உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., அமைதியை விரும்பாவிட்டால் வேறு வழியில் பதிலடி தருவோம்: ஆப்கன் அமைச்சர் முத்தகி எச்சரிக்கை

பாக்., அமைதியை விரும்பாவிட்டால் வேறு வழியில் பதிலடி தருவோம்: ஆப்கன் அமைச்சர் முத்தகி எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காணவே விரும்புகிறோம். அதற்கு அந்நாடு ஒப்புக்கொள்ளாவிட்டால், வேறு வழியில் தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும்,'' என, ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி எச்சரித்துள்ளார். ஆப்கன் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி டில்லியில் நேற்று கூறியதாவது: எந்த பிரச்னை என்றாலும் பரஸ்பர புரிதல் மற்றும் பேச்சு மூலமே தீர்வு காண முடியும் என்பது எங்களது கொள்கை. எல்லையில் பதற்றத்திற்கு இடம் தரக்கூடாது. அதற்கு பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளாவிட்டால், வேறு வழியில் தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும். பாகிஸ்தான் மக்களுடனோ அல்லது அங்குள்ள அரசியல்வாதிகளுடனோ எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சில தீய சக்திகள் தான் சூழ்நிலைகளை மோசமாக்க முயற்சிக்கின்றன. விரும்பவில்லை நிலம் மற்றும் வான் எல்லைகளை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. அந்த உரிமை மீது யாராவது குறுக்கிட்டால், உடனடியாக பதிலடி தருவோம். தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு தீர்வு காண சிலர் விரும்பவில்லை. எல்லைகளை பாதுகாக்கும் திறன் எங்களுக்கு இருக்கிறது. தற்போது எங்கள் தரப்பில் சண்டையை நிறுத்தி விட்டோம். நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. பாகிஸ்தானுடன் நல்லுறவையே விரும்புகிறோம். பேச்சுக்கான கதவுகளை திறந்தே வைத்து இருக்கிறோம். ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் அமைதியை கொண்டு வர விரும்புகிறோம். கடந்த 40 ஆண்டுகளாக எங்கள் நாட்டில் சண்டை நடந்து இருக்கிறது. சோவியத் யூனியன் வந்தபோது, அதை முறியடித்தோம். அதன் பின் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுடன், 50 நாடுகளின் படைகள் வந்தன. 20 ஆண்டுகளாக அவர்களுடன் சண்டை நடந்தது. தற்போது தான் எல்லாம் முடிந்து ஆப்கானிஸ்தான் சுதந்திரமாக தனது சொந்த காலில் நிற்கிறது. நான்கு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழவில்லை. பிரச்னைகளுக்கு பேச்சு வாயிலாகவே தீர்வு காண விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். ஆக்ரா பயணம் ரத்து ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர்கான் முத்தகி நேற்று ஆக்ரா செல்லவிருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ரத்தானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

RK
அக் 13, 2025 13:47

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் இந்த அமைதி படையை வைத்து அகராதி படையை அடிக்க வைப்பது நமக்கு நல்லது.


Rathna
அக் 13, 2025 11:38

நீங்கள் அடித்து கொண்டு சாவது எங்களுக்கு நல்லது. அங்கே குண்டு வெடிக்க வெடிக்க இந்தியாவில் அமைதி நிலவும். இங்கே இருக்கும் உங்கள் கூட்டாளிகளையும் அழைத்து கொண்டால் எங்கள் நாட்டிற்கு நல்லது.


canchi ravi
அக் 13, 2025 09:51

உங்களிடம் வான் படை இல்லையே. அது ஒரு பெரிய குறைபாடு.


Palanisamy T
அக் 13, 2025 08:36

நீங்களெல்லாம் அமைதிப் பற்றிப் பேசுவதா? நீங்கள் எப்படி ஆப்கானிஸ்த்தான் ஊரைக் கைப்பற்றினீர்களென்று உங்களுக்கு தெரியவில்லையா? மேலும் இந்திய நாட்டிற்க்கு இப்போது வருகைத் தந்த உங்கள் தலைவர்களிலொருவர் அமீர்கான் ஐநா வால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டதை மறந்து விடவேண்டாம்.


Anand
அக் 13, 2025 13:19

ஐநாவெல்லாம் ஒரு அமைப்பு, அது அறிவிக்கிறதல்லாம் ஒரு அறிவிப்பு, அது ஒரு அமெரிக்கா கைப்பாவை, தற்போது சிரியாவை கைப்பற்றியுள்ள அல் ஷரா என்பவன் ISIS பயங்கரவாதி, இப்போது உத்தமனாகிவிட்டான்....


Appan
அக் 13, 2025 08:29

இந்தியாவின் புது கண்டுபிடிப்பு ராணுவ தாளவட்டங்களை செய்ய , இவர்களுக்கு உதவலாம் பாகிஸ்தானை எப்போதும் தூங்காமல் வைக்க , இவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து சேந்தூரை தொடரலாம். ஆனால் விழிப்போடு இருக்கணும். கடைசியில் இஸ்லாம் இவர்களை ஒன்று சேர்த்து நம்மை அழிக்க பார்ப்பார்கள்.


காபூலிவாலா
அக் 13, 2025 07:59

இதை இங்கே வந்து சொல்வானேன்? காபூலிலிருந்து சொல்லமுடியாதாக்கும்?


அப்பாவி
அக் 13, 2025 07:57

சண்டை போட வெளி ஆளுங்க கிடைக்கல, அதான் தம்மில் தம்மில்.


pmsamy
அக் 13, 2025 06:35

இப்போ சொல்றது நல்ல விஷயம் தான் ஆனால் மதங்கற பேர்ல பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் இருப்பது கொடுங்கோல் ஆட்சி. அது சரியல்ல.


SANKAR
அக் 13, 2025 04:45

kudunga sir!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை