக் 31, 2025 14:34

பிரிஞ்சுபோன இந்த நால்வர் அணியால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்கப் போவதில்லை.


Barakat Ali
அக் 31, 2025 13:51

அதிமுகவின் வாக்குகளைப் பிரித்து - அதாவது அதிமுகவுக்கான வாக்கு வங்கி - திமுகவுக்கு உதவ ஒன்று சேர்ந்துள்ளனர் .....


Haja Kuthubdeen
அக் 31, 2025 12:01

கருணாநிதியின் வாரிசு மிக்சர் பண்ணீர் இரண்டுநாள் முன்புதான் திருவாய் மலர்ந்திருந்தார் திமுக ஆட்சியை பிடிக்கும்னு.இந்த பெருச்சாலிய உள்ளே விட்டா விளங்கிடும்.செங்கிஸ்கு வரும் தடவை சீட் இல்லை என்பது உறுதி..இன்னும் ஏன் கட்சியை விட்டு தூக்காமல் தாமதம் செய்கிறார்கள்.


Anand
அக் 31, 2025 10:54

செங்கோட்டையனுக்கு கட்டம் சரியில்லை..


duruvasar
அக் 31, 2025 10:38

3 என்ன 30 பெட்டிகள் ஏற்கனவே போய் சேர்ந்திருக்கும்.


முக்கிய வீடியோ