உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிருஷ்ணகிரியில் பெண் கூட்டு பலாத்காரம்: காமுகன் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

கிருஷ்ணகிரியில் பெண் கூட்டு பலாத்காரம்: காமுகன் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில், பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த போதை வாலிபர்கள், அவரிடமிருந்த நகை, பணத்தை பறித்த கொடூரமும் நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கில், இரு வாலிபர்களை போலீசார் கைது செய்த நிலையில், மேலும் இருவரில் ஒருவரை நேற்று சுட்டு பிடித்தனர். மற்றொருவரை கால் முறிந்த நிலையில், போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, கிருஷ்ணகிரி மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த, 19ம் தேதி மதியம், 3:00 மணியளவில், திருப்பத்துாரை சேர்ந்த, 40 வயது ஆண் ஒருவரும், 35 வயது பெண் ஒருவரும் வந்தனர். இருவரும் மலை உச்சிக்கு சென்ற போது, அங்கு நான்கு வாலிபர்கள் மது போதையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் மலைக்கு வந்த பெண்ணையும், உடன் வந்த நபரையும், கத்தி முனையில் சுற்றி வளைத்தனர். பின், அந்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கம்மல் உள்ளிட்டவற்றை பறித்தனர்.அத்துடன், நான்கு இளைஞர்களில் இருவர், பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மீதமுள்ள இருவரில், ஒருவர் அதை வீடியோ எடுத்தும், மற்றொருவர் பெண்ணுடன் வந்தவரை கத்தி முனையிலும் நிறுத்தி உள்ளார். பலாத்காரம் செய்தும், வெறி அடங்காத போதை வாலிபர்கள், பெண்ணிடம் இருந்த, 7,000 ரூபாய், அவரது வங்கி கணக்கில் இருந்து ஜிபே வாயிலாக, 7,000 ரூபாயை பறித்துள்ளனர். 'இது குறித்து வெளியில் சொன்னால் கொன்று விடுவோம். இதுவும் சரி; ஜெயிலும் சரி; எங்களுக்கு புதிதல்ல' என்று மிரட்டி அனுப்பி உள்ளனர்.

போலீசுக்கு தகவல்

இதையடுத்து, மலையில் இருந்து கீழே இறங்கி, அழுதபடி வந்த பெண்ணிடம், மலையடிவாரத்தில் இருந்த மக்கள் விசாரித்துள்ளனர். அப்போது, அழுதபடியே தனக்கு நேர்ந்த கொடுமையை கூறிய அப்பெண், போலீசில் புகார் எதுவும் அளிக்காமல் சென்றுள்ளார். அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அப்பகுதியில் விசாரித்தனர். அருகிலுள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்ததில், பெண்ணிடம் அத்துமீறல் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது கிருஷ்ணகிரி, பழையபேட்டையை சேர்ந்த சுரேஷ், 22, நாராயணன், 21, கலையரசன், 21, அபிஷேக், 20, என்பது தெரிய வந்தது. அவர்கள் மீது கிருஷ்ணகிரி டவுன், தாலுகா போலீஸ் ஸ்டேஷன்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.மலை உச்சியில் உள்ள மொபைல் டவர் வாயிலாக, சம்பவம் நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் போன் எண்ணை வைத்து, அப்பெண் திருப்பத்துாரை சேர்ந்தவர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

கைது

விசாரணையில், அவரது வங்கி கணக்கிலிருந்து, ஜிபேவில், 7,000 ரூபாயை சுரேஷ் பறித்ததும் ஆதாரபூர்வமாக தெரிந்தது. நடந்த விபரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்ட போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போனில் விசாரித்தனர். கிருஷ்ணகிரி போலீசார், திருப்பத்துார் சென்று அப்பெண்ணிடம் புகாரை பெற்று வழக்கும் பதிந்தனர்.போலீசார் தங்களை பற்றி விசாரிப்பதை அறிந்த போதை வாலிபர்கள் நால்வரும், இரு குழுக்களாக பிரிந்து தலைமறைவாகினர். நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி, பழையபேட்டை மலைப்பகுதியில் தலைமறைவாக இருந்த கலையரசன் மற்றும் அபிஷேக்கை, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவர், கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன்மலைகுட்டை பெருமாள் கோவில் பின்புறம் பதுங்கியிருப்பது தெரிந்தது. கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, எஸ்.ஐ., பிரபாகர், போலீசார் குமார், விஜயகுமார் உள்ளிட்டோர் நேற்று காலை, 11:00 மணிக்கு அவர்களை பிடிக்க சென்றனர்.

தடயம் சேகரிப்பு

போலீசார் வருவதை கண்ட சுரேஷ், நாராயணன் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீசார் குமார், விஜயகுமாரை தாக்கி விட்டு, தப்ப முயன்றனர். அப்போது, போலீசார் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்தனர். அதன் பிறகும், சுரேஷ், நாராயணன் தப்பி ஓடினர். சுரேஷின் வலது கால் முட்டியில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தப்பி ஓடிய நாராயணன், கல் தடுக்கி கீழே விழுந்ததில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.காயமடைந்த போலீஸ்காரர்கள் குமார், விஜயகுமார், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சுரேஷ், கால் முறிந்த நாராயணன் ஆகியோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கலையரசன், அபிஷேக் ஆகியோர் தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை, ஏ.டி.எஸ்.பி., சங்கர், டி.எஸ்.பி., முரளி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரித்தனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.எஸ்.பி., தங்கதுரை கூறுகையில், ''குற்றவாளிகள் தாங்கள் வைத்திருந்த கத்தியால், இரு போலீசாரை தாக்கி தப்ப முயன்றனர். போலீசார் தற்காப்புக்காக குற்றவாளிகளில் சுரேஷ் என்பவரை சுட்டு பிடித்தனர். நாராயணன் தப்ப முயன்ற போது, தவறி விழுந்ததில் கால் முறிந்தது,'' என்றார்.

2014ல் இதே சம்பவம்

கடந்த, 2014 ஜூலை, 18ல், கிருஷ்ணகிரியில் மூன்றாம் ஆண்டு படித்த கல்லுாரி மாணவி, தன் காதலனுடன், ராயக்கோட்டை சாலை போடம்பட்டு காட்டு பகுதிக்கு சென்றார். அப்போது, நான்கு பேர் கும்பல், காதலனை கட்டி வைத்து, அவர் கண் முன்னே மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தனர். அந்த சம்பவத்தை போலவே, தற்போது கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மலையில் கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

kesavan.C.P.
பிப் 23, 2025 17:25

தொடர் குற்றங்களுக்கு சட்டங்கள் , வக்கீல் கள் , நீதிபதிகள் தான் காரணம் .


kesavan.C.P.
பிப் 23, 2025 17:23

தொடர் குற்றவாளி களுக்கு ஜாமீன் மனு போடும் வக்கீல் , நிதிபதி , நீதிமன்றம் விசாரணை க்கும் தண்டனைக்கு மண் சட்டம் திருத்தம் கொண்டுவர வேண்டும் .


தமிழன்
பிப் 22, 2025 21:26

குறைந்தது 20 வருடம் கழித்து தீர்ப்பு வரும். இந்த கேடுகெட்ட ஈனப்பிறவிதான் குற்றவாளி என்று இவனுகளையெல்லாம் 2 கைகளை மேல் நோக்கி நீட்டி படுக்க வைத்து கைகளின் மேலே பெரிய பல் சக்கரத்தை வைத்து கைகளை உடைக்க வேண்டும் அதேபோல் 2 கால்களையும் பல் சக்கரத்தில் நசுக்கி எலும்புகளையும் உடைக்க வேண்டும் . தூக்கு தண்டனையெல்லாம் ஒரு தண்டனையே அல்ல இந்த ஈன ஜென்மமே தனக்கு ஏன் சாவு வர மாட்டேன் என்கிறது ஏன ஏங்குவான் இதை பார்த்தால் எந்த எச்சக்கல பண்ணாடையாவது பெண்கள் மீது கை வைப்பானா??


என்றும் இந்தியன்
பிப் 22, 2025 18:53

தவறு கண்டேன் சுட்டேன் இந்த முறையை பின்பற்றினால் குற்றங்கள் உடனே நின்று விடும்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 22, 2025 15:09

தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு வந்தனம், வாழ்த்துக்கள். ஒரு பெரிய சல்யூட். மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிறீர்கள். பிரமாதம். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உங்கள் அனைவரின் சிந்திக்கும் திறன், உழைப்பு அனைத்தையும் வணங்குகிறேன். பாராட்டுகிறேன். சிறப்பு. இதே போல என்றும் விரைந்து செயலாற்ற வாழ்த்துக்கள்.


Ramesh Sargam
பிப் 22, 2025 12:41

அவர்கள் மீது கிருஷ்ணகிரி டவுன், தாலுகா போலீஸ் ஸ்டேஷன்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதான் அவர்கள் தொடர்ந்து குற்றத்தில் ஈடுபட வைக்கிறது. ஏராளமான வழக்குகள் எப்படி நிலுவையில்? அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகள் துரிதகதியில் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைத்திருந்தால் இன்று அவர்கள் மேலும் மேலும் குற்றம் செய்துகொண்டிருப்பார்களா? இந்த அவலத்துக்கு யார் பொறுப்பு? பொறுப்புக்கு முக்கிய காரணமே காவல்துறை மற்றும் நீதித்துறையினர்தான்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 22, 2025 16:54

அவனவன் ஏதாவது குற்றம் செய்து கொண்டே இருப்பான், அதுக்கு முக்கிய காரணமே காவல்துறை மற்றும் நீதித்துறையினர் தானா?? நல்ல கதையா இருக்கிறதே? ஒரு பள்ளி மாணவன் திரும்ப திரும்ப ஒரு வகுப்பில் பெயிலாகிக் கொண்டே இருக்கிறான் என்றால் ஆசிரியர்களா காரணம்? பொறுப்பு? அந்த நாயி படிக்காம ஊர் சுத்திண்டிருக்கு. ஆசிரியர்கள் என்ன செய்ய? அதே மாதிரி தான், இந்த நாயி திருந்தாம தப்பு பண்ணிண்டே இருக்கு...


Bahurudeen Ali Ahamed
பிப் 22, 2025 11:27

குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் எப்படி சுதந்திரமாக சுற்றுகிறார்கள், கடுமையான தண்டனைகள்தான் குற்றங்களை குறைக்க வழிவகை செய்யும், சுட்டு பிடித்த காவலர்களுக்கு வாழ்த்துக்கள்


Chandra
பிப் 22, 2025 11:13

Well done sirs...


m.arunachalam
பிப் 22, 2025 09:27

சீக்கிரம் அவர்கள் வாழ்க்கையை முடித்தால் சமூகத்திற்கும் கஜானாவிற்கும் நல்லது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை