உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மெஹூல் சோக்சியின் கடைசி முயற்சி: நாடு கடத்தலை எதிர்த்து பெல்ஜியம் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

மெஹூல் சோக்சியின் கடைசி முயற்சி: நாடு கடத்தலை எதிர்த்து பெல்ஜியம் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரஸ்ஸல்ஸ்: இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என பெல்ஜியம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய வைர வியாபாரி மெஹூல் சோக்சி, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ் மோடி இணைந்து மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பிச் சென்றனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிரவ் மோடி, 2019ல் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மற்றொரு குற்றவாளியான மெஹுல் சோக்சி, 2018ல் அமெரிக்கா தப்பி சென்றார். அங்கிருந்து, கரீபிய தீவு நாடான ஆன்டிகுவா சென்று குடியேறினார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மெஹுல் சோக்சி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.இதைத் தொடர்ந்து, சோக்சியை பெல்ஜியம் போலீசார் கடந்த ஏப்ரலில் கைது செய்து, அந்நாட்டு சிறையில் அடைத்தனர். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.இதை எதிர்த்து சோக்சி தாக்கல் செய்த மனுவையும் , ஆன்ட்வெர்ப் மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் மெஹூல் சோக்சியை மும்பையில் உள்ள ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே ஆன்டவெர்ப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மெஹூல் சோக்சி கடைசி முயற்சியாக பெல்ஜியம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
நவ 04, 2025 00:11

இவன் மற்றும் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற இந்திய வங்கி மோசடிக்காரர்களை நாடு கடத்துவதற்கு முன்பு, அவர்களே அவர்கள் இருக்கும் நாட்டிலேயே இயற்கை மரணம் அடைந்துவிடுவார்க. கேஸ் கிளோஸ். இன்று பல வழக்குகள் இந்தியாவில் இப்படித்தான் முடிவுக்கு வருகின்றன. வழக்குகள் தாமதம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. வெட்கம். வேதனை.


தாமரை மலர்கிறது
நவ 03, 2025 21:03

இவரை இந்தியாவிற்கு கொண்டுவந்து சொத்துக்களை முடக்கி பெயிலில் விடுவது நல்லது. ரத்த புற்றுநோயுள்ளவரை ஜெயிலில் அடைப்பது மனிதாபிமானம் அற்ற செயல்.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 03, 2025 23:33

ஆமால்லே? அதுக்கு முன்னாடி இதையும் படி. ஜி. என். சாய் பாபா G. N. Saibaba ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் மற்றும் 90% உடல் ஊனமுற்றவர் சக்கர நாற்காலியில் இருப்பவர். மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக பொய்வழக்கு போட்டு, 2014 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். 2017 ஆம் ஆண்டில் அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள், அவரது ஊனத்தைப் பற்றி பேசாமலும், அவரது அரசியல் எதிர்ப்புக் குரலை நசுக்குவதற்காகவும் அவர் கைது செய்யப்பட்டதாக வாதிட்டனர். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அவருக்கு எதிராக தொடரப்பட்ட சட்ட நடவடிக்கைகள் செல்லாது எனக் கூறி, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை அவரை விடுதலை செய்தது. இருப்பினும், இந்த விடுதலையை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த சட்ட நடவடிக்கைகளால், சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த சாய் பாபா, கடுமையான உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு, 2024 ஆம் ஆண்டில் காலமானார். இவர் மட்டுமின்றி இன்னும் பல வழக்குகளை உதாரணம் காட்ட முடியும்.


முக்கிய வீடியோ