உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானில் 6 விமான நிலையங்களில் தாக்குதல்; 15 போர் விமானம் அழிப்பு; இஸ்ரேல் அறிவிப்பு

ஈரானில் 6 விமான நிலையங்களில் தாக்குதல்; 15 போர் விமானம் அழிப்பு; இஸ்ரேல் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.ஈரான்- இஸ்ரேல் இடையே, 10 நாட்களாக சண்டை நடக்கிறது. இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்கள், அமெரிக்கர்கள் அவசரமாக சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர். 'அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை ஈரான் முற்றிலுமாக கைவிடாத வரையில், போரை நிறுத்த மாட்டோம்' என்று இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களம் இறங்கியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ar52quxt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0“ஈரானில் உள்ள மூன்று முதன்மையான அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளோம்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மூன்று நிலையங்களும் செயலிழந்ததாக அவர் தெரிவித்தார். இஸ்ரேலின் நீண்ட கால எதிரியான ஈரானுக்கு ஆதரவாக இருந்து வரும் ரஷ்யா, சீனா, துருக்கி போன்ற நாடுகள் அமெரிக்காவை பலமாக கண்டித்துள்ளன.இந்நிலையில், ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானில் ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இஸ்ரேல் அரசின் பாதுகாப்பை உறுதி செய்ய, தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

K.Uthirapathi
ஜூன் 23, 2025 20:53

இஸ்ரேலில் 1200 அப்பாவிகளை, ஹமாஸ் கொன்று குவித்து நூற்றுக் கணக்கான வர்களை பிணைக் கைதிகளாக பிடித்து சென்று அவர்களில் பலரை ஹமாஸ் கொன்றுறதை, "உண்மை கசக்கும் வாசகர் மறந்து விட்டாரா"?


malanguyasin
ஜூன் 23, 2025 14:32

அமெரிக்கா ஆட்டம் விரைவில் முடியும் ஈரானியர்கள் போரை தொடங்கி விட்டால் எளிதில் முடிக்க மாட்டார்கள் ஈராக் ஈரான் போரில் அப்படித்தானே நடந்தது


தத்வமசி
ஜூன் 23, 2025 13:55

சதாம் ஹுசைன், கடாபி இவர்களிடம் இருந்து என்ன வகையான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பதை உலகுக்கு இது வரை தெரிய வரவில்லை. இப்போது ஈரான்.


Ganapathy
ஜூன் 23, 2025 13:53

ஹர் ஹர் மஹாதேவ்


Sekar
ஜூன் 23, 2025 13:34

எதற்காக இந்த போர்? இந்த போரின் முடிவு என்னவாக போகிறது? இந்த போரினால் யாருக்கு என்ன லாபம்? ஒரு நாட்டின் அரசனாக பிரதமரோ அல்லது அதிபரோ அந்த நாட்டின் மக்களுக்கு அமைதியாக வாழ வழி செய்ய வேண்டும். இங்கு அறியாமையால் வல்லரசுகளின் வளர்ப்பு நாய்கள் போல் தன் மக்களை பற்றி சிந்தனை செய்யாமல் போரில் ஈடுபட்டு மனிதத்தை கொன்று குவித்து கொண்டிருக்கும் இந்த அறிவிலிகளை என்ன செய்வது? பரிணாம வளச்சியின் காரணமாக மனிதன், அரக்க குணம் கொண்டு மனித உருவில் வேறு ஒன்றாக மாறி கொண்டிருக்கிறான் என தோன்றுகிறது. நாம் வாழும் இந்த உடல், நம்முடன் இருக்கும் உறவு, பதவி, பணம், நிலம் என எதுவும் நிரந்தரமில்லை எனபதை எப்பொழுதும் உணர்வான். நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய வாழ்க்கை நெறி முறைகளை பின்பற்றி ஆன்மீக வழியில் இந்த உலகை அழைத்து செல்ல வழிகாட்டிகள் இப்பொழுது தேவை.


உண்மை கசக்கும்
ஜூன் 23, 2025 13:27

மிக பெரிய அராஜகம் ட்ரம்பும் நெத்தன்யாஹும் நடத்துவது. மற்ற எல்லா நாடுகளும் வாயை மூடிக்கொண்டு இருப்பது ஒரு அருவருப்பான செயல்.


Ganapathy
ஜூன் 23, 2025 13:57

வெட்க்கும் வகையில் காட்டுமிராண்டிகளையும் மிஞ்சி குழந்தைகளையும் பெண்களையும் நிரபராதிகளையும் கொலை செய்து மகிழும் ஒரு இஸ்லாமிய மதவாத கோழை


Rangarajan Cv
ஜூன் 23, 2025 13:57

This is not the first time US is doing. IRaq was destroyed in the name of WMD. Finally what weapons US got? Nothing. Countries which do not toeing their dictator bound to face this humiliation


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை