உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மீது சீனா புகார்

உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மீது சீனா புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: இந்தியாவின் மின்சார வாகனங்கள், பேட்டரிக்கு வழங்கப்படும் மானியங்களால், தங்கள் நாட்டின் பொருளாதார நலன் பாதிப்பதாக, உலக வர்த்தக அமைப்பில், சீனா புகார் தெரிவித்துள்ளது. சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்திய அரசின் மின்சார வாகன, பேட்டரி மானியங்கள், நியாயமற்ற போட்டியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இறக்குமதிக்கு மாற்றாக உள்ள இவை, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுவதாக உள்ளன. தவறுகளை இந்தியா சரி செய்ய வேண்டும். மேலும், சீன உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

மணிமுருகன்
அக் 16, 2025 23:58

இந்திய நிறுவனங்கள் உங்கள் உள்நாட்டு வர்த்தக கூட்டு தயாரிப்பாகத் தானே இருக்கும் தனி உரிமையா தருவீர்கள் இது எதோ தவறான தகவல் என்று நினைக்கிறேன்


அப்பாவி
அக் 16, 2025 15:26

அப்போ ஷாங்காய் மாநாட்டில்.மூணுபேரும் கட்டிப்.புடிச்ச போது இதெல்லாம் பத்தி பேசலியா? சீக்கிரம் ஒரு ஃப்ரீ ட்ரேட் அக்ரிமெண்ட் போட்டுருங்க.


yasomathi
அக் 16, 2025 14:25

போட்டி என்றால் 1000 இருக்கும். அது புடிக்கல என்றால் வெளியே போய்விடு. உலகத்தை நாங்க காப்பத்த நாங்க இருக்கோம்


தத்வமசி
அக் 16, 2025 14:10

தங்களுடைய சொந்த நாட்டு மக்களுக்கு மானியம் இலவசம் தரக்கூடாது என்று சொல்ல இவர் யார்? இவருக்கு அந்த அதிகாரம் இருக்கிறதா? இது எங்கள் நாடு எங்கள் மக்கள் எண்களின் வரிப்பணம். நாங்கள் எதையும் செய்வோம். ஒப்பந்தம் போட்டு கட்சிக்கு காசு கொடுத்து விட்டு நாட்டை சுரண்டிக் கொள்ள இது காங்கிரஸ் அரசு அல்ல.


Barakat Ali
அக் 16, 2025 14:06

ஷரத்தில் இந்தியாவிற்கான இறக்குமதிப்பொருட்கள் என்னென்ன என்று தெளிவாக இருந்திருக்குமே ????


Anand
அக் 16, 2025 12:27

சீனாவிற்கு திரும்பிய பக்கமெல்லாம் அடிமேல் அடி விழுவதால் இந்த புலம்பல்.


Ramesh Sargam
அக் 16, 2025 11:25

ஒருபக்கம் டிரம்ப் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று மிரட்டுகிறார். இங்கே சீனா இந்தியா மானியங்கள் கொடுக்க கூடாது என்று புகார் அளிக்கிறது. அமெரிக்காவும், சீனாவும் இந்தியா என்ன அவர்கள் அதிகாரத்தில் செயல்படும் நாடு என்று நினைத்துவிட்டதா? மோடி அவர்கள் டிரம்புக்கும், சீனாவுக்கும் ஒரு தகுந்த பாடம் கற்பிக்கவேண்டும். இல்லையென்றால் அவர்கள் நம்மை ஏறிமிதிப்பார்கள்.


KOVAIKARAN
அக் 16, 2025 10:15

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், இறக்குமதியைக் குறைத்து அந்நியசெலவாணியின் கையிருப்பை அதிகரிக்கவும் நமது அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைகளிலும் தலையிட எந்த ஒரு மற்ற நாடுகளுக்கும் அதிகாரமில்லை. உலக வர்த்தக அமைப்பில், இந்தியாவும் ஒரு முக்கியமான உறுப்பினர்தான். நாமும் சீனா பெரியண்ணன் போல நடப்பதைப் பற்றி புகார் கூற முடியும். ஆனால், அவ்வாறு கூறமாட்டோம். மற்ற நாடுகளின் மீது அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பிற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான ஒரு காரணம் அவர்களது வருவாயை அதிகப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தத்தான். அமெரிக்கா நம் நாட்டின் மீது விதிக்கப்பட்ட அதிக வரியைப்பற்றியே மோடி அவர்கள் ஒன்றும் கலங்கவில்லை. சீனா இப்போது மிரட்டிப் பார்க்கிறதா? ஒன்றும் ஆகப்போவதில்லை.


சாமானியன்
அக் 16, 2025 09:17

மக்களிடம் பிரபலம் அடைய சோலார் மின்விளக்கு, பேனல், பைக், பேருந்து ஆகியவற்றிற்கு மானியம் தரவேண்டிய அவசியம் உள்ளது. அது ஒரு ஐந்து வருடங்கட்கோ பத்து வருடங்கட்கோ தான். அமெரிக்காவும், சீனாவும் அங்கே இருந்து கொண்டு தாசில் பண்ணக் கூடாது.


shyamnats
அக் 16, 2025 08:23

அடுத்த நாட்டு உள் விவகாரத்தில் தலையிட, சீனாவிற்கு யார் உரிமை கொடுத்தது? சீனா அமெரிக்காவிற்கு அடிபணிகிறதா என்ன. சீனாக்காரனுக்கு தெரிகிற விஷயம் கூட - மக்களுக்காக உழைக்கிற மோடிஜி பற்றி - இங்குள்ள சீனா மற்றும் அமெரிக்க கொத்தடிமைகளுக்கு தெரியவில்லை.


முக்கிய வீடியோ