இந்தோனேஷியா பள்ளி விபத்து பலி 67 ஆனது
ஜாவா:இந்தோனேஷியாவின் கி ழக்கு ஜாவா மாகாணத்தில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், 67 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழ க்கு ஆசிய நா டான இந்தோனேஷியாவின் சிடோர்ஜோவில் முஸ்லிம் பள்ளியில் கட்டுமானப் பணியின்போது, கடந்த செப்., 29ல் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. அதில், 170க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். கடந்த, ஒன்பது நாட்களாக மீட்புப்பணி நடைபெற்று வந்தது. அந்தப் பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்தில், 104 பேர் மீட்கப்பட்ட நிலையில், 67 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.