உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சம்பளப் பணம் விடுவிக்காதது ஏன்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

சம்பளப் பணம் விடுவிக்காதது ஏன்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை?' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, ரத்த ஓட்டமாக யு.பி.ஏ., அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கி இருக்கிறது. இரக்கமற்ற பா.ஜ., அரசு.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=za38gwov&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உங்களுக்கு வேண்டப்பட்ட கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா? தமிழகம் எங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கட்சியினரும், ஏழை மக்களும் எழுப்பும் குரல் டில்லியை எட்டட்டும்! அரசின் மனம் இரங்கட்டும்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 88 )

Chandrasekaran Balasubramaniam
ஏப் 06, 2025 08:43

இதே நிலைமை தான் தங்கள் மூலம் எங்களுக்கும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் பஞ்சப்படி


Harindra Prasad R
ஏப் 04, 2025 19:51

விவசாயத்தை அழிக்கும் 100 வேலை எதற்கு தலீவரே ?


Barakat Ali
மார் 30, 2025 21:33

காந்தி மதுவை வெறுத்தவர் ........ இன்று இருந்திருந்தால் மதுவால் வரும் வருமானத்தைக் கொள்ளைக்குச் சமம் என்பார் .... இது துக்ளக்காருக்குத் தெரியுமா ????


Barakat Ali
மார் 30, 2025 21:32

டாஸ்மாக் வருமானத்தில் கொடு ...... ஆலயங்களை விட்டு வெளியேறு .....


பாரத புதல்வன்
மார் 29, 2025 19:41

முறைகேட்டில் அதிக அளவில் நடைபெறுவது 100நாள் திட்டம், வேலைக்கு போகாத நிலையில் சம்பளம், அதில் அனைவருக்கும் பங்கு, இதனால் விவசாயம் செய்ய ஆட்கள் பற்றாக்குறை, விவசாயம் அழிந்து போகும் நிலை, இது விவசாய நிலங்களை கூறு போட்டு விற்கும் தீ மு க காரனுக்கு எப்படி தெரியும்.... அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுகளை நடத்தி அதன் பின் விவசாயம் செய்யும் நிலங்களிலும் இவர்கள் வேலை செய்ய வேண்டும், நிலத்தின் உரிமையாளர் கண்காணிக்க வேண்டும் . சம்பளத்தை 30 சதவிகிதம் விவசாயிகள்,70 சதவிகிதம் அரசு வழங்க வேண்டும். இதனால் விவசாயம் மேம்படும்.


Minimole P C
மார் 31, 2025 09:03

Well said. In our area, generally a man who does irrigation to field covers 10 to 15 acres at the maximum. But now due to paucity of man power he looks after 40 to 50 acres. He does half job due to his time availablity. Quality, production etc are affected by this. Govt has to scrap the tem and make the payment directly to the benefiaries accounts and they need not come to work drama. By this they may go to other work and earn besides help the production/service.


Dharmavaan
மார் 29, 2025 18:51

விவசாயத்தை அழிக்க வந்த திட்டம் நடுவில் ப்ரோக்கர்கள் கமிஷன் அடிக்க வகை செய்கிறது வேலை ஒன்றும் நடப்பதில்லை.இதை ஏன் நேரடியாக ஆதார் எண்ணுடன் சேர்த்து அவரவர் கணக்கில் செலுத்தலாமே


Nagarajan S
மார் 29, 2025 18:05

100 நாள் வேலை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதன் ஒருபகுதியாக விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் பகுதியில் 35 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் உள் தணிக்கைக்குழு, மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து பல்வேறு மாநிலங்களில் ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்து உள்ளது. இதற்கு தீர்வுகாணாமல் மத்திய அரசு எப்படி நிதியை விடுவிக்கும் ?


kumarkv
மார் 29, 2025 17:52

ஞானசேகரன் கேட்டால் கொடுப்பான்


மாலதி, கோவை
மார் 29, 2025 17:27

உடலை வருத்தி வெயிலில் வேலை செய்யுறாங்க நீ பார்த்த ..... காச வாங்கிட்டு டீ வடை சாப்பிட்டு நிழலில் படுத்து தூங்கிவிட்டு வீடு திரும்புவார்கள் எங்களை சுற்றி உள்ள 30 கிராமங்களில்


kalyan
மார் 30, 2025 23:00

காசை வாங்கி வீடு திரும்பினால் தேவலை. நேராக போவது டாஸ்மாக் கடைகளுக்கு. காசில் பாட்டில் பாட்டில் ஆக குடித்துவிட்டு வீடு வந்து மனைவி மக்களை அடித்து துன்புறுத்துவது . இது தான் நூறுநாள் வேலை ஏய்ப்புத்திட்டம்


Madras Madra
மார் 29, 2025 17:16

இவுரு வாங்கிய பணத்துக்கு சரியா கணக்கு கொடுக்கல அதான் நிதி வர மாட்டேங்குது


புதிய வீடியோ