உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்: டிரம்ப்

ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்: டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''ஈரான் மீதான தாக்குதலில் வெற்றி அடைந்துள்ளோம். ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்'' என நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.ஈரான் நாட்டின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் வெற்றிகரமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தின என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக நாட்டு மக்களுக்கு, அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ஈரானுக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று அமைதி, அல்லது பெருந்துயரம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ec1zppa6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ராணுவ வெற்றி

ஈரான் மீதான தாக்குதலில் வெற்றி அடைந்துள்ளோம். ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும். போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் சம்மதிக்க வேண்டும். இந்த நிலை தொடரக்கூடாது. அமைதி நிலவ வேண்டும். ஈரான் மீதான இந்த தாக்குதல் ஒரு அற்புதமான ராணுவ வெற்றி. ஈரான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முன்னணி நாடு. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடன் இணைந்து இந்த தாக்குதல் நடத்தியுள்ளோம்.

துல்லியமான தாக்குதல்

ஈரானின் முக்கிய அணு ஆயுத நிலையங்களை தாக்கி உள்ளோம். ஈரானில் இன்னும் பல இடங்களை குறி வைத்துள்ளோம். இன்று நாங்கள் செய்ததை உலகின் எந்த ராணுவத்தினாலும் செய்ய முடியாது. ராணுவத்தினருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அமெரிக்க ராணுவத்தினர் துல்லியமான தாக்குதலை ஈரானின் அணு ஆயுத மையங்கள் மீது நிகழ்த்தியுள்ளனர். ஈரான் நடத்திய தாக்குதலில் அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்க வான்வெளிப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. 40 ஆண்டுகளாக அமெரிக்கா, இஸ்ரேலை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

அச்சுறுத்தல்கள்

இஸ்ரேல் மீதான போரை ஈரான் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் அமெரிக்காவின் தாக்குதல் தொடரும். ஈரானில் அணு ஆயுத அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவது எங்கள் இலக்கு. ஈரான் அமைதியான நிலைக்கு திரும்பாவிட்டால் அடுத்தடுத்த தாக்குதல்கள் மோசமாக இருக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

இஸ்ரேல் வரவேற்பு!

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ஈரான் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி. யாரும் செய்யத் துணியாத நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த டிரம்பின் தலைமை உதவி உள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதல் உலகின் அபாயகரமான ஆயுதத்திற்கு எதிரான நடவடிக்கை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Nathan
ஜூன் 22, 2025 12:36

முதலில் நீங்கள் தாக்குதல் நடத்த வேண்டிய நாடு பாகிஸ்தான் தான். அந்த நாடு யாருக்கு அடியாள் வேலை பார்ப்பது என்று தெரியாமல் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடையே ஆட்டம் காட்டுகிறது ஆயுதங்களை சீனாவிடம் கடனில் வாங்கிக் கொண்டு இதுநாள் வரை அவர்கள்மீது பாசம் காட்டி உங்களின் இரட்டை கோபுரம் தாக்கப்பட காரணமாக இருந்தது இப்போது ஐந்தாம் தலைமுறை விமானம் வரை சீனாவிடம் கடன் மற்றும் தள்ளுபடியில் வாங்கிக் கொண்டு உங்களுக்கு சீனாவை தாக்குதல் நடத்த விமான தளங்களை கொடுத்து விட்டு வேடிக்கை காட்டும். சீனா மற்றும் அமெரிக்கா வீழ்ச்சி அடைந்து விட்டது என்று தெறிந்து கொள்ளும் வரை பாக்கிஸ்தான் இந்த ஆட்டத்தில் சகுனி வேலை பார்க்கும். பாகிஸ்தான் ஒரு தீவிரவாத குழுக்களின் வாடகை வீடு அது தான் அந்த நாட்டின் தகுதி.


Ramesh Sargam
ஜூன் 22, 2025 12:09

டிரம்ப் அவர்களுக்கு நோபல் அமைதி பரிசு கிடைத்திருந்தால் இந்த தாக்குதல் நடந்திருக்காது.


Kasimani Baskaran
ஜூன் 22, 2025 10:49

அணுவாயுதம் வைத்து மிரட்டும் பாக்கிகளுக்கும் இந்தியா இதே போலத்தான் அடித்தது. மிரண்டு போய் முதலில் டிரம்பிடமும் அதன் பின்னர் இந்திய இராணுவத்திடமும் கெஞ்சினார்கள். இந்தியா போனால் போகிறது என்று விட்டபின்னர் கேவலமாக உதார் விட்டார்கள். ஆகவே முதலில் அமேரிக்கா தாக்கவேண்டிய இடம் பாகிஸ்தான்தான்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 22, 2025 10:14

பாஸ் ஈரான் தீவிரவாத நாடு, பொரிக்கிஸ்தான் அமைதி விரும்பும் நாடு, உங்கள உங்க மக்களே நம்ப மாட்டாங்க


KRISHNAVEL
ஜூன் 22, 2025 09:57

முதலில் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி தங்களது ஆயுதங்களை சோதனை செய்தார்கள் பிறகு இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி தங்களது ஆயுதங்களை சோதனை செய்தார்கள் தற்பொழுது அமெரிக்க்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி தங்களது ஆயுதங்களை சோதனை செய்கிறார்கள் ஒரு சந்தேகம் சீனா தங்களது ஆயுதங்களை யார் மீது தாக்கி சோதனை செய்வார்கள்


SANKAR
ஜூன் 22, 2025 10:37

already done thro it's proxy Pakon India


PERUMAL C
ஜூன் 23, 2025 15:26

I agree shankar reply and Panristhan and Kullan equipments failed miserably


ஆரூர் ரங்
ஜூன் 22, 2025 09:55

ஷியா ஈரான் ஆபத்தான நாடு. ஆனால் சன்னி பாகிஸ்தான் நண்பனா?. இரட்டை நிலை. ஆனா ஒண்ணு. எந்த அரபு நாடும் ஈரானுக்கு ஆதரவாக சண்டையில் இறங்காது.


Haja Kuthubdeen
ஜூன் 22, 2025 17:37

நண்பா ஹிந்து தர்மம் என்ன போதிக்கிறது..ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஒரு கண்ணில் வெண்ணையும் வைப்பதையா!!அமெரிக்கா அனு ஆயுதம் வைத்திருப்பது மட்டும் அமைதிக்காகவா..அவனை எதிர்ப்பவனை அழிக்கத்தானே...நாளை நம்மையும் மிரட்டமாட்டான் என்றா நம்புகிறீர்.சட்டம் என்றால் எல்லா நாட்டுக்கும் ஒரே சட்டம் இருக்கனும்.


vbs manian
ஜூன் 22, 2025 09:38

மஹாப்ரளயம் ஆரம்பம்.


ManiK
ஜூன் 22, 2025 09:37

அமைதி அமைதினு சொல்லியே இந்த ஆபரஹாமிக் மதங்கள் உலகத்தை துண்டுதுண்டாக பிரித்து மக்களை அழிக்கின்றனர். அனுகுண்டுகளுடன் இவர்களின் கொட்டத்தையுன் அடக்க வேண்டும்.


Raja k
ஜூன் 22, 2025 09:29

ஈரான் பற்களை பிடுங்கி டம்மி பீசாக்குங்கள்,


SP
ஜூன் 22, 2025 08:54

ஈரான் மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் சொல்கிறார்களோ அத்தனையும் பாகிஸ்தானுக்கும் பொருந்தும் அது இந்த அமெரிக்க அதிபர் கண்ணுக்கு தெரியாது கொஞ்சி கொண்டு இருக்கின்றார்


SANKAR
ஜூன் 22, 2025 10:39

Pak surrendered to US compulsion.Iran did not


சமீபத்திய செய்தி