உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி

பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி

புதுடில்லி : பயங்கரவாத தாக்குதல் நடத்திய நம் அண்டை நாடான பாகிஸ்தான் மீது, பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்கும் தாக்குதலை மத்திய அரசு தொடர்கிறது. அந்த நாட்டில் இருந்து அனைத்து வகை இறக்குமதிக்கும் தடை, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்களுக்கு அனுமதி மறுப்பு, தபால் மற்றும் பார்சல்களுக்கு அனுமதி இல்லை என, மத்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது.அதே நேரத்தில், பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நோக்கிலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, துாதரக உறவு துண்டிப்பு, விசா மறுப்பு என, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு, மேலும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், ஒரே நாளில் மூன்று அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

இறக்குமதிக்கு தடை

இதன்படி, அந்த நாட்டில் இருந்து எந்த ஒரு இறக்குமதிக்கும், அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தாலும் அனுமதி மறுப்பதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் நேற்று அறிவித்தது.ஏற்கனவே, 2019ல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 200 சதவீத வரியை மத்திய அரசு நிர்ணயித்தது. இதனால், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஏற்கனவே மிக மிக குறைந்த அளவே இருந்தது.அதுவும், உலர் பழங்கள், ஹிமாலயன் உப்பு போன்ற ஒரு சில பொருட்கள் மட்டுமே, அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. அதே நேரத்தில் நம் நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கான ஏற்றுமதி தொடர்ந்தது. கடந்த 2024 - 25 நிதியாண்டில் பாகிஸ்தானுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 3,786 கோடி ரூபாய். அதே நேரத்தில் இறக்குமதி 3.55 கோடி ரூபாய். இதன்படி பார்க்கையில், பாகிஸ்தானின் பொருட்களை சார்ந்து நம் நாடு இல்லை. ஆனால், இந்திய பொருட்களை பாகிஸ்தான் பெரிதும் நம்பியிருந்தது. அதனால், அரசின் இந்த புதிய அறிவிப்பால், நமக்கு பெரிய பொருளாதார பாதிப்பு இருக்காது. ஆனால், பாகிஸ்தானுக்கு பெரிய அடியாக இருக்கும்.

செல்ல வேண்டாம்

பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடியை, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கொடுத்துள்ளது.பாகிஸ்தான் கொடியுடன் கூடிய எந்த ஒரு வணிக கப்பல்களும், இந்தியாவில் உள்ள எந்த ஒரு துறைமுகத்துக்குள்ளும் நுழைய உடனடி தடை விதித்து, அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதுபோல, நம் தேசிய கொடியுடன் கூடிய எந்த ஒரு கப்பல்களும், பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

பார்சல் அனுப்ப முடியாது

நாட்டின் பாதுகாப்பு கருதி, பாகிஸ்தானில் இருந்து, தபால் அல்லது பார்சல்கள் நம் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்து, மத்திய தொலைதொடர்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஆகாயம், சாலை என, எந்த மார்க்கத்திலும், பாகிஸ்தானில் இருந்து தபால்கள் மற்றும் பார்சல்களை ஏற்க மாட்டோம் என, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதுபோல, இங்கிருந்தும், பாகிஸ்தானுக்கு பார்சல்களை அனுப்ப முடியாது.நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த தடை உத்தரவுகள் அமலில் இருக்கும் என, மூன்று அமைச்சகங்களும் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

MUTHU
மே 04, 2025 13:20

பிரிவினையின் பொழுது அங்கிருந்து இங்கே வந்தவர்கள் எல்லாரும் அந்த பகுதியின் வந்தேறிகள் என்றும் பிரிவினையின் பொழுது தங்கள் சொந்த ஊரான இந்தியாவிற்கு தாங்களே சென்று விட்டனர் என்றுதான் அவர்கள் வரலாற்று புத்தகங்களில் உண்டு. ஆனால் உண்மை அதுவல்லவே.


Rajah
மே 04, 2025 11:43

. பாகிஸ்தான் நாட்டுடன் போரிடுவதற்கு முன்னர் இங்குள்ள பாகிஸ்தானியர்களை அழிப்பதே நல்லது.


RAMAKRISHNAN NATESAN
மே 04, 2025 13:45

அவர்களுக்கு முதலில் மதம் ...... அடுத்தது குடும்பம் ..... பிறகுதான் வேறு எதுவும் ......


India our pride
மே 04, 2025 11:36

ஹிந்துக்களுக்கு எதிரான மத வெறி அதிகம். அவனது பாட புத்தகங்களில் ஹிந்துக்கள் கொடுமை செய்ததால் நாட்டின் பிரிவினை ஏற்பட்டது என்று எழுதுகிறான். ஜின்னாஹ் மட்டுமே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், காந்தி போஸ் என்பவர்களை பற்றி அவர்களது வரலாற்று புத்தகத்தில் இல்லை. முஸ்லீம் லீகு கட்சியில் ஜோகேந்திர நாத் மண்டல் என்ற SC மினிஸ்டர் ஜின்னாஹ் அமைச்சரவையில் இருந்தார். பாகிஸ்தானில் நடக்கும் சாதி மற்றும் மத வெறி கொடுமைகளை பார்த்து இந்தியாவிற்கு உயிர் தப்பி ஓடி திரும்பி வந்தார்.


Rajah
மே 04, 2025 11:34

அதேசமயம் நம் நாட்டிலுள்ள பாகிஸ்தான் அடிவருடிகளையும் அழிக்க வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 04, 2025 10:45

இருந்தாலும் திமுகவின், காங்கிரசின் கொத்தடிமைகள்தான் கேட்டு வருகிறார்கள் நமது தாக்குதலுக்கு தாமதம் ஏன் என்று .....


Yes your honor
மே 04, 2025 09:18

இந்துவா என்று ஆடையை களைந்து பார்த்து எகத்தாளமாக் கொன்றான் அல்லவா? இவங்களை கதற அடித்துதான் வேடிக்கை பார்க்கவேண்டும். திரைப்பட வசனங்களில் வருவதுபோல, உன்னை சாவடிக்கக் கூடாது, அதுக்கும் மேல ஒரு துன்பத்தை கொடுக்க வேண்டும் என்பதுபோல, மோடிஜியின் அரசின் இந்த சைலன்ட் போர் வியூகம் மிக மிக வலிமையானது. இப்பொழுதுள்ள நடவடிக்கைகளுக்கே போக்கிரிஸ்தானின் பொருளாதாரம் பெரிய அளவில் அடிவாங்கும். இந்துக்கள் வேண்டாம், இந்தியாவில் இந்துக்கள் தயாரிக்கும் பொருட்கள் மட்டும் இந்த கேடுகெட்ட மூர்க்கப் பயலுகளுக்கு வேண்டுமா? அடுத்து மருந்து, காய்கறிகள், அரிசி, கோதுமை உள்ளிட்ட அதிஅத்யாவசிய பொருட்கள் அனைத்தின் சப்ளையையும் இந்தியா முழுமையாக நிறுத்தும் பொழுது, பக்கிதேசத்தில் உள்நாட்டு கலகம் மூளும், அவர்களே அவர்களுக்குள் ஒருவன் இன்னொருவனின் கழுத்தை அறுத்துக் கொள்வான்கள். இந்த மூர்க்கனுக்களுக்கு தெரிந்ததெல்லாம் கழுத்தை அறுப்பது தானே? குடிக்க தண்ணீர் இல்லை, உண்ண கோதுமையில்லை என்னும் சூழ்நிலை வரும் பொழுது ரத்த ஆறு ஓடும் என்று உதார் விட்டார்களே, அது அங்கு நடக்கும்.


SENTHIL NATHAN
மே 04, 2025 07:59

பகீசுதாணியர்கள் மூருக்கர்கள். இந்த நடவடிக்கைக்கு அவர்கள் பயப்பட மாட்டார்கள். ஏவுகணை சோதனை செய்து தங்கள் தைரியத்தை காட்டுவார்கள்


Kulasekaran A
மே 04, 2025 07:13

இதுதான் சரியான பதிலடி !


Palanisamy Sekar
மே 04, 2025 07:12

கத்தியின்றி ரத்தமின்றி வருகுது பார் யுத்தம் ஒன்று என்று படித்திருக்கின்றோம். ஆனால் அதனை அப்படியே செய்து காட்டிவிட்டது மத்திய ஆளும் மோடிஜியின் அரசு. இதுதான் ராஜதந்திரம் எனப்படுவது. பொருளாதாரத்தில் ஒரு நாட்டை சீரழிப்பது என்பது இதுதான். இதன் பிறகு பாகிஸ்தானை தாக்குவது என்பது மிக எளிது. அல்லது உள்நாட்டு போரை உருவாக்கி அதன் பிறகு சரணடைய செய்வதும் இது போன்ற நடவடிக்கைகளில் முதன்மையானது. போர் வந்தாலும் கூட பாகிஸ்தான் ஒரே ஒருவாரம் தாக்குபிடுக்குமா என்பதே கேள்விக்குறி. அதற்கு காரணம் பொருளாதாரத்தில் வீழ்ச்சிக்கான வைத்ததுதான். அதனை கனகச்சிதமாக மத்திய அரசாங்கம் செய்துகாட்டுகின்றது. நிலையான ஆட்சி கிடையாது. ராணுவ ஆட்சியின் பயம் வேறு. ஆனாலும் தீவிரவாதத்துக்கு துணைபோவது மதவெறியர்களின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் என்பதை அறியலாம். மோடிஜியின் ஒவ்வோர் நகர்தலிலும் சாணக்கியத்துவம் பளிச்சிடுகின்றது. சபாஷ்


Kasimani Baskaran
மே 04, 2025 06:44

முன்னர் இருந்தது போல பாகிஸ்தானை ஜூன் மாதத்தில் அந்த FATF சாம்பல் லிஸ்டில் கொண்டு வர கடும் முயற்சி நடப்பதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர்தான் தாக்குதல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுவரை உள்ளூரில் ஒளிந்திருக்கும் தேசவிரோதிகளை அடையாளம் காண்பதிலேயே மத்திய அரசு கவனம் செலுத்தும் என்றும் சமூக வலைத்தளங்களில் தேசவிரோத கருத்து சொல்வோரையும் கண்காணிக்கப்படுகிறார்கள் என்பதையும் அறிக.


சமீபத்திய செய்தி