உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு 10,000 மெகாவாட் மின்சாரம்

நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு 10,000 மெகாவாட் மின்சாரம்

காத்மாண்டு, நேபாளத்தில் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்கு மின் கோபுரங்கள் வாயிலாக எடுத்து வருவது தொடர்பாக இரு நாடுகள் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக நம் அண்டை நாடான நேபாளத்துக்கு நேற்று சென்றார். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், அவரை நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சவுத் வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர்ஜெய்சங்கர் பிரதமர் அலுவலகத்தில் நேபாள பிரதமர் பிரசண்டாவை சந்தித்து பேசினார். இருவரும் இந்திய - நேபாள இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்புத்துறை, பேரிடர் மேலாண்மை, சுற்றுலா, விமான போக்குவரத்து, எரிசக்தி மற்றும் நீர்வளம் உள்ளிட்டவை குறித்து பேச்சு நடத்தினர். இதன்பின், நேபாளத்தில் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்கு மின் கோபுரங்கள் வாயிலாக எடுத்து வருவது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கையெழுத்திட்டனர். அடுத்த 10 ஆண்டுக்குஇந்த மின்சாரத்தை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.இது தவிர, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமி உருவாக்கிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான ஒப்பந்தத்திலும் இருநாடுகளும் கையெழுத்திட்டன.முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காத்மாண்டுவில் உள்ள ஜனாதிபதி அலுவலகமான ஷீத்தல் நிவாசில், ஜனாதிபதி பவுடலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
ஜன 05, 2024 15:46

1 நீர் மின்சாரம் என்பதால் நமக்கு சுற்றுச்சூழல் பிரச்சனை குறைவு. ????2 இறக்குமதி விலையும் மிகக்குறைவு.3.நமது நிலக்கரி இறக்குமதி பெருமளவு குறையும்.4. அதற்கான அன்னியச் செலாவணியும் மிச்சம்.( மின்சாரத்தை அவர்களால் கப்பல், விமானத்தில் ஏற்றுமதி செய்ய முடியாது. அண்டை நாடான நமக்கு மட்டுமே விற்கமுடியும்)5 .எல்லாவற்றையும் விட நேபாளத்துடன் நல்லுறவு தவிர்க்க முடியாத ஒன்று.


Krishna
ஜன 05, 2024 08:03

கேவலம்


வாய்மையே வெல்லும்
ஜன 05, 2024 09:50

எதையாவது பேணாத்த வேண்டியது.. மின்சாரத்துக்கு இப்படி ஒரு கமெண்ட்.. நம்ம கிட்ட பெட்ரோல் கிடையாது இருநூற்றாண்டுகளாக வெளிநாட்டில் தான் வாங்கி வருகிறோம் .. உங்க வண்டி க்ரிஷ்ணாயில் / கேரோசென் ல ஓட்டுறீங்களா ?? .அவ்வளவு மானஸ்தராக இருந்தால் ஜட்கா வண்டியில் தான் நீங்க போகவேண்டியது.. என்ன நான் சொல்றது புலப்படுதா ??


வாய்மையே வெல்லும்
ஜன 05, 2024 06:39

மணி சார் என்னுடைய நண்பர்கள் பல பேரு பஞ்சாபில் உள்ளனர்.. நானும் அங்கு சென்று பார்த்திருக்கிறேன்.. மின்சாரம் படு திராபை.. சம்மர் வந்துவிட்டால் சகட்டுமேனிக்கு தடை. லோ வோல்ட்டேஜ் சர்வசாதாரணம்..இதே மாதிரி தான் மற்ற அநேக மாநிலங்களிலும் இருக்கலாம்.(பிஹார் / மத்திய பிரதேஷ்/ உத்தர பிரதேஷ் / வெஸ்ட் பென்கால் / ஒரிசா ...). நாம் தமிழ்நாட்டை வைத்துக்கொண்டு பார்க்கிறோம்.... இங்கு தான் அனல்மின்நிலையம் வைத்து சமாளிக்கிறோம்.. இந்தியாவில் மக்கள் தொகை கூடிட்டே இருக்கு இதற்கு மாற்று சிந்தனை (சோலார் ) மாதிரி கொண்டுவரவேண்டிய அவசியம் உள்ளது.. அதற்கு செலவு எவ்வளவு ஆகும் என்பதை மத்திய அரசு கணக்கிடவேண்டிய கட்டாயம் உள்ளது


Mani . V
ஜன 05, 2024 04:43

இவ்வளவு பெரிய நாட்டில், எல்லா வளங்களும் இருந்தும் ஒரு சிறிய நாட்டிடம் மின்சாரம் வாங்க வேண்டிய நிலைமை இருக்குதுன்னா, இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று தோன்றுகிறது.


C.SRIRAM
ஜன 05, 2024 05:25

எல்லை மாநிலங்களுக்கு தேவையான மின் சாரத்தை பக்கத்து நட்பு நாடுகளிடம் வாங்குவது வழக்கம் தான் . இது நட்பை மேலும் உறுதிப்படுத்த ஒரு வழி . இதிலெல்லாம் உள்குத்து இருக்க வாய்ப்பில்லை


கலிவரதன்,திருச்சி
ஜன 05, 2024 06:10

நீயே சிங்கப்பூருக்கு அடிமை வேலை பார்க்க போயிருக்க அந்த வேலைய மட்டும் பாரு மணி அத விட்டு உனக்கு தேவையில்லாத வேலையில் தலையிடாத மணியா...


அப்புசாமி
ஜன 05, 2024 16:58

ஸ்ரீலங்கா மாதிரி நேபாளும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும்.நடுவில் ப்ளே பண்ணுதுன்னு நினைக்கிறேன். ரெண்டுபக்கமும் ஆதாயம்.


Ramesh Sargam
ஜன 05, 2024 00:08

நேபால் நாட்டுக்கு நன்றி. இந்தியா-நேபால் உறவு என்றும் இதுபோல் இருக்கவேண்டும்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ