உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம் தீவிரம் : டிரம்ப் மீது கலிபோர்னியா கவர்னர் வழக்கு

லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம் தீவிரம் : டிரம்ப் மீது கலிபோர்னியா கவர்னர் வழக்கு

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது தொடர்பாக அங்கு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக அதிபர் டிரம்ப் மீது கலிபோர்னியா கவர்னர் வழக்கு தொடர்ந்துள்ளார்அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்ட​விரோத​மாக​ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் மேற்கொண்ட கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.போராட்டத்தை கட்டுப்படுத்த என்.ஜி., எனப்படும் தேசிய காவல் படை போலீசாரை அனுப்பி வைத்து டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.இந்நிலையில் அதிபர் டிரம்ப் அரசின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த கலிபோர்னியா கவர்னர் கவின் நியூஸ்கம் உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் போராட்டக்கார்களுக்கு எதிராக 2000 தேசிய காவல் படை போலீசாரை குவித்தது சட்ட விரோதம் என தனது கண்டனத்தை ‛‛எக்ஸ்'' தளத்தில் பதிவேற்றினார். இது வைரலாகி வருகிறது.

டிரம்ப் அறிக்கை

தேசிய பாதுகாப்பிற்காகவும், போராட்டத்தை கட்டுப்படுத்திடவும் அங்கு 2000 போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக கலிபோர்னியா கவர்னரும், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரும் செயல்படுகின்றனர். இது சரியானது அல்ல என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜூன் 10, 2025 04:06

கள்ளக்குடியேறிகள் வெளியேறினால் கலிஃபோர்னியாவில் பல தொழில்கள் நொடித்துப்போகும். சிறிது சிறிதாக தீர்க்கவேண்டிய பிரச்சினையை தடாலடியாக தீர்த்து விட முடியாது.


Natarajan Ramanathan
ஜூன் 10, 2025 05:54

கலிபோர்னியா மாகாணத்தில் கள்ள குடியேறிகள் மிக அதிகம். டிரம்ப் நடவடிக்கை மிகவும் சரியானதே.


Tiruchanur
ஜூன் 09, 2025 23:14

அந்த ஊர் மம்தா பானர்ஜீ போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை