உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி

ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்:உக்ரைனில் பயணியர் ரயில் மீது, ரஷ்ய ராணுவம் 'ட்ரோன்' தாக்குதல் நடத்தியதில், 30 பேர் பலியாகினர். கிழக்கு ஐரோப்பிய நாடா ன உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cfmy8287&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையத்தை குறிவைத்து ரஷ்ய ராணுவம், 'ட்ரோன்' தாக்குதல் நடத்தியது. கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த பயணியர் ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 30 பேர் உயிரிழந்தனர். உடனடியாக அங்கு மீட்புப்படையினரும், டாக்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் இந்த செயலை காட்டுமிராண்டித்தனம் என விமர்சித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என்பதை அறிந்தும் தாக்குதல் நடத்துவது பயங்கரவாதம். உலகம் இதைப் புறக்கணிக்கக்கூடாது,” என்று கூறினார். ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனின் மின் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு, 50,000 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் நெருங்கும்போது, உக்ரைனின் மின் கட்டமைப்பை ரஷ்ய படைகள் தாக்கி வருகின்றன. அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக வடக்கு நகரமான செர்னிஹிவ் அருகே மின் கட்டமைப்புகளை குறிவைத்து, 109 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது. இரவு நேரத்தில் நடந்த ரஷ்ய தாக்குதலால் பல இடங்களில் தீப்பிடித்து, மின் இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, உக்ரைன் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மின்சாரம் இல்லாமல் தவிப்பு ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனின் மின் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு, 50,000 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் நெருங்கும்போது, உக்ரைனின் மின் கட்டமைப்பை ரஷ்ய படைகள் தாக்கி வருகின்றன. அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக வடக்கு நகரமான செர்னிஹிவ் அருகே மின் கட்டமைப்புகளை குறிவைத்து, 109 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இரவு நேரத்தில் நடந்த ரஷ்ய தாக்குதலால் பல இடங்களில் தீப்பிடித்து, மின் இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, உக்ரைன் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

k.Ravi Chandran, Pudukkottai
அக் 05, 2025 15:51

எந்த ஒரு அரசியல் அனுபவமும் இல்லாத ஜெலன்ஸ்கி எனும் நடிகன் கையில் உக்ரைன் எனும் நாடு சிக்கியதால் இன்றைய அதன் மக்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. நாளை தமிழ்நாட்டையும் எந்த ஒரு அனுபவமும் இல்லாத ஒரு நடிகன் தான் ஆளனும் என நினைக்கும் தமிழக மக்களும் , விசிலடிச்சான் ரசிகர்களும் இன்றைய உக்ரைன் மக்கள் படும் பாட்டை பார்த்து கொஞ்சமாவது மனம் மாறட்டும்.


MUTHU
அக் 05, 2025 07:39

ரஷ்யாவிற்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். இங்குள்ள சத்யராஜ் எல்லாம் போராட கிளம்ப போறானுக.


Ramesh Sargam
அக் 05, 2025 01:40

மக்கள் பயணிக்கும் ரயில், பஸ் போன்ற வாகனங்களை தாக்குவதும், அவர்கள் குடியிருக்கும் பகுதிகளில், மாணவர்கள் படிக்கும் பள்ளிச்சாலைகள், மருத்துவமனைகள் மீதெல்லாம் குண்டுவீசி தாக்குவது சரியல்ல. பாவம் டிரம்ப் தன்னால் முடிந்த அளவுக்கு இந்த போரை நிறுத்த மிகுந்த சிரமப்படுகிறார். ஆனால் போர் முடிவுக்கு வர மாதிரி தெரியவில்லையே. டிரம்பின் நோபல் பரிசு கனவு வீண் ஆகி விடுமோ?


rajasekaran
அக் 05, 2025 10:49

போருக்கு யார் காரணம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை