உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரு அடி தூரத்தில் 3ம் உலகப் போர்: மீண்டும் அதிபர் தேர்தலில் வென்ற புடின் எச்சரிக்கை

ஒரு அடி தூரத்தில் 3ம் உலகப் போர்: மீண்டும் அதிபர் தேர்தலில் வென்ற புடின் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: 'அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் - ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில், 87 சதவீத ஓட்டுகளுடன் புடின் வெற்றி பெற்றார். தொடர்ந்து ஐந்தாவது முறையாக அதிபர் அரியணையில் புடின் ஏறியிருக்கிறார். ஓட்டளித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு புடின் நன்றி தெரிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது: அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் - ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகையச் சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை. மூன்றாவது உலகப்போர் வெகு தொலைவில் இல்லை. ஒரே அடி தொலைவில் தான் இருக்கிறது. அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிகழ்கிறது. நிலவரம் அப்படியிருக்க அவர்கள் ரஷ்ய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைப்புக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Lion Drsekar
மார் 19, 2024 11:15

காட்டு விலங்குகள் ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டு தின்று கொண்டு வாழ்ந்தாலும், அவைகளுக்குள் அடித்துக்கொண்டு வயிற்றுப்பசி மற்றும் உடற்பசிக்கு அடித்துக்கொண்டு தங்களை அழித்துக்கொண்டாலும் , அந்த அந்த இனம் ஒற்றுமையாக வாழ்ந்து , ஒன்றாக வளர்ந்து, ஒரு தலைமையின்கீழ் , அவைகளின் இனம் அழியாமல் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது, . அவைகள் தாங்கள் வாழ தாங்கள் வாழும் இடங்களை அழித்துக்கள்வதில்லை, ஆனால் ஆறு அறிவு படைத்த மனித மிருகங்கள் , காட்டு விலங்குகளும் கண்டு வியக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து , செயல்படுவது வெட்கக்கேடானது . வந்தே மாதரம்


Ramesh Sargam
மார் 18, 2024 22:11

ரஷ்யா, அமெரிக்கா அதிபர்களுக்கு போர் செய்யாவிட்டால் பொழுதுபோகாதுபோல இருக்கு. போர் அவர்களின் time pass.


vbs manian
மார் 18, 2024 19:29

மிச்சமுள்ள பதிமூன்று சத ஓட்டுக்களை இவர் ஏன் பெறவில்லை என ஆச்சர்யமாக உள்ளது. இப்போதெல்லாம் அடிக்கடி அணு ஆயுத தாக்குதல் உலக போர் என்றெல்லாம் பேசுகிறார்.


Suresh
மார் 18, 2024 17:50

உக்ரைன் மூடிக்கொண்டு இருந்திருந்தால் இன்று இவ்வளவு பிரச்சனை இல்லை. மடச்சாம்பிராணிகளான அமெரிக்காவும், ருஸ்யாவும் புரிந்துகொள்ள வேண்டியது, உலகப்பொருளாதார பாதிப்பு என்பது அணைத்து மக்களுக்கும் தான் என்பதே. இவர்கள் அடித்துக்கொண்டால் கடும் நஷ்டமடைவார்கள், அதன்பின் அடுத்த வல்லரசாக உருவெடுக்கப்போவது சீனா மட்டுமே. மரமண்டைகளுக்கு புரிந்தால் சரி.


சுதாகர்
மார் 18, 2024 16:46

சீக்கிரம் ஆரம்பிங்க. ஒரு பில்லியன் மக்களாவது சரிப்பட்டு வரும்.


morlot
மார் 18, 2024 15:08

.No democracy on USA,what a comedy poutine. American,europeans arabs must put an end to this fool.


rama adhavan
மார் 18, 2024 13:56

எப்போதும் குரைக்கும் நாய் கடிக்காது. ஏன் எனில் அவரும் அழிவார், அவர் நாடும் கூட அழியும். அப்போ பிடிக்க நாடும் மனிதரும், உயிர் இனமும், இயற்கை வளங்களும் இருக்காது.


ஆரூர் ரங்
மார் 18, 2024 13:24

முடிவு ஏற்படலாம்????. அதுவரை ஆடட்டும். அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லையாம் .ரஷ்யாவில் ஜனநாயகம் கொஞ்சம் கூட பாக்கி இல்லையே.


Ramanujadasan
மார் 18, 2024 12:36

மூன்றாம் உலக போர் வந்தால் எங்கள் தொளபதி இருநூறு ரூபாய் கூலிப்படை திராவிடர்களுடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யா சென்று, அந்தந்த தலைவர்களுடன் பேசி, அமைதியை நிலை நாட்டி, சண்டையை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார். அவருக்கு நோபல் அமைதி பரிசு ரெடியாகட்டும் .


Indian
மார் 18, 2024 14:03

நீ கதறி கொண்டே இரு


தமிழ்
மார் 18, 2024 15:41

பெங்களூரில் யாரிடம் அடிமை


Priyan Vadanad
மார் 18, 2024 20:10

பெயரை மாத்துயா. ஒரு மனிதப்புனிதத்தை பெயரில் கொண்டவரை நாறடிக்க செய்யாதே.


K.Muthuraj
மார் 18, 2024 12:27

அமெரிக்க மக்களுக்கு கம்யுனிச பூச்சாண்டி. ரஷ்யனுக்கு மேலை நாடுகள் பூச்சாண்டி. பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய பூச்சாண்டி. திராவிட மக்களுக்கு ஹிந்தி பூச்சாண்டி. இதைபோல் ஒவ்வொரு நாட்டு அரசியல்வாதிக்கும் பிழைப்பிற்கு எளிதான ஒரு காரணம். உலகின் பொது சித்தாந்தம் - எல்லா நாட்டிலும் எப்படியாவது அரசியல்வாதி ஏமாற்றி பிழைத்துக்கொள்வான். மக்கள் ??


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ