உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் அழைப்பை ஏற்க மறுத்தார் மோடி; ஜெர்மனி பத்திரிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்

டிரம்ப் அழைப்பை ஏற்க மறுத்தார் மோடி; ஜெர்மனி பத்திரிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்

பெர்லின்: இந்தியப்பொருட்களுக்கு வரி விதித்த விவகாரம் மோதலாக மாறியுள்ள நிலையில், நான்கு முறை அமெரிக்க அதிபர் டிரம்ப் போனில் பேச முயற்சித்தும், பிரதமர் மோடி ஏற்க மறுத்து விட்டார் என்று ஜெர்மனி நாட்டு பத்திரிகை பரபரப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.உக்ரைன் போரை நிறுத்த முயற்சி மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். கூடுதலாக, அபராத வரி 25 சதவீதமும் விதித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dfc1nqdj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்காவின் செயல், எந்த வகையிலும் நியாயமற்றது என்று கடும் ஆட்சேபம் தெரிவித்ததுடன், தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவோம் என்றும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.இதனால் கடந்த 25 ஆண்டுகளாக மேம்பட்டு வந்த இந்திய- அமெரிக்க நல்லுறவு சீர் கெட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் இருந்த நம்பிக்கை போன நிலையில், ஒருவரை ஒருவர் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்க அமைச்சர்களும் அதிகாரிகளும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம், இந்தியா முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி, 'அமெரிக்க நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும்' என்கிற உணர்வு ஏற்பட தொடங்கி இருக்கிறது.இத்தகைய சூழ்நிலையில், இந்திய பிரதமர் மோடியிடம் பேச அதிபர் டிரம்ப் முயற்சித்தார். சமீப வாரங்களில் நான்கு முறை டிரம்ப் பேச முயற்சி மேற்கொண்டும், இந்திய பிரதமர் பேச மறுத்து விட்டார் என்று ஜெர்மனி நாட்டு பத்திரிகையான பிராங்க்பர்ட்டர் ஆல்ஜெமின் (எப்ஏஇஸட்) செய்தி வெளியிட்டுள்ளது.இந்திய பிரதமரின் செயல், அமெரிக்க அதிபர் மீது ஏற்பட்டுள்ள கோபத்தை காட்டுவதாக உள்ளது என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.பெர்லின் நகரை தலைமையிடமாக கொண்ட குளோபல் பப்ளிக் பாலிசி இன்ஸ்டிட்யூட் என்ற நிறுவனத்தின் இயக்குனர் தார்ஸ்டன் பென்னரும் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.டிரம்ப், ஏற்கனவே வியட்நாம் அதிபருடன் போனில் அரைகுறையாக பேசி விட்டு, வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாமலேயே ஏற்பட்டு விட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்தவர்.அதே போன்ற சதி வலையில் தாமும் சிக்கி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, இந்தியப் பிரதமர், அமெரிக்க அதிபருடன் பேசாமல் தவிர்ப்பதாகவும், அந்த இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Ragavan Poovizhi
ஆக 27, 2025 09:24

அனைத்தூ செய்திகளையும் அரசு வெளியிடவேண்டிய அவசியமில்லை


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 27, 2025 02:16

அமெரிக்கா வந்து பேசுங்கன்னு ஜீயை கூப்பிட்டிருந்தால் ஒடனே பிளேனை போட்டு கெளம்பீருப்பாரோ? அட போனில் தைரியமா பேச வேண்டியது தானே, என்ன பயம்?


sivan
ஆக 27, 2025 01:38

இப்ப புரியுதா? மாபெரும் இந்திய தேசத்தின் மாட்சிமை பொருந்திய பிரதமர்.. உம்மை போல ஆகாவழி திராவிட கூட்டத்தின் விமரிசன எல்லைக்குள் அடைபட்டுக் கிடைக்கவில்லை. அவரின் எல்லை வேறு இந்தியாவில் அவர் செயல் பேசப்பட்டாலும் இல்லாவிடினும் அவர் உலக அளவில் பேசப் படுவார். நீ உன் வீட்டு புழக்கடைக்குள் உட்கார்ந்து கொண்டு .. மோடி என்ன பெரிய இவரா? ஜெயசங்கர் பெரிய இவரா? என்று கண்டபடி உளறித் திரியலாம். பைத்தியங்களை சமூகம் கண்டு கொள்வதில்லை. தமிழகத்தில் தி ராடர்களின் நிலையும் அதுவே


Ramesh Sargam
ஆக 27, 2025 00:35

டிரம்ப்பின் திமிரை அடக்க மோடிஜிக்கு மற்றநாடுகள் ஆதரவு தரவேண்டும்.


ரங்ஸ்
ஆக 26, 2025 21:28

ஐயோ, வடை போச்சே நிலமை தான் ட்ரம்ப்க்கு .


venugopal s
ஆக 26, 2025 21:24

ஜெர்மனி பத்திரிகைக்கு கிடைத்த செய்தி பிரதமர் மோடி அவர்கள் செய்யாததைக் கூட செய்தது போல் காட்டும் பாஜக ஆதரவு ஊடகங்களுக்கு கூட எப்படி கிடைக்காமல் போனது? நம்பும்படி இல்லையே!


Ganapathy
ஆக 26, 2025 22:42

காங்கிரஸ்காரர்களுக்கு ஜெர்மனி எங்கிருக்கிறது எனத் தெரியுமா?


திகழும் ஓவியன், Ajax Ontario
ஆக 27, 2025 00:31

200 koovalu க்கு gummidipoondi தாண்டினால் எந்த ஊர் இருக்கு அப்டின்னு தெரியாத தற்குறி. இதுல ஜெர்மனி பத்தி கூவுராண்டா...


Rangarajan Cv
ஆக 26, 2025 21:03

Seems to be fictitious. Why should he refuse the call ? Unable to digest.


இந்தியன்
ஆக 26, 2025 20:45

போகப் போகத் தெரியும்... ட்ரம்ப் ஒரு டீல் மேக்கர்.


Sun
ஆக 26, 2025 20:41

டிரம்ப் தற்போதைய மத்திய அரசை கவிழ்த்து விட்டு அவனுக்கு ஆமாம் சாமி போடும் பலவீனமான மத்திய அரசை கொண்டு வர முயல்கிறார். அதுதான் சமீபத்திய பப்பு அன் கோவின் ஆட்டம். ஒரு வேளை மோடி பேசினால் அதை ரெகார்ட் செய்து பொது வழியில் வெளியிடக் கூட தயங்க மாட்டார். அமெரிக்க அதிபர் என்றாலே ஒரு கெத்து எப்போதும் உண்டு. ஆனால் தற்போதைய அதிபர் கேடு கெட்ட நாலாம் தர அரசியல் செய்யக் கூடிய நபர். இது எல்லாமே மோடிக்கு நன்றாக வே தெரியும். அதனால் கூலாக டிரம்பின் அழைப்பை தவிர்த்து விட்டார்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 26, 2025 20:40

மே 2025 இந்திய பாக் மீது மேற்கொண்டது குறைந்த காலத்தில் நடந்த ஒரு சிறிய தாக்குதல் மட்டுமே. பாக் பதிலடி கொடுக்க முயற்சித்ததன் விளைவாக அந்நாடு இரண்டாவது முறை இந்தியாவால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. அதன் விளைவாக பாகிஸ்தானின் வேண்டுதலின் பேரில் பன்னாட்டு தலைவர்கள், குறிப்பாக அமெரிக்க அதிகாரிகள், கண்டிப்பாக இந்தியாவுடன் பேசியிருப்பார்கள். ஆனால் அவ்வளவு டென்ஷனுக்கு இடையே பிரதமர் மோடி ஒவ்வொரு நாட்டு அதிகாரிகளிடமும் நேரடியாக பேசியிருப்பார் என்று எண்ணுவதே தவறு. இந்த நிலையில் "இந்தியா டிரம்ப்பின் மிரட்டலுக்கு பயந்து பின்வாங்கிட்டது" என்று சொல்வது கேலிக்கூத்து. நேரு ஐநா சபைக்கு காஷ்மீர் பிரச்னையை கொண்டு சென்றது பெருந்தவறு என்பதால் இந்தியா அரசு, அதிலும் குறிப்பாக பாஜாக அரசு, பாக் பிரச்சனையில் மூன்றாம் நபர் தலையீட்டை எப்போதுமே விருப்பியதில்லை. எனவே பொதுஅறிவுள்ள எவரும் டிரம்பின் கூற்றை உளறலாகத்தான் பார்ப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை