உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்

தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல்அவிவ்: இஸ்ரேலுக்கு எதிரான போரில், தடை செய்யப்பட்ட கிளஸ்டர் ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 8வது நாளாக தொடர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் இருநாடுகளிடையே தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதிநவீன ஆயுதங்களை போரில் பயன்படுத்தி வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tphyjtvc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், இந்தப் போரில் சர்ச்சைக்குள்ளான ஆயுதமான கிளஸ்டர் ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து இஸ்ரேல் தரப்பில் கூறியதாவது: கிளஸ்டர் ஏவுகணை ஒருமுறை வெடித்து, அதில் இருந்து சிறிய வகை வெடிகுண்டுகள் பிரிந்து சென்று தாக்கும். அந்த வகையில், இஸ்ரேலின் அஷோர் நகரின் மீது கிளஸ்டர் ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 8 கி.மீ., தொலைவுக்கு இதன் பாதிப்பு இருந்தது. இதில், எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை, என தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எபி டெப்ரின் கூறுகையில், 'பயங்கரவாத நாடு (ஈரான்) பொது மக்களை குறிவைக்கிறது. கிளஸ்டர் ஆயுதங்களைக் கூட பயன்படுத்துகிறது,' எனக் குற்றம்சாட்டினார். கிளஸ்டர் ஏவுகணையை ஈரான் பயன்படுத்தியதற்கு, ஆயுதக் கட்டுப்பாட்டு சங்க குழுவின் நிர்வாக இயக்குனர் டேரில் கிம்பால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; கிளஸ்டர் ஏவுகணை போன்ற ஆயுதங்கள் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தினால், வெடிக்காத வெடிகுண்டுகளால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும், எனக் கூறினார். கடந்த 2008ம் ஆண்டு கிளஸ்டர் ஏவுகணைகளை பயன்படுத்த தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் 111 நாடுகள் கையெழுத்திட்ட நிலையில், ஈரான், இஸ்ரேல் அதனை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023ம் ஆண்டு ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா கொடுத்த கிளஸ்டர் ஏவுகணைகளை வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இதே ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவும் தாக்குதலை நடத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

மூர்க்கன்
ஜூன் 22, 2025 00:37

பெரியாரும் இதை ஒழுங்காக செய்யவில்லை போலும்.


Lkanth
ஜூன் 20, 2025 17:12

உலகின் முஸ்லிம் தீவிரவாதிகள் தாய்வீடு இந்தியாதான். ஈரானின் அதிபர் கோமினியின் தந்தை ஒரு இந்தியர்.


Lakshminarsyanan
ஜூன் 20, 2025 13:58

பாகிஸ்தான், யுஎஸ் நட்பால் இந்தியா பாதிக்கப்படும்


Lakshminarsyanan
ஜூன் 20, 2025 13:57

பாக்கிஸ்தான் , யுஎஸ்க்கு இடம் கொடுத்தால், இந்தியாவிற்கு மிகப்பெரிய சங்கடம்


Lakshminarayanan
ஜூன் 20, 2025 13:32

பாம்பை அடித்தா முழுமையாக அடிக்கனும். பாக் என்ற பாம்பை அரையும் குறையுமாக அடித்து விட்டு விடுகிறோம். அது இப்போது அமெரிக்கா என்ற அனகொண்டா விஷப்பாம்புடன் கைகோர்பது இந்தியாவிற்கு பெரிய ஆபத்து . மகாபாரதத்தில் வனபர்வத்தில் ஜராஸந்தன் பாண்டவர்களுடன் ஒரு சண்டையில் தோர்க்கடிக்கப்பட்டான். ஸ்ரீகிருஷ்ணர் தர்மரிடம் ஜராஸந்தனை அப்பகுதி கொன்று விடுமாறு சொல்கிறார். ஆனால் வழவழா கொழகொழா தர்மர் அவனிடம் பச்சாதப பட்டு விட்டுவிடுகிறார். தர்மரின் இந்த செயலே, பாரத யுத்தத்தில் அபிமன்யுவின் மரணத்திற்கு மூலமாகிறது. இதை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அபிமன்யு இறந்து பாண்டவர்கள் கதறும் போது , "அபிமன்யுவின் முடிவு நீங்கள் ஜராஸந்தனை மன்னித்து விடும் போதே முடிவாகிவிட்டது, யுதிஷ்ட்ரா" என்கிறார். எல்லாம் சங்கிலித் தொடர்பான


JaiRam
ஜூன் 20, 2025 12:25

மாவீரன் நெதன்யாகு இப்பொழுது ஹிட்லராக மாறிவிட்டார் அழிவு நிச்சயம்


RAVINDRAN.G
ஜூன் 20, 2025 12:15

இந்த 2025 வருஷம் கொடூரமான விஷயங்களுக்கு பஞ்சம் இருக்காது. மனிதாபிமானம் செத்துவிட்டது வருத்தமான விஷயம்.


அப்பாவி
ஜூன் 20, 2025 12:06

இராக்கில் கிளஸ்டர் , பங்க்கர் பஸ்டர் ஏவுகணைகளை உபயோகப் படுத்தியது அமெரிக்கா.


Murthy
ஜூன் 20, 2025 11:57

இந்த கிளஸ்ட்டர் குண்டுகளைத்தான் 2009 தமிழ் இன அழிப்பில் இலங்கை பயன்படுத்தியது


hasan kuthoos
ஜூன் 20, 2025 11:50

காசா மக்களின் வலியை ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இஸ்ரேல் அனுபவிக்கவில்லை, இன்னும் இருக்கு, நெதன்யாஹுவை அழிக்கும் வரை போர் நடைபெற வேண்டும்


Keshavan.J
ஜூன் 20, 2025 15:19

பாய் உன் ஆதங்கம் புரிகிறது, நெதன்யாஹுவை அழிக்கும் வரை போர் நடைபெற வேண்டும் ஓகே, அப்புறம் இஸ்ரேலில் வேற தலைவர் இல்லையா. நீங்கள் ஏன் பயங்கரவாதம் அழிய வேண்டும் என்று கூற கூடாது. பயங்கரவாதம் அழிந்தால் உலகம் அமைதி ஆகா இருக்கும். அப்பாவி காசா மக்கள் சாவது எனக்கும் கஷ்டமாக தான் இருக்கிறது. அது ஏன் நடக்கிறது. திறந்த மனசொடு அக்டோபர் 7 2023 என்ன நடந்தது என்று சென்று பாருங்கள். அதை நீங்கள் தவறில்லை என்று சொன்னால் காஷ்மீரில் நடந்ததை கூட நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்று அர்த்தம்.


மூர்க்கன்
ஜூன் 22, 2025 00:48

முதல்ல ஹமாஸ் உருவாக யாரு காரணம் ?? ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதியில் இவனுக உல்லாசமா வாழுவானாம் அதை தட்டி கேட்ட போராளி தீவிரவாதி. சம்பந்தமே இல்லாமல் இப்போ ட்ரம்ப் காசா அமெரிக்காவுக்கு சொந்தம் ?? என்கிறான் அதையெல்லாம் கேட்க துப்பில்லை ?? முஸ்லிம்கள் ஆயுதம் கையில் எடுக்க கூடாதாம்?? கடைசி நம்பிக்கை நீங்கதான்னு அடைக்கலம் கேட்டு வந்த நச்சு விஷ பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாவத்தை தவிர வேறெந்த பாவமும் செய்யாத இந்த அப்பாவி பலஸ்தீன மக்கள் இப்போது பெரும் துயரங்களை மதத்தின் பெயரால் அனுபவிக்கிறார்கள். கள்ள மௌனம் காக்கும் கயவர்களும் கூட நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை