உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆணவ படுகொலைகளை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?

ஆணவ படுகொலைகளை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: திருநெல்வேலியில் ஆணவக் கொலை அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. தென் மாவட்டங்கள் மட்டுமல்ல; வட, மேற்கு மாவட்டங்களிலும் ஜாதிவாத அரசியல் பரவி வருகிறது. ஜாதிவாத சக்திகளும், மதவாத சக்திகளும் ஜாதி பெருமிதத்தை அரசியலாக உயர்த்தி பிடிக்கின்றன; ஜாதி பெருமிதத்தின் அடிப்படையில் நடக்கும் கொலைகளை ஊக்கப் படுத்தி வருகின்றன. இதற்கு, ஜாதிவாத சக்திகளும், மதவாத சக்திகளும் திட்டமிட்டு பரப்புகிற ஜாதி பெருமை அரசியல் தான் முக்கிய காரணம். இதை தடுப்பதற்கு, தேசிய அளவில் ஆணவக் கொலைகள் தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். ஆனால், தமிழகம் உட்பட பல மாநில அரசுகள், ஆணவக் கொலை தடுப்பு சட்ட கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு, ஆணவக் கொலைகள் தடுப்பு சட்டத்தை இயற்றலாமா என மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கருத்து சொல்லாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், ஆணவக் கொலை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களையும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றவில்லை. இ து தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயன்றோம். அவரை சந்திக்க முடியாததால், துறையில் மனு கொடுத்துள்ளோம். எஸ்.சி., - பி.சி., எனும் அடிப் படையில் ஆணவக் கொலைகள் நடப்பதில்லை. ஓ.பி.சி., சமூகத்தினரிடையே கூட ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்தாலும் கொலைகள் நடக்கின்றன. இது ஒரு சமூக பிரச்னை; இதை தடுக்க, தேசிய அளவிலான சட்டம் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

surya krishna
ஆக 01, 2025 22:46

உம்மை போல் உள்ள ஜால்ராகளால் தான்


Bala
ஆக 01, 2025 18:27

Intha aalu thaan poye first pro pannanum atha vitutu saavukirakki pola pesuraru


B N VISWANATHAN
ஆக 01, 2025 18:17

தேசிய அளவில் சட்டம் வருவது இருக்கட்டும். உங்க திராவிட மாடல் தலைவர் என்ன செய்ய போறாங்க


A.Gomathinayagam
ஆக 01, 2025 14:09

ஒரு காலத்தில் மேல்தட்டு சாதி என்று சொல்ல பட்ட மக்கள் மத்தியில் இந்த ஆணவ கொலைகள் நடப்பதாக தெரிய வில்லை .


SUBRAMANIAN P
ஆக 01, 2025 13:41

பொத்தம்பொதுவா சொல்லாம இந்த ஆணவக்கொலைகளை எந்தஜாதிக்காரங்க செய்யுறாங்கன்னு திருமா சொல்ல தைரியம் இருக்கா..


Kayal Karpagavalli
ஆக 01, 2025 10:48

1.Can only encourage " no e certificate " trending generation. 2."No e matrimony" facility. 3.Agreement between both families, both individuals, siblings of both families for acknowledgement from families, from each other, from both family siblings and then proceed. 4.Personality development course . 5.Life pitholes course. 6.Good parenting course.


Kanns
ஆக 01, 2025 10:07

Cheap VoteHungry Divisive SuutcaseParty Politicians& NewsHungry BiasedMedia. To Reduce these, Simply Nip in the BudSimply ARREST Without Bail All SexHungry Girls& Boys even school girls etc Doing & Nuisances in Various Places No Parents incl SCs Likes Such SexHungry Childrens Misusing Loves& Marriages


Dv Nanru
ஆக 01, 2025 08:20

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மட்டும் இல்ல திருமாவளவன் சிதம்பரம் தொகுதி பாராளமன்ற உறுப்பினரும் கூட அதோட இல்லாம திராவிடமாடலில் கூட்டணி வேற இப்போ நீ தான் சொல்லணும் ஏன் கண்டு கொள்ளவில்லை என்று ..


Kjp
ஆக 01, 2025 08:01

முதல்ல தமிழ்நாட்ட பத்தி மட்டும் பேசுங்க. மற்ற மாநிலத்தைப் பற்றி பேச அவர்கள் முதல்வர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கே ஏன் அந்த கவலை.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 01, 2025 06:38

பெரியார் ஜாதிகளை ஒழித்துவிட்டார் ..சமத்துவ சமதர்ம சமூக நீதி தமிழ் நாட்டில் நிலைநாட்டப்பட்டு விட்டது ..அப்புறம் எப்படி ஆணவ படுகொலை நடக்கும்... என்று தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது ..