உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மியான்மரில் ராணுவ தாக்குதல்; குழந்தைகள் உட்பட 40 பேர் பலி

மியான்மரில் ராணுவ தாக்குதல்; குழந்தைகள் உட்பட 40 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நைப்பியிதோ: மியான்மரில் பவுத்த மத விழாவில் ராணுவம் குண்டுமழை பொழிந்ததில் குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர்.மியான்மரில் அரசுக்கு எதிராக சின் மற்றும் ராக்கைன் ஆகிய மாநிலங்களில் அராகன் கிளர்ச்சிப் படை செயல்பட்டு வருகிறது. இந்த படை, தனிநாடு கோரி பல ஆண்டுகளாக அரசு ராணுவத்துடன் போர் நடத்தி வருகிறது.இந்நிலையில், மத்திய மியான்மரின் சாங் யூ நகரில் பவுத்த மத திருவிழாவுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் கிளர்ச்சிப்படை ஆதரவாளர்கள் என்று கருதிய மியான்மர் ராணுவத்தினர் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், குழந்தைகள் உள்பட 40 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.தாக்குதல் நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, வெடிகுண்டு தாக்குதல் நடக்க இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கூட்டத்தில் இருந்த மூன்றில் ஒரு பங்கு மக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் ஏராளமானோர் உயிர் பிழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை