உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 25 பேர் பலி

இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 25 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: பாலஸ்தீனத்தின் ரபா பகுதியில், இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், 25 பேர் பலியாகினர்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, 2023 அக்., 7 முதல் மோதல் நடக்கிறது. காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 30,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 'ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் தொடரும்' என, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். தற்போது ரபா நகரில், இஸ்ரேல் படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்நிலையில், ரபா அருகே அமைக்கப்பட்டிருந்த கூடார முகாம்கள் மீது, இஸ்ரேல் நேற்றிரவு தாக்குதல் நடத்தியது. இதில், 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பேசும் தமிழன்
ஜூன் 22, 2024 09:58

இன்னும் தீவிரவாதிகள் மிச்சம் மீதி இருக்கிறார்களா ????.... கடைசி தீவிரவாதி சாகும் வரை தாக்குதல் நிறுத்த கூடாது...


ராமகிருஷ்ணன்
ஜூன் 22, 2024 09:51

எண்ணிக்கை குறைவாக உள்ளது. இங்கு சாராய சாவு 52 யை தாண்டுது.


Shravan
ஜூன் 22, 2024 06:32

தீவிரவாதிகளை கருவருப்பதே உலகம் அமைதி அடையும். இஸ்ரேலுக்கு வாழ்த்துக்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை