வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மத்திய அரசு இதையே காரணம் காட்டி இஷ்டத்திற்கு பெட்ரோல் விலையை ஏற்றி விடலாம்!
இன்னும் இந்தியா மாற்று எரிசக்திக்கு மாற வெகுகாலம் பிடிக்கும்போல தெரிகின்றது . சீனாவில் பெரும்பாலும் பாட்டரி மூலம் இயங்கும் கார் மற்றும் பைக் அதிகம். அதற்கான லித்தியம் அவர்கள் நாட்டிலே கிடைக்கிறது. தற்சார்பு உள்ள நாடாக சீனா மாறிவிட்டது. ஆகவே இந்தியாவும் இந்தமாதிரி தற்சார்பு அடையவேண்டும். கச்சா எண்ணெய் வாங்குவதால் நம்முடைய அந்நிய செலாவணி அதிகமாக குறைகின்றது. இது இந்தியாவின் பொருளாதார நிலையை பாதிக்கும். மேலும் சீனா போல நீர்வழி தடங்களை அதிகம் பயன்படுத்தும்போது எரிபொருள் செலவு குறையும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி குறையும் தொழிற்ச்சாலைகளில் உற்பத்தி ஆகும் அடக்க விலை குறைவதால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். பணவீக்கம் கணிசமாக குறையும். கச்சா எண்ணெய் முடிந்தவரை இறக்குமதி செய்வதை இந்தியா அரசு படிப்படியாக குறைக்கவேண்டும்.
பாக்கிஸ்தான் இஸ்ரேல் அணு ஆயுதம் வெய்திருக்குது ஏன் ஈரான் வெய்திருக்க கூடாது?
ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்தால் அமெரிக்காவிற்கு என்ன? பாகிஸ்தானே அணு ஆயுதம் வைத்துள்ளது. இதனை பொதுவாக எல்லோரும் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாடு என்று தான் நினைப்பார்கள். ஆனால் சவுதிக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாடு தான் இது. சவூதி ஆயில் உற்பத்தி மற்றும் விலை இதன் மூலம் நிலைப்படுத்தப்படுகின்றது. ஈரானின் எண்ணைய் சந்தைக்குள் அதிகளவு வந்துவிட்டால் சவூதி ஆயில் விலை குறைந்துவிடும்.
இது அமெரிக்கா அவிழ்த்துவிடும் பொய்யாகத் தெரிகிறது நாடுகளும் கச்சா எண்ணெய்ச் சுத்திகரப்புக் கம்பெனிகளும் அதிர்ச்சியடைந்து panic buying செய்யாமல் இருப்பது நல்லது