உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை ஜனாதிபதி வேட்பாளராக சிதம்பரத்தை நிறுத்தாதது ஏன்: தமிழிசை கேள்வி

துணை ஜனாதிபதி வேட்பாளராக சிதம்பரத்தை நிறுத்தாதது ஏன்: தமிழிசை கேள்வி

கோவை; ''துணை ஜனாதிபதி தேர்தலில், தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை தி.மு.க., ஆதரிக்காதது ஏன்?'' என, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பினார். கோவையில் அவர் அளித்த பேட்டி: ஆணவக்கொலையை தடுக்க, பிற மாநிலங்களில் சட்டங்கள் இருக்கும்போது, தி.மு.க., அரசு ஏன் சட்டம் கொண்டு வரவில்லை? ஆணவக் கொலையை தடுக்குமாறு முதல்வர் ஸ்டாலினிடம், தி.மு.க., கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்துங்கள். தமிழகத்தில் ஹிந்துக்களை துளி கூட மதிக்காத முதல்வர் ஸ்டாலின், கேரளாவில் கம்யூ., கட்சியினர் அழைத்ததும், அய்யப்பன் கோவில் விழாவுக்கு புறப்படுகிறார். ஹிந்தியை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு, பீஹாரில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் பாத யாத்திரையில் பங்கேற்க போகிறார். அங்கும், 'ஹிந்தி எதிர்ப்பு' பனியனை அணிந்து கொண்டு செல்லுங்கள். துணை ஜனாதிபதி வேட்பாளராக, ஒரு தமிழரை, பிற மாநிலத்தவர் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், 'தமிழ், தமிழ்' என பேசிக்கொண்டே, தமிழன் பிரதமராகக் கூடாது; ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகக்கூடாது என, தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். துணை ஜனாதிபதி பதவிக்கு சி.பி.ராதாகிருஷ்ணனை ஏன் ஆதரிக்கவில்லை? தமிழரை எதிர்த்து, ஏன் ஒரு தமிழ் வேட்பாளரை அறிவிக்கவில்லை? தமிழரான ப.சிதம்பரத்தையோ, திருச்சி சிவாவையோ ஏன் நிறுத்தவில்லை? தமிழரை வேட்பாளராக நிறுத்துவதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்ததால், தமிழரை வேட்பாளராக 'இண்டி' கூட்டணியினர் அறிவிக்கவில்லை. அப்படியென்றால், மம்தாவின் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை, 'இண்டி' கூட்டணி தலைவர்கள் குறிப்பாக ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா? இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

subramanian
ஆக 27, 2025 20:59

ஒருவேளை அவர் வெற்றிவாய்ப்பை பற்றி கவலை கொண்டாரோ என்னவோ. அவர் தான் பதில் சொல்லவேண்டும்


Ramesh Kumar
ஆக 27, 2025 19:13

பாவம் அக்கா. ஒரிசா வில் ஒன்றிய பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தமிழர்களை இழிவு படுத்தி பேசிய போது வராத அக்கறை இப்போது தான் வந்து இருக்கு.


Gajageswari
ஆக 27, 2025 17:45

இப்போது உள்ள சட்டங்கள் நம்மை தண்டிக்காது எதற்கு எடுத்தாலும் சட்டம் மட்டும் போடுங்கள். அதை நடைமுறை படுத்த தெரியாது/செய்யாத நிலை. தவறாக பயன்படுத்த மட்டுமே தெரியும்


நாடோடி
ஆக 26, 2025 07:39

நீங்களும் இரு மாநில கவர்னராக பணிபுரிந்தீர்களே உங்களை ஏன் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்லை


Mahendran Puru
ஆக 26, 2025 19:08

அங்கே சிரிப்பு போலீசுக்கு இடமில்லை. அதனால் இவர் பெயரை பரிசீலனை செய்யவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை