உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாயில் வடை சுடும் தி.மு.க., எடுத்த நடவடிக்கை என்ன? அண்ணாமலை கேள்வி

வாயில் வடை சுடும் தி.மு.க., எடுத்த நடவடிக்கை என்ன? அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருப்பதைத் தவிர, புதிய தமிழ் பல்கலைக்கழகங்கள் அமைக்க என்ன முயற்சி எடுத்தது தி.மு.க.,?'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியின் மீதான அதிருப்தியையும், கோபத்தையும் தமிழக மக்கள் வெளிப்படையாகக் காட்டும் போதெல்லாம், போலி தமிழ்ப்பற்று நாடகமாடி, பிரிவினையைத் தூண்டுவது தி.மு.க.,வின் ஆதிகால வழக்கம். தி.மு.க.,வின் தொடர்ச்சியான ஹிந்து மத விரோதப் போக்கை எதிர்த்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய பல லட்சம் தமிழக மக்களின் உணர்வு, தி.மு.க.,வை ஆட்டம் காண வைத்திருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d8cb95yz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உடனே சில வாடகை வாயர்களைத் தூண்டிவிட்டு, ஏற்கனவே பல முறை விளக்கமளித்த மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து பொய்யான பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அரைத்த மாவையே நீங்கள் மீண்டும், மீண்டும் அரைப்பதனால், இதோ மொழி வாரியாக வழங்கப்படும் நிதி தொடர்பாக நான் விளக்கமளித்த காணொளி உங்கள் பார்வைக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே. தமிழகத்தில் பல முறை ஆட்சியில் இருந்தும், மத்தியில் பசையான அமைச்சர் பதவிகளை வகித்தும், அப்பா, மகன், பேரன் என தலைமுறை தலைமுறையாக தமிழ்ப்பற்று என்று வெறும் வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருப்பதைத் தவிர, கேரளா மாநிலத்திலோ, கர்நாடகாவிலோ, ஆந்திர மாநிலத்திலோ, புதிய தமிழ் பல்கலைக்கழகங்கள் அமைக்க என்ன முயற்சி எடுத்தது திமுக? யார் உங்களைத் தடுத்தார்கள்? நீங்கள் மத்திய அரசில், அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு, உலகம் போற்றும் ஊழல்களைச் செய்து கொண்டிருந்த 2006 முதல் 2014ம் ஆண்டு வரை, 8 ஆண்டுகளில், நீங்கள் அங்கம் வகித்த மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ரூ.675.36 கோடி. தமிழுக்கு வெறும் ரூ.75.05 கோடி மட்டுமே. அப்போது எங்கு சென்றது இந்த வாடகை வாய்கள்? கடந்த ஆண்டு, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.11.68 கோடி ரூபாய் செலவிட்டதே. அது எதற்காக என்று கூற முடியுமா? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Ramesh Sargam
ஜூன் 24, 2025 22:03

வாயில் வடை சுட்டாலும் பரவாயில்லையே. இந்த திருட்டு திமுகவினர் மற்றவன் வாயில் உள்ள வடையை கொத்திட்டுபோகும் திருட்டு காகங்கள்.


திகழ்ஓவியன்
ஜூன் 24, 2025 22:19

மோடி 15L கொடுக்க முடியும் என்றது , கோவை லூலு மால் ஒரு செங்கல் வைக்க முடியாது , அறிவாலய செங்கல் உறுவுவேன் என்று சொன்னது கடைசியில் உன் தலைவர் பதவியை உருவி விட்டார்கலே பாவம் ரொம்ப பேசினா இந்த நடு தெரு நிலை தான்


அப்பாவி
ஜூன் 24, 2025 21:03

15 லட்சத்துக்கு வடை சுட்டவங்களே மூணு முறை ஜெயிச்சாச்சு.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 25, 2025 14:18

திமுகவினருக்கு துணிவிருந்தால் மோடி பதினைந்து லட்சம் தருகிறேன் என்ற செய்தியையோ ...காணொளியையோ வெளியிடுங்கள் ... நிலமில்லாதோருக்கு இரண்டரை ஏக்கர் நிலம் , நீட் தேர்வு ரத்து இது இரண்டும் போதாதா ? , இது திமுக வாயால் சுட்ட வடை மட்டுமல்ல பாயசம் , அப்பளம் .பொரியல் ..கூட்டு பொரியல் ...


Thirumal s S
ஜூன் 24, 2025 20:22

இந்த உலகில் வாயில் வடை சுட மோதி மட்டுமே


Pandianpillai Pandi
ஜூன் 24, 2025 20:08

பானிபூரி வாயர்கள் வடை யை பற்றி பேசுவதா? தி மு க தமிழுக்காக உயிரை தியாகம் செய்தவர்கள். நீங்கள் சொல்லும் ஆந்திரா, கர்நாடகா மக்களின் தாய்மொழியே காணல் நீராய் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ்மொழியை செம்மொழியாக்கியது திமுக. வேல் கொண்டு வேடம் போடும் கூட்டத்துக்கு தமிழை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. கலைஞரின் பேனா என்ற ஆயுதம் ஆரியர்களிடம் இருந்து தமிழர்களை தமிழை காப்பாற்றியிருக்கிறது. செந்தமிழ்மொழி அந்தஸ்ததே தி மு க வின் அஸ்திரமானது. இன்று பல நாட்டில் தமிழ் இருக்கைகள் இருக்கிறது. சீனர்கள் தமிழை கற்கிறார்கள். தமிழ் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் தெரிந்தால்தான் தமிழ்நாட்டில் அரசு வேலை என்ற நிலைப்பாட்டை கொண்டுவந்தவர் எங்கள் தலைவர் முதல்வர். வேடம் போடுபவர்கலெல்லாம் தி மு க விற்கு பாடம் சொல்ல தேவையில்லை.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 25, 2025 14:26

திமுகவினர் தமிழுக்காக உயிரை தியாகம் செய்தவர்களா ? தன் கட்சியினர் மத்திய அரசில் பதவி வகிப்பதற்காக ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை கொல்ல துணை போனவர்கள் ....அதற்கு பரிசாக ராஜபக்சவிடம் பெட்டி வாங்கியவர்கள் .. கலைஞரின் பேனா ஆயுதம் கலைஞர் குடும்பத்திற்கு வருமானத்தை பெருக்கியது .உடன் பிறப்புகளுக்கு உருட்டுகளை உருட்டியது . தமிழ் பற்றாளர் கலைஞர் தமிழ் பல்கலை கழகம் அமைத்திருக்க வேண்டியதுதானே ..ஏன் எம்ஜிஆர் ஆட்சிக்கு வரும் வரை காத்திருந்தார் ? ... ஆரியர்கள் கதை ஜி யு போப்பினால் விடப்பட்ட டுபாக்கூர் கதை என்று தெரியாதா ?


ramesh
ஜூன் 24, 2025 17:45

அயோத்திராமர் கோவிலை வைத்து அரசியல் பண்ணினீர்கள் .நாடாளுமன்ற தேர்தலில் .அயோத்தி தொகுதி தோல்வி . மதுரையில் முருகனை வைத்து அரசியல் செய்கிறீர்கள் . இது கூடவா கடவுள் முருகனுக்கு தெரியாது .உண்மையான பக்திக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாதவரா முருக கடவுள் . வரும் தேர்தலில் அங்கும் உங்கள் கூட்டணி படு தோல்வி அடையத்தான் போகிறது .


vivek
ஜூன் 24, 2025 21:31

விடிஞ்சாசு ரமேஷு.....எப்பவுமே கனவு தானா....டாஸ்மாக் கிளம்பு


P. SRINIVASAN
ஜூன் 24, 2025 17:09

அண்ணாமலைக்கு சமமா யாராவது வட சுட முடியுமா.


கொல்ட்டி பற்றாளன், கட்டுமரநகர், ஓங்கோல்
ஜூன் 24, 2025 17:15

உனக்கு நிகராக அறிவாலயத்தில் அடைப்பு எடுக்க யாரலும் முடியாது.


Kjp
ஜூன் 24, 2025 18:46

அவர் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியவில்லை.புள்ளி விவரத்தோடு சொல்லி இருக்கிறார்.


babu
ஜூன் 24, 2025 16:22

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழுக்கு ஒதுக்கிய நிதியை கூட பாஜக அரசு ஒதுக்கவில்லை யே என்பதுதான் கேள்வி. தமிழுக்கு13 கோடி ஒதுக்கிய வர்கள் 75 கோடி ஒதுக்கியவர்களை கேள்வி கேட்க சொல்லுவது வியப்பாக இல்லை..... பாஜக அரசு தமிழுக்கு 80 கோடி ஒதுக்கீடு செய்து இருந்தால் இந்த கேள்வியை அண்ணாமலை கேட்பதில் நியாயம் இருக்கிறது.


ஆரூர் ரங்
ஜூன் 24, 2025 16:52

தனக்கே ஒதுக்கும் ஆட்சி இருக்கும் போது எவ்வளவு ஒதுக்கி என்ன பயன்? இருக்கும் ஒரே தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கூட மோசமான நிர்வாகம் .


vivek
ஜூன் 24, 2025 16:56

தமிழ்நாட்டில் தமிழ் தேர்வில் பல மாணவர்கள் தோல்வி...தெரியுமா பாபு


vivek
ஜூன் 24, 2025 16:57

ஓ 80 கோடியும் ஆட்டை போட திட்டமா பாபு


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 24, 2025 17:33

மத்திய அரசு தமிழுக்கு கடந்த பத்து வருடங்களாக வெறும் 13 கோடி தான் ஒதுக்கீடு செய்தது என்பதற்கான தரவுகள் இருக்கிறதா ??? யார் கேள்வி கேட்க போகிறார்கள் என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று வாயில் வந்ததை பேசக்கூடாது.... மத்திய அரசு ஒதுக்கிய விவரங்கள் 2020-21 ரூ.12.00 கோடி 2021-22 ரூ.12.00 கோடி 2022-23 ரூ 12.00 கோடி 2023-24 ரூ 15.25 கோடி 2024-25 ரூ 14.30 கோடி....( நன்றி.கலாச்சார துறை ) கடந்த நான்கு வருடங்களில் மட்டும் ரூ 65.80 கோடி.... நிலமை இவ்வாறிருக்க நன்பர் எந்த தரவை வைத்து கருத்து பதிவிடுகிறார் என்று தெரியவில்லை....!!!


Thamizhan
ஜூன் 24, 2025 15:51

அதெல்லாம் இருக்கட்டும் ….D M K files னு பெட்டி பெட்டியாய் இறக்குனீங்களே … எதாவது ஆதாரம் நிரூபிச்சிங்களா ?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 24, 2025 16:46

ஆதாரங்களை கொடுத்து ஆளை புடிச்சு கொடுத்து ஜெயிலுக்குள்ளே தள்ளினால் ....ஒரு நாளைக்கு முப்பது லட்சம் நாற்பது லட்சம் செலவு செய்து வக்கீல்களை வைத்து நீதிபதிகளுக்கு கோடிகணக்கில் பணத்தை கொடுத்து தீர்ப்பை விலைக்கு வாங்கி வெளியே வந்து மறுபடியும் அமைச்சரானால் பாவம் தனியாக போராடும் அவர் உம்மை போன்றவர்களுக்கு எகத்தாளமாகத்தான் தோன்றும்.....!!!


ramesh
ஜூன் 24, 2025 17:38

என்ன ஆதாரத்தை வைத்து dmk files என்று குற்றம் சாட்டினீர்கள் அண்ணாமலை . நிரூபிக்க முடியாததால் நாம் சுட்டவடை வேகவில்லை என்று தெரிந்ததும் பிறகு filesகளே வெளிவரவில்லை


என்னத்த சொல்ல
ஜூன் 24, 2025 17:56

பிஜேபி இடம் இல்லாத பணமா


vivek
ஜூன் 24, 2025 21:33

குடுத்த ஆதாரம் பொய் என்று யாரும் கேசு போடலையே....


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 24, 2025 15:37

தமிழுக்கென்று தமிழ் பல்கலைக்கழகம் அமைத்தவர் எம்ஜிஆர் ...ஈழ தமிழ் மக்களுக்கு அள்ளிக்கொடுத்தவர் எம்ஜிஆர் அவர்தான் தமிழின தலைவர் ..கருணாநிதியும், திமுகவும் உண்மையில் வாயால் வடை சுட்டு விற்றவர்கள் .தனக்கு தானே தமிழின தலைவர் பட்டம் சூட்டி கொண்டவர் கருணாநிதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை