உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  சீனாவில் மக்கள் தொகை வரலாறு காணாத வீழ்ச்சி

 சீனாவில் மக்கள் தொகை வரலாறு காணாத வீழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவின் மக்கள் தொகை, தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை, நம் அண்டை நாடான சீனா நீண்ட காலமாக தக்க வைத்திருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறி, அந்நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வருகிறது. பொருளாதார அழுத்தம், வேலை பளு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் திருமணம், குழந்தை பெறுதலில் இளைஞர்கள் ஆர்வம் காட்டாததே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில், சீனாவின் மொத்த மக்கள் தொகை 140.5 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 33.9 லட்சம் குறைவு. இந்த வீழ்ச்சி 2024ம் ஆண்டை விட வேகமானது என்று, சீனாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. சீனாவில், 2025ல் பதிவான புதிய பிறப்புகள் வெறும் 79.2 லட்சம் மட்டுமே. அங்கு, ஆயிரம் பேருக்கு 5.6 சதவீதம் என்ற பிறப்பு விகிதமே உள்ளது. இது, 1949ம் ஆண்டு சீன குடியரசு துவங்கியதில் இருந்து இல்லாத மிகக்குறைந்த அளவு. அதே சமயம், சீனாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 32.3 கோடியாக உள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 23 சதவீதத்தை எட்டியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் பணியாளர்கள் குறைவு, ஓய்வூதிய செலவு அதிகரிப்பு, உற்பத்தி குறைவு போன்றவை ஏற்படும். எனவே சீன அரசு ஒரு குழந்தை கொள்கையை நீக்கி, மூன்று குழந்தைகள் வரை அனுமதித்து, திருமணம், குழந்தைப் பேறுக்கு பல ஊக்கத் திட்டங்கள், பண உதவி, வரி சலுகைகள், ஆணுறைக்கு வரி உயர்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Venugopal S
ஜன 20, 2026 16:59

நமது பீகார் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து ஒரு ஆயிரம் பேரை சீனாவுக்கு அனுப்பி வைத்தால் பிரச்சினை தீர்ந்து விடுமே!


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜன 20, 2026 17:17

தமிழகத்தில் இருந்து ஒரு நூறு பேர் மட்டுமே போதும்.


SUBRAMANIAN P
ஜன 20, 2026 16:55

எதிர்காலத்தில் சீனாவை இந்தியாவோடு இணைக்க வசதியாக இருக்கும்.


என்றும் இந்தியன்
ஜன 20, 2026 16:41

சீனாவே நன்றாக புரிந்து கொள், ஜனத்தொகை அதிகரிக்க ஒரே வழி முஸ்லிம்களை சீன பிரஜைகள் ஆக்கு அப்புறம் பார் 5 வருடத்தில் உனது ஜனத்தொகை இன்றைய 140.2 கோடியிலிருந்து 145 கோடி ஆகிவிடும் இன்னும் 20 வருடத்தில் 160 கோடி ஆனாலும் ஆச்சரியமில்லை. உதாரணம் இந்தியா. 1947ல் முஸ்லீம் ஜனத்தொகை 1 கோடி இன்று 2025ல் 78 வருடத்தில் 21.3 கோடி


Senthoora
ஜன 20, 2026 16:21

சீனாவில்தான் அப்படி, ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் தம்பதியர் 3 பிள்ளைகள் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.


V.Mohan
ஜன 20, 2026 15:15

மக்கள் தொகை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் ஆண்கள் தான். ஆண்களை விட பெண்களே அதிகம் படித்து அதிக சம்பளத்திற்கு வேலை செய்கின்றனர். அதனால் முக்கால்வாசி ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில்லை. கிடைப்பதும் மிக தாமதமாகி விடும்போது ஆண்களின் இளமை டாட்டா காட்டி சென்று விடுகிறது. மேலும் அவர்கள் மது, கஞ்சா போன்ற போதைகளுக்கு அடிமையாகின்றனர்.பரோட்டா, சிக்கன் போன்ற கலப்படமிக்க உணவுகள் தின்பதாலும் ஆண்மை குறைபாடு வருகிறது. சொந்த பிஸினஸ் செய்வதால், சம்பள வேலை டென்ஷன் இருப்பதில்லை அதனால்,சிறபான்மையினர் குழந்தைகள் பெற்று பல்கி பெருகி வருவது


sarran vp
ஜன 20, 2026 12:31

We indians are well civilised when Romans were there ruling in europe and the same time chinese and japanese too were civilised. When did england originated and civilised, you have to go through history. After england empire started capturing countries then they started demolishing ancient culture and now questioning about Indian civilization.


Anand
ஜன 20, 2026 11:19

ப்பூ இதற்கு ஏன் இவ்வளவு கவலைப்படவேண்டும்? இருக்கவே இருக்கான் உன்னோட கூட்டாளி பக்கி, அவனுகளை உள்ளே விட்டால் போதும் ஒரு சில வருடங்களில் வரலாறு காணாத ஏற்றத்தை கண்கூடாக காணலாம்.


Svs Yaadum oore
ஜன 20, 2026 10:03

மக்கள்தொகை நிலைத்தன்மையைப் பராமரிக்கவும், நாட்டை வலுப்படுத்தவும் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. ஹிந்து சமூக மக்கள் முதல்வர் நாயுடு சொல்வதை ஆதரித்து குறைந்தது மூன்று குழந்தைகள் பெற்றால்தான் ஹிந்து தமிழ் சைவ சமய மக்கள் தமிழ் நாட்டில் வாழ முடியும் ..


Vijay
ஜன 20, 2026 10:00

காரணம் அங்கு ... இல்லை


Kumar Kumzi
ஜன 20, 2026 09:36

மூர்க்க காட்டுமிராண்டிகள் பெருக பெருக நாடுகள் அழிவை நோக்கி செல்லும்