உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உடல் மீட்பு: விசாரணை தீவிரம்

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உடல் மீட்பு: விசாரணை தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் சின்சினாட்டியில் மேலும் ஒரு இந்திய மாணவர் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் பர்ட்யு பல்கலையில், நம் நாட்டின் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர், கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியல் படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பாக, பல்கலை., அருகே இறந்த நிலையில் நீல் ஆச்சார்யா உடல் மீட்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் சின்சினாட்டியில் இன்று (பிப்.,01) மேலும் ஒரு இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சமீபத்தில், விவேக் ஷைனி என்ற இந்திய மாணவர், அங்காடி ஒன்றில் மது அருந்திய ஒரு நபரால், கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார். கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ராஜா
பிப் 02, 2024 05:13

காசையும் செலவு செய்து உயிரையும் விடுகிறார்கள் நம் மாணவ செல்வங்கள். எழுபது ஆண்டு கால ஊழல் புற்றுநோய் விரைவில் வேர் அறுந்து போக வேண்டும்.


Ramesh Sargam
பிப் 02, 2024 00:20

அமெரிக்க நாட்டு மோகத்தில் (மேல் நாடு மோகத்தில்) மயங்கி, இந்திய மாணவர்கள் அங்கே சென்று படித்து, சாதிக்க நினைக்கிறார்கள். ஆனால் நடப்பது அனைத்தையும் பார்த்தால் மிகவும் வருத்தமாகவும், பயமாகவும் உள்ளது இந்தியாவில் உள்ள பெற்றோர்களுக்கு. இப்படி வருடம் முழுவதும் அமெரிக்காவில் எங்கோ ஒரு பகுதியில் இந்திய மாணவர்கள் துரமரணம் அடைகிறார்கள். இந்திய அரசு, அமெரிக்க அரசுடன் பேசி இதுபோன்ற துர்மரணங்களை தவிர்க்க உடனே ஏதாவது செய்யவேண்டும். இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்க அரசை வற்புறுத்தவேண்டும்.


sankaranarayanan
பிப் 01, 2024 21:31

இவ்வளவு முன்னேற்றமடைந்த அமெரிக்காவிலேயே இப்படிப்பட்ட துயர நிகழ்ச்சி குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு நேரிடுவது சகஜமாகிவிட்டது இதை உடனே அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் வாழ்வதற்கே தகுதி அற்ற தேசமாக ஆகிவிட்டது அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது


vaiko
பிப் 02, 2024 00:37

இந்தியாவிலேயே படித்து, தினமும் ஜெய் ஸ்ரீராம் என்று கோசம் இட்டால் இந்த பிரச்சனை வந்து இருக்காது.


suresh
பிப் 01, 2024 18:17

உண்மையில் வருந்தத்தக்க விஷயம். அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மகனை பிரிந்த பெற்றோர்கள் எவ்வளவோ வருத்தப்படுவார்கள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை