உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய விசா நிறுவனங்களை தணிக்கை செய்ய உத்தரவு

இந்திய விசா நிறுவனங்களை தணிக்கை செய்ய உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: இலங்கைக்கு பயணிப்பவர்களுக்கு, 'அவுட்சோர்சிங்' முறையில் விசா வழங்கும் நடைமுறையை மேற்கொள்ளும் இந்திய நிறுவனங்களை தணிக்கை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அனுர குமார திசநாயகே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, புதிய அதிபராக அவர் சமீபத்தில் பொறுப்பேற்றார். இதையடுத்து, இலங்கை வருபவர்களுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பழைய விசா நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள துபாயை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வந்த வி.எப்.எஸ்., நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறையில், முறைகேடு இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டது.இந்த முறைகேடு தொடர்பாக, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஆய்வு மேற்கொள்ள இலங்கை அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இலங்கைக்கு அவுட்சோர்சிங் முறையில் விசா வழங்கும் இந்திய நிறுவனங்களான ஜி.பி.எஸ்., டெக்னாலஜி, ஐ.வி.எஸ்., குளோபல், எப்.இசட்.சி.ஓ., ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, அந்நாட்டு பொது பாதுகாப்பு அமைச்சர் விஜிதா ஹெராத் நேற்று உறுதி செய்தார். இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாமல் இருந்த இலங்கை குடியுரிமை வழங்கல் துறையின் கட்டுப்பாட்டு இயக்குனர் ஹர்ஷா இலுக்பாடியா கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
செப் 28, 2024 07:07

பல நாடுகளில் வாழ்க்கைச்செலவினங்கள் மிக அதிகம். அந்த நாடுகளில் வரும் விசா விண்ணப்பங்களை பரிசீலித்து விசா வழங்க மனித வளம் அரசால் கொண்டு செல்வது சாத்தியமில்லை. உதாரணத்துக்கு சிங்கப்போரை எடுத்துக்கொண்டால் வீட்டு வாடகை 3000, இரண்டு பிள்ளை இருந்தால் பள்ளிக்கட்டணம் ஆளுக்கு 1000. சாப்பாடு, போக்குவரத்துக்கு 2500 க்கு மேல் ஆகிவிடும். 8000-9000 க்கு மேல் சம்பளம் கொடுத்தால் மட்டுமே ஒரு அரசு ஊழியரை கொண்டு வர முடியும். ஆனால் அதையே தனியாரிடம் விட்டால் அவர்கள் குடும்பம் குட்டி இல்லாத இளைஞர்களை வேலைக்கு வைப்பார்கள், பல நாட்டு தூதரகங்களுக்கு வேலை செய்வார்கள். செலவினங்கள் குறைவு. இந்திய அரசு செய்தது பொருளாதார ரீதியாக சரியான முடிவு.


புதிய வீடியோ