உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமைதியைக் கொண்டு வருவதில் ஐரோப்பிய தலைவர்கள் ஒற்றுமை; நன்றி சொல்கிறார் உக்ரைன் அதிபர்!

அமைதியைக் கொண்டு வருவதில் ஐரோப்பிய தலைவர்கள் ஒற்றுமை; நன்றி சொல்கிறார் உக்ரைன் அதிபர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: 'அமைதியைக் கொண்டு வருவதில் எங்கள் அனைத்து நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களின் முயற்சிகளுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது. டிரம்பால் அவமதிக்கப்பட்டதாக கருதப்படும் ஜெலன்ஸ்கிக்கு ஆறுதலாக ஐரோப்பிய நாடுகள் கைகோர்த்துள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=95j82tnd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததால், பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் களத்தில் இறங்கி உள்ளன. இந்நிலையில், லண்டனில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் பங்கேற்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது: நமது சுதந்திரத்திற்கு மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அமைதி மற்றும் பாதுகாப்பை கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாக கைக்கோர்த்துள்ளன. இது நீண்ட காலமாக இல்லாத ஒன்று. உக்ரைனுக்கு அமைதிக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் நிலைமைகள் குறித்து எங்கள் கூட்டாளர்களுடன் நாங்கள் விவாதித்து வருகிறோம். முக்கியமான கூட்டங்கள் மற்றும் முடிவுகள் எடுக்க தயாராகி வருகிறோம். அமைதியைக் கொண்டு வருவதில் எங்கள் அனைத்து நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களின் முயற்சிகளுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். கூட்டு முயற்சி நமது எதிர்காலத்தை பாதுகாக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anand
மார் 03, 2025 10:45

போரை தொடர்ந்தால் ஐரோப்பா ஆப்பிரிக்காவாக மாற வாய்ப்புள்ளது.


SUBBU,MADURAI
மார் 03, 2025 09:18

Trump has put an end to the liberal world order. The era of nationalism is back We have to learn to take advantage of this.


Mecca Shivan
மார் 03, 2025 08:26

அதற்க்கு காரணம் அமெரிக்காவின் தடையை மீறி திருட்டுத்தனமாக எவ்வளவு நாட்கள்தான் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை வாங்கமுடியும் ? ஜெய்ஷ்ங்கர் சொன்னதால்தான் இந்த உண்மையும் வெளி உலகிற்கு தெரிந்தது ..மற்றபடி உக்ரைனால் எந்த ஒரு நாட்டிற்கும் பெரிய அளவில் பயனில்லை .. உண்மையை சொல்லப்போனால் இந்தியாதான் இதில் பாதிக்கப்பட்டுள்ளது .. ரஷ்யாவிலிருந்து கடல் வழி வர்த்தகம் ,, உக்காரனின் சூரியகாந்தி எண்ணைய், போன்றவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது


Subburamu Krishnasamy
மார் 03, 2025 07:55

Ukraine will be merged with Russia soon. No other go to USA and Russia. Zelensky will be removed from power. European countries are doing lip service to Ukraine


கிஜன்
மார் 03, 2025 07:31

மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் ..... ஜெய்ஷ்ங்கர் ஒரு தீர்க்கதரிசி .... Europe thinks their problem is the worlds problem .... என்று சொல்லாலடித்து ஒதுங்கி விட்டார் .... ஆரம்பம் முதலே அவர் இந்த ஜெலன்ஸ்கியை நம்பவே இல்லை .... ஐரோப்பியர்களின் ஆணவத்திற்கு .....அகங்காரத்திற்கு .....விழுந்த அடி இது ....


SUBBU,MADURAI
மார் 03, 2025 08:52

சிறந்த கருத்து கிஜன்.


கிஜன்
மார் 03, 2025 07:28

அவர் போரை தொடரவேண்டும் என்கிறார். வருடத்திற்கு 80 முதல் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. பிரிட்டன் கொடுத்த 2 பில்லியன் டாலர் கொசுறு. உங்களில் யாரிடம் அவ்வளவு பணம் இருக்கிறது. ஐரோப்பா ஏற்கனவே பொருளாதாரத்திலும் பிரெக்ஸிட் மற்றும் அகதிகள் பிரச்சனையில் தள்ளாடுகிறது.. இதில் உக்ரேன் வேற.. சொல்றது ஈசியப்பு.. செய்து பாருங்கள் அப்ப தெரியும் ....


முக்கிய வீடியோ