உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துரைமுருகன் வழக்கு சென்னைக்கு மாற்றம் ஏன்? போலீசுக்கு ஐகோர்ட் கேள்வி

துரைமுருகன் வழக்கு சென்னைக்கு மாற்றம் ஏன்? போலீசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: 'அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை, வேலுார் நீதிமன்றத்தில் இருந்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்' என்று, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில், கடந்த 2006 -- 11ம் ஆண்டு பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர் துரைமுருகன். 2007- - 2009ம் ஆண்டு காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக, 1.40 கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோருக்கு எதிரான வழக்கில் இருந்து, இருவரையும் விடுவித்து, வேலுார் சிறப்பு நீதிமன்றம், 2017, ஜனவரியில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவியை விடுவித்த, வேலுார் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரித்து, ஆறு மாதங்களில் முடிக்கும்படி உத்தரவிட்டது.அதன்படி, இந்த வழக்கை, சென்னை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்தது. அப்போது, 'கடந்த 2024ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில், இந்த வழக்கின் விசாரணையை, வேலுார் சிறப்பு நீதிமன்றத்துக்கே மாற்ற வேண்டும்' என, அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், துரைமுருகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, துரைமுருகன் தரப்பில், 'சொத்து குவிப்பு வழக்கில், எங்களை விடுவித்ததை எதிர்த்த வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது' என தெரிவிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், இந்த மனுவுக்கு பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை நவ., 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், 'வேலுாரில் இருந்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றியது ஏன்' என, விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Anantharaman Srinivasan
அக் 23, 2025 15:21

துரைமுருகன் உயிருடன் இருக்கும் வரை கேஸ்சும் உயிருடன் இருக்கும்.


visu
அக் 23, 2025 15:08

வழக்கை விசாரித்து தீர்ப்பை சொல்வதை விட்டு அத ஏன் இங்க மாற்றினார்கள் என்று விசாரித்து கால தாமதம் செய்கிறார்கள் அதெற்குள் அவரே போய் சேர்ந்துடுவார் போல இருக்கு


sankar
அக் 23, 2025 14:12

சென்னை ஒரு நீதிபதி சொன்னார் ஞாபகம் இருக்குதா - முன்னூறு கார் சுத்திசுத்தி வந்தா நாங்க பயந்துவிடுவோமா - இதுதான் பதில்


SP
அக் 23, 2025 14:09

நடந்த வழக்கு, நடந்து கொண்டிருக்கின்ற வழக்கு,நடக்க போகின்ற வழக்கு மூன்றிலுமே அரசியல்வாதிகள் உத்தமர்கள் என்று ஒரே ஒரு தீர்ப்பின் மூலம் நடைமுறைக்கு கொண்டு வந்து விடலாம். அல்லது அரசியல்வாதிகள் மீது வழக்கு தொடுக்க முடியாது என்று சட்டத்தை திருத்தி விடலாம்.


Kudandhaiyaar
அக் 23, 2025 13:02

முதலில் நீதிமன்றம் ஆடு புலி ஆட்டம் ஆடுவதை நிறுத்தவேண்டும். யாராவது ஒரு அரசியல் புள்ளியை தமிழ்நாட்டில் கைது பண்ணி காண்பியுங்கள். அவ்வளவு ஏன் ஒரு சாதாரண தொண்டனை குற்றம் சாட்டி கைது பண்ண காவல் மற்றும் நீதி துறைக்கு துணிவு இருக்கிறதா. நீதி மன்றங்களின் காவல் துரையின் அதிகார உச்ச வரம்பு, ஹெல்மெட் போடாதவர்கள், மற்றும் விவாகரத்து பற்றிய வழக்குகள் மட்டுமே சாதிக்க முடியும். சும்மா வாங்குகிற சம்பளத்திற்கு இப்படி ஒரு அறிக்கை அப்படி ஒரு அறிக்கை , கால தாமதம் அவ்ளோ தான்


N S
அக் 23, 2025 11:01

திருவிளையாடல் வசனம் - "எவ்வளவு குறை உள்ளதோ அவ்வளவு பரிசை குறைத்து கொள்ளுங்களேன்" . அவருக்கு பேரன் மந்திரிசபையில் சேவை செய்ய எங்களால் ஆனா உதவி.


Anand
அக் 23, 2025 10:32

இவனுக்கு எந்த கோர்ட்டில் தண்டனை கொடுத்தாலும் உச்சநீதி மன்றம் ஜாமீன் கொடுத்துவிடும், அல்லது தக்க ஆதாரம் இல்லை என கூறி விடுதலை செய்துவிடும்.


sankaranarayanan
அக் 23, 2025 09:38

இவர்களே ஒரு வழக்கை சென்னையிலிருந்து வேலூருக்கு மாற்றிவிடுவார்கள் பிறகு வேலுாரில் இருந்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை ஒரு நீதிபதி சொன்னார் என்று மாற்றியது ஏன் என, இவர்களே கேட்பார்கள் இது இந்த வழக்கை கால தாமதம் செய்து கடைசியில் ஒன்றுமில்லை தள்ளுபடி என்றே கூறுவார்கள் இதுதானா இன்று நீதி மன்றகளின் நடப்பு மக்களுக்கே முன்பே எது நடக்குமென்று நன்றாக தெரியும்


Barakat Ali
அக் 23, 2025 09:09

இதுகூட தெரியாதா? நடிப்போ நடிப்பு .....


mdg mdg
அக் 23, 2025 08:26

லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முதுகெலும்பு இல்லைன்னு சொல்லிட்டீங்களே. அப்புறம் அவங்கள விளக்கம் கேட்டா என்ன சொல்லுவாங்க?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை