உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்கப் போவது யார் யார்?

ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்கப் போவது யார் யார்?

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், பா.ஜ., நாம் தமிழர் கட்சி ஆகியன களமிறங்க முடிவு செய்துள்ளன.காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் மறைவால், காலியான ஈரோடு சட்டசபைத் தொகுதிக்கு வரும் பிப்.,5 ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை 8 ம் தேதி நடக்கிறது. இதனையடுத்து, அங்கு போட்டியிடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q2cdc6ve&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டதால், மீண்டும் அக்கட்சியே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப, காங்கிரஸ் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். வேட்பாளர் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் எனக்கூறியுள்ளார்.பா.ஜ.,வும் இங்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நாளை( ஜன.,08) நடக்கும் அக்கட்சியின் மையக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, இத்தேர்தலிலும் களமிறங்க உள்ளது.அதேநேரத்தில் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., இத்தேர்தலில் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து இறுதி முடிவை பழனிசாமி எடுப்பார் என அக்கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை மாதம் நடந்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.அதேபோல் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிடவில்லை. இக்கட்சி ஏற்கனவே, 2026 சட்டசபை தேர்தலே இலக்கு என அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கம்யூ., ஆதரவு

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் மாநிலச்செயலர் பெ.சண்முகம் அறிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Rajasekar Jayaraman
ஜன 08, 2025 13:46

திருட்டு கொள்ளை கூட்டம் நிக்காது வன்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும்.


தமிழ் மைந்தன்
ஜன 07, 2025 22:43

கொலை கொள்ளை பெண்கள் பாலியல் கொடுமை ஊழல் டாஸ்மாக் வளர்ச்சி ஸ்டிக்கர் ஓட்டுதல் போன்றவற்றில் தமிழகம் பத்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முதலிடம்


karutthu kandhasamy
ஜன 07, 2025 21:54

வெற்றியோ தோல்வியோ அண்ணா தி மு க போட்டிடவேண்டும் வெற்றி தோல்வி என்பது சகஜம் அது நிரந்தரமில்லை ஆகையால் அண்ணா திமுக இவர்களுக்கு பயந்து போட்டியிடாமல் இருக்கக்கூடாது தி மு க சந்திக்காத வெற்றி தோல்வி இல்லை அதுபோல அண்ணா திமுக சந்திக்காத வெற்றி தோல்வியும் இல்லை ஓ பி எஸ் ஈ பிஎஸ் இருவரும் தங்களுடைய ஈகோ வை விட்டு விட்டு பி ஜே பி ப ம க தே முக மற்றும் பல கட்சிகளிமும் பேசி கூட்டணி அமைத்தால் அண்ணா தி மு க விற்கு வெற்றி உறுதி அண்ணா பல்கலை விஷயத்தை கையில் எடுங்கள் அதுவே ஆ தி மு க வெற்றிக்கு உதவும் வெற்றி உறுதி


S.Sivan Virudhunagar
ஜன 07, 2025 21:06

சந்தோசமான தைப்பொங்கல் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்குத்தான்.


murugan
ஜன 07, 2025 19:48

முரசொலியில் கட்டுரை எழுதத்தான் லாயக்கு. 4 வருடங்களில் 34000 வேலை வாய்ப்பு உருவாக்கியது ஒரு மாபெரும் சாதனை. தமிழ் நாட்டை குடிகார மாநிலமாகிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு உண்டு. வெறும் வெட்டி வாய் சவடால் ஆட்சி. தமிழகத்தை 8.5 லட்சம் கோடிக்கு கடனாளியாக்கிய ஆட்சி. வாங்கிய கடனை உருப்படியாக செலவு செய்யாமல் கேடுகெட்ட மானங்கெட்ட சிலருக்கு சிலைகள் வைப்பது போன்ற செயல்கள் செய்யும் ஆட்சி. மொத்தத்தில் எதற்கும் லாயக்கில்லாத ஆட்சி.


Dhurvesh
ஜன 07, 2025 19:21

அண்ணாமலை அவர்கள் நிற்பாரா


V வைகுண்டேஸ்வரன்
ஜன 07, 2025 19:13

இங்கே சீமான் வந்து மீண்டும், நான் அதிமுக வுக்காக நின்னேன், தேமுதிக வுக்காக உழைத்தேன். பாமக வுக்காக பேசினேன். அதனால எனக்கு போடுங்க என்று பேசுவார். ஆனால் பாஜக வுக்காக மும்பையில் போய் பேசினதை மட்டும் சொல்ல மாட்டார். ஈரோடு க்கே சம்பந்தம் இல்லாத, அவரோட கட்சியினரே கேள்விப்பட்டிராத ஒருவரை கொண்டு வந்து வேட்பாளராக நிறுத்துவார். செம காமெடி யா இருக்கும்.


veera
ஜன 07, 2025 23:09

இதுல என்ன காமெடி ...


Balasubramanian
ஜன 07, 2025 18:30

ஒரு மாதம் சூப்பர் சாப்பாடு கல்யாண மண்டபங்களில், ஏனைய இடங்களில் உண்டோ இல்லையோ, பொங்கல் தொகுப்புடன் துட்டு நிச்சயம், அதுவும் கட்சிக்கு ஒன்று, ஒவ்வொரு வாக்காளருக்கு ஒவ்வொன்று!


சம்பா
ஜன 07, 2025 18:21

வெகு குடும்பத்த மெட்டை அடிச்சுடுவார் சீமான்


SRIRAMA ANU
ஜன 07, 2025 18:01

சமீபகாலமாக தமிழகம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து பல்வேறு முதலீடுகளையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக ஐடி துறையில் வளர்ச்சி ஆனது கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக தொழில்துறையில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகின்றன. எனவே இந்த முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. இந்த நிலையில், தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அது எதில் தெரியுமா? ஆம், நாட்டிலேயே அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் 2023-24 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக பல ஆண்டுகளாக முன்னிலையில் இருந்து வந்த குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை விட தமிழ்நாடு சிறு, குறு நடுத்தர தொழில்களால் படித்த இளைஞர்களுக்கு தமிழ்நாடு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை தாண்டி தமிழ்நாட்டில் மட்டும் 39,699 சிறு, குறு தொழில்கள் உள்ள நிலையில், அதன் மூலம் 4 லட்சத்து 81 ஆயிரத்து 807 தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தமிழ்நாடு 8 லட்சத்து 42 ஆயிரத்து 720 மனித உழைப்பு நாட்களை கொண்டு ஒட்டுமொத்த அளவில் நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, சராசரியாக தமிழ்நாட்டில் ஒரு தொழிலாளிக்கு 1.75 மனித உழைப்பு நாட்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. Powered By Nitin Gadkari Announced Tamil Nadus Major Road And Bridge Schemes | Oneindia Tamil HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. இனி நோ டென்ஷன்.. EMI குறையும்.. இந்த பட்டியலில் மகாராஷ்டிரா ஒரு தொழிலாளிக்கு சராசரியாக 1.13 மனித உழைப்பு நாள்களுக்கும். குஜராத் ஒரு தொழிலாளிக்கு சராசரியாக 1.37 மனித உழைப்பு நாள்களுக்கும் மட்டுமே வேலை வாய்ப்புகளை அளிப்பதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. விவசாயத்திலிருந்து மாறிய பெரும்பாலான தொழிலாளர்களை சேவைத் துறை இழுத்துள்ளது. என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2020-21 தொற்றுநோய் பரவிய காலகட்டத்தில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், கட்டுமானம், சுகாதாரம் மற்றும் சமூக நலன் ஆகிய அனைத்தும் வேலைவாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 45000 ஏக்கர் ரெடி.. இந்த 4 மாவட்டத்திற்கு வரும் மெகா திட்டம்.. தமிழ்நாடு அரசு அதிரடி.. தமிழக அரசு தமிழ்நாட்டு மக்கள் வளர்ச்சிக்காகவும், படித்த இளைஞர்கள் நலனுக்காகவும் எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல், பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களுக்கு நன்மை அளிக்கும் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வருகிறது. இதனால் தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது. எனவேதான் தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Source : ர்.பி.இ


Sakthi,sivagangai
ஜன 07, 2025 18:44

மண்டபத்துல யாரோ எழுதிக் கொடுத்த ஓலையை இப்படி முட்டுக் கொடுத்து வாசிப்பது உபிஸ்களுக்கு கைவந்த கலை. திராவிட மாடல் அரசை பற்றி தமிழக மக்கள் தூற்றுவது தெரியுமா?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 07, 2025 18:53

காபி பேஸ்ட் பெஸ்ட்டா இருக்குன்னா .... ரொம்ப சந்தோசம் போங்கோ ..... ரெண்டு தடவை பண்ணிட்டீங்க .... உங்க பிரச்சாரத்தால திமுக கூட்டணிக்கு 233/234 உறுதியாயிடுத்து .... ஒண்ணே ஒன்ணு எடப்பாடி பழனிச்சாமிக்கு விட்டுக் கொடுத்துருவோம் ...


Dhurvesh
ஜன 07, 2025 19:21

ஒதுக்க மாட்டோம் திராவிட மாடல் வேஸ்ட் என்போம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை