உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுடன் சுமூகத்தீர்வு பாக்., பிரதமர் வலியுறுத்தல்

இந்தியாவுடன் சுமூகத்தீர்வு பாக்., பிரதமர் வலியுறுத்தல்

இஸ்லாமாபாத : “இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னைகளை அமைதியான முறையில் இருதரப்பும் அமர்ந்து பேசி சுமூகத்தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:இந்தியா - பாகிஸ்தான் இடையே மூன்று போர்கள் நிகழ்ந்துள்ளன. இதன் வாயிலாக, இருதரப்பும் எதுவும் பயனடையவில்லை. எனவே, அண்டை வீட்டார் போல் அமைதியான முறையில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னைகளை அமர்ந்து பேசி, சுமூகத்தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, ஜம்மு - காஷ்மீர் விவகாரம் பற்றியும் பேசி தீர்க்க வேண்டும்.பாகிஸ்தான், அமைதியான நாடு. எனினும், நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அதற்குரிய பதிலடியை ராணுவம் வாயிலாக அளிப்போம். இந்தியாவின் தாக்குதலை எதிர்த்து, நம் நாட்டின் படைவீரர்களும், ஒட்டுமொத்த தேசமும் போரிட்ட விதம் ஒப்பற்றது. நம் நாட்டின் ராணுவ வரலாற்றில் இது ஒரு பொன்னான அத்தியாயம்.இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவினால், பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

murugu
மே 17, 2025 19:28

அண்டை நாடு இல்லை எதிரி நாடு


SUBRAMANIAN P
மே 17, 2025 14:32

நீ ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம். ஒழுங்கா மரியாதையா ஆக்கிரமிப்பு காஷ்மீரை காலி செய்துவிட்டு ஓடிருங்க. இல்லனா உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா னு இருக்குற மொத்த பாகிஸ்தானையும் புடுங்கிட்டு விட்டுருவோம். உங்க மக்களே இந்தியாவுக்குத்தான் சப்போர்டு. ஏற்கனவே பாதி பலுசிஸ்தானுக்கு போயிடுச்சு.


sankaranarayanan
மே 17, 2025 11:15

இந்தியா - பாகிஸ்தான் இடையே மூன்று போர்கள் நிகழ்ந்துள்ளன. இன்னுமா இவர்களுக்கு புத்தி வரவில்லை அமைதியாக அண்டைநாட்டுடன் உறவாடினால் எவ்வளவோ நன்மைகளை அவர்கள் அனுபவிக்கலாம் என்ன எய்வது அங்கே நடப்பது ராணுவ ஆட்சி சும்மா பேச்சுக்காக ஜனநாயக ஆட்சி இந்துயாவில் தயாராகும் பிரம்மோஸ் ஏவுகணைகள் எல்லா நாடுகளும் விலைக்கு வாங்க முன் வருகின்றன பாகிஸ்தான் அரசும் இப்போது இந்தியாவை அந்த ஏவுகணையை விலைக்கு கேட்பதாக கேள்வி வருகிறது ஆனாலி இந்துயா பாகிஸ்தானிட சொல்லிவிட்டதால் இந்தியாவில் தயாரிக்கும் பிராம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானுக்கு விலைக்கு கொடுக்க மாட்டோம் வேண்டுமென்றால் இனாமாக தருகிறோம் பாகிஸ்தானில் எங்கே எப்போது போடவேண்டும் என்று சொன்னாலே போதும் செய்து முடித்துவிடுகிறோம்


c.k.sundar rao
மே 17, 2025 10:38

He should hand over all the terrorist who are wanted by our Indian government and talks should be related to POK only and not Kashmir as the issue is settled long back.


c.k.sundar rao
மே 17, 2025 10:35

He should h


வேணு
மே 17, 2025 10:07

இது சுத்த ஏமாத்து வேலை .... இந்தியாவின் இரண்டு விஷயங்களை .... தீவீரவாதம் pOK .... இரண்டயும் முதலில் முடிக்கவும்


சுந்தர்
மே 17, 2025 08:21

மொதல்ல கெஞ்சிட்டு இப்ப ஏதோ போரில வெற்றி பெற்ற மாதிரி பேசுறானுங்க. எட்றா ப்ரம்மோஸ, அடிரா பாகிஸ்தான.


A P
மே 17, 2025 07:33

சமீப காலத்தில், உலகம் தேடும் பயங்கரவாதிக்கு, ரூபாய் 14 கோடி இனாமாகக் கொடுத்வர். தோல்வியை ஒத்துக்கொள்ளாதவர். தீவிர வாதியை குறி தவறாமல் நம் நாடு தாக்கி அழித்ததற்கு, சம்பந்தம் இல்லாமல் தனது படையை இந்தியா மீது ஏவிவிட்டு, தோல்வி அடைந்த , சமாதானம் பற்றி பேசுகிறார். அறிவிலி. தானும் சேர்ந்து, அந்த தீவிரவாதிகளை அழிக்க துப்பில்ல.


Yes your honor
மே 17, 2025 10:02

திமுகவில் சேர அனைத்து தகுதிகளும் உள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை