வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இவர்கள் தலைமை பண்புக்கு தகுதி இல்லாதவர்கள் என்றே தோன்றுகிறது வெளி நாடுகளில் வேலை செய்யும் பல தொழிலாளர்கள் தனது வாழ்க்கையை தொலைக்கின்றனர் பணத்திற்காக மனைவி, பிள்ளைகளை, நல்லது, கெட்டது, அப்பா, அம்மா, அன்பு, பாசம் எல்லோரையும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு அங்கு போய் போனில் குடும்பம் நடத்துகிறார்கள் சில நேரங்களில் போன் பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை அதெல்லாம் இவர்களுக்கு எங்கே தெரிய போகிறது இவர்களுக்குத்தான் பணம் கொடுத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்ற திமிர் உள்ளதே...
நம்மூர் 100 நாள் வேலை திட்டத்தில் வாரத்திற்கு ஒரு மணி நேரம்கூட வேலை செய்யாமல் work-life balance கடைபிடிக்கிறார்கள்
எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் அவர்கள் தன் மனைவியின் முகத்தை பார்க்க பிடிக்காத காரணத்தினால் அவர் வேண்டுமானால் வாரத்திற்கு 90 மணி நேரம் பணியாற்றலாம். அவரைப் போன்றே மற்றவர்களும் பணி செய்ய வேண்டும் என்பது முட்டாள்தனமான கருத்து ஆகும். இவர் கூறியது இந்த உலகத்தில் எத்தனையோ ஆண்கள் தன் மனைவிக்காகவும் எத்தனையோ மனைவிகள் தன் கணவனுக்காகவும் பரஸ்பரம் அன்பு பரிமாறிக் கொண்டு இக்கட்டான சூழ்நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர். இவரது கருத்து அவர்களையெல்லாம் கொச்சைப்படுத்துவது போல் அமைந்துள்ளது .
Points by Kasimani Baskaran is very relevant and appropriate.
இவங்களுக்கு மனைவி மக்களை பார்க்க விருப்பதில்லை. வேலை பார்பவர்கள் எல்லாம் யந்திரம் இல்லை. மனிதகர்ளுக்கு ரெஸ்ட் வேண்டும். குறிப்பிடும் அதிபர்களுக்கு வேலை செய்ய நிறைய ஆட்கள் இருகுகிறார்கள். வீட்டிக்கு போக தேவை இல்லை. அவர்கள் வேண்டும் என்றால் அலுவலத்தில் தூங்கி கொள்ளலாம். பெரிய பதவியில் இருக்கிறோம் என்று ஏதவு உலர கூடாது. அவர்கள் வீட்டில் ஏன்னா நடப்பது என்று அவர்களுக்கு தெரியாது. கேட்டு பாருங்கள் மகன், மகள், கிராண்ட் சன் கிராண்ட் டுக்த்டேர் daughter என்ன பண்ணுகிறார்கள். இவர்கள் கவனிக்காத காரணத்தால் குடும்பம் சரியான பாதையில் செல்லாமல் வேறு டிசையில் செல்கிறார்கள். எக்ஸ்ட்ரா வேலை செய்தல் ஓவர் தடவை இருக்கிறது. அதனை ஒழுங்காக கொடுப்பதில்லை. ஓவர் தடவை இரண்டு மடங்கு சலரி கொடுக்க வேண்டும். அதற்கு பதிலாக வேறு தினத்தில் லீவு எடுத்துக்க சொல்கிறார்கள். மேலும் அந்த சமயத்தில் வேறு தினத்தில் எடுக்க சொல்கிறார்கள். மேலும் கம்பெனி உயர பல வழிகள் இருக்கு. ஏன் உயர் அதிகாரிகளுக்கு கணக்கில் அடங்கா உயுதியும் கொடுக்குகிறர்கள். இது ஒரு மறைமுக வருமான வரி ஏமாற்று.
இது வெட்டியான ஒரு விவாதம். அடிப்படையில் எல்லா வேலைக்கும் சில அனுகூலங்களும், கேடுகளும் இருக்கத்தான் செய்யும். அனைத்து வேலைகளுக்கும் தேவையான தரமான கல்வி, பயிற்சி சிறப்பாக கொடுக்கப்பட்டால் வேலையில் சிக்கல் குறையும், மன அழுத்தமும் குறையும். தொடர் கற்றல் மிக அவசியம். கேடுகள் உள்ள வேலைகளுக்கு சம்பளம் அதிகமிருக்க வேண்டும் அல்லது அதை இயந்திரமயமாக்க வேண்டும். கொண்டாட்டம், தூக்கம் மற்றும் ஓய்வும், போதிய புத்துணர்ச்சியும் வேலைக்கு மிக அவசியம். ஐரோப்பிய நாடுகள் ஓய்வுக்கு, ஒய்வு கால பயணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பல நாடுகளில் தொடர்ச்சியாக 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய முடியாது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 8 மணி நேர வேலை, 8 மணி நேரம் குடும்பம் / நண்பர்களுடன் களிப்புற்று இருத்தல் / 8 மணி நேர தூக்கம் சட்டப்படி கொடுக்கப்பட வேண்டும். 90% நல்ல ஆரோக்கியத்துடன், மன நலத்துடன் இருக்கிறார்கள். 75க்கு மேல் வயதாகும் எனது நண்பர் பலர் 40 வயது போல இளமையுடன் இருக்கிறார்.
இதென்ன பிரமாதம், வடகொரியாவின், கைதியானவர்கள் 120 மணித்தியாலங்களுக்குமேல், அரபுநாடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்கள் 140 மணித்தியாலம் வேலை செய்யிறாங்க,
இது நமக்கு தெரியாதா என்ன? எல்லா தமிழக ஒன்றீய அரசு பணியாளர்களும் வாரம் பத்து மணிநேரம் வேலை செய்தால் பெரிது. அதில் எட்டு மணிநேரம் கையூட்டு வாங்கி அதை பகிர்வதில் சென்றுவிடும். போட்ட பணத்தை எடுக்க வாழ்நாள்முழுவதும் இப்படியே..
மூன்றாம்தர / நான்காம் தர ஊழியர்கள் எத்தனை மணி நேரம் வேலை வாங்கப் படுகிறார்கள் என்ற கணக்கை பாருங்கள் அது வாரம் 72 மணிக்கு மேல்தான் என்றிருக்கும் காலை ஆறு மணிக்கு பணியிடத்துக்கு வந்துவிடும் பணியாளர்களும் உண்டு காலை பத்து மணிக்கு வாசலில் வந்து அலுவலக கார் காத்துக் கிடக்கும் மேலாதிக்க அதிகாரிகளும் உண்டு என்பதை நினைவில் கொள்வார்களா? அதுபோல இரவு ஒன்பது மணிக்கு மேலும் சுபர்பன் ரயில்கள் ஏன் நிரம்பி வழிகிறது என்று ஊடகங்கள் ஆராயுமா?
இந்திய ஊழியர்கள் வேலை செய்பவன் செய்துகொண்டே இருக்கவேண்டும் ,வேலை செய்யாத ஊழியர்கள் வேலைசெய்பவனின் வேலையை தாங்கள் செய்ததாக கூறுவார் அதாவது திருடி கொண்டே இருப்பர்
18 பண்டிகை விடுமுறை நாட்கள், 104 வார இறுதி நாட்கள், 30 நாட்கள் வருட விடுமுறை 12 தற்செயல் விடுமுறைகள். மொத்தம் 164 நாட்கள். அப்புறம் 15 நாட்கள் நோய்வாய்ப்பட்ட விடுப்புகள். வருடத்தில் 185 நாட்கள் வேலை செய்யும் அரசு ஊழியர்கள் வாரத்தில் சராசரியாக 20 மணிநேரம் தான் வேலை செய்கிறார்கள்.