உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானில் பணவீக்கத்தால் வெடித்தது போராட்டம்; வன்முறையாக மாறியதில் 3 பேர் பலி

ஈரானில் பணவீக்கத்தால் வெடித்தது போராட்டம்; வன்முறையாக மாறியதில் 3 பேர் பலி

டெஹ்ரான்: தென்மேற்கு ஈரானில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கண்டித்து நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.மேற்காசிய நாடான ஈரானில், 1979ல் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பு சட்டப்படியே அங்கு ஆட்சி நடந்து வருகிறது. பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததும், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்தது. மூன்று ஆண்டுக்குப் பின், அங்கு மீண்டும் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆரம்பத்தில் பொருளாதாரக் கோரிக்கைகளுடன் துவங்கிய போராட்டம், பின்னர் அரசுக்கு எதிரான முழக்கங்களாக மாறியுள்ளன. டெஹ்ரான் மையப் பகுதியில் துவங்கிய போராட்டங்கள், இஸ்பஹான், ஷிராஸ், மஷ்ஹத் உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் பரவியுள்ளது. போராட்டக் காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். பல இடங்களில் போராட்டக் காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். போராட்டங்கள் வெடித்ததிலிருந்து ஏற்பட்ட முதல் உயிரிழப்புகள் இதுவாகும். டெஹ்ரானில் இருந்து தெற்கே 650 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்தில் மோதல்கள், கல்வீச்சு காரணமாக பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

V Venkatachalam, Chennai-87
ஜன 02, 2026 16:11

இது ஒண்ணும் இலங்கையில் நடந்த மாதிரி பெரிசா இல்லே. சாதாரணம் தான். அரசுக்கு பெரிய ஆபத்து இல்லே. டமில் நாட்டுல இது மாதிரி புகைந்து கொண்டு இருக்கிறது. அந்த புகைச்சல கட்டுப்படுத்த அப்ப அப்ப வை கோ நடை பயணம் மாதிரி ரீல் உட்டுகிட்டு இருக்கானுவோ. இந்த தேர்தலில் இவனுங்க தோத்துட்டா தப்பித்து விடுவான்கள். தப்பி தவறி ஜெயிச்சா இவன்கள் இலங்கை ட்ரீட்மெண்ட் ல் இருந்து தப்பிக்க முடியாது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜன 02, 2026 09:53

ட்ரம்ப் அமெரிக்கா அதிபர் வந்த பின்னர் தான் பல நாடுகளில் இது போன்ற போராட்டங்கள் நடக்கின்றன. இதற்கு பின்னால் சிஐஏ இருக்கலாம். இந்திய உளவுத்துறை எச்சரிக்கையாக இருக்க தருணம். இந்திய மக்களும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இது போன்ற போராட்டங்களால் வளர்ச்சி சிதைந்து நாடு ஒரு ஐம்பது வருடங்கள் பின்னோக்கி சென்று விடும். ட்ரம்ப் ஒரு சினிமா கூத்தாடி என்பதை இந்நேரம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கூட ஒரு புதிதாய் முளைத்த ஒரு சினிமா அரசியல் கட்சி உண்டு.


ராமகிருஷ்ணன்
ஜன 02, 2026 09:30

ஈரானில் அமெரிக்க டாலர் செல்லாது என்று அறிவித்து விட்டு வேறு வேலை பாருங்கள். அமெரிக்கவின் டாலர்கள் மற்ற எல்லா நாடுகளிலும் செல்லாது, மதிக்க முடியாது என்று சொன்னால் என்னவாகும்


Karthikeyan
ஜன 02, 2026 05:01

இரானில் இஸ்லாமிய மதம்தான் ஆட்சி செய்கிறது. மனிதம் ஆட்சி செய்வில்லை. பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து ஒரு கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது அங்கே. போராட்டமும் வன்முறையும் நடக்கத்தான் செய்யும்.


SUBBU,MADURAI
ஜன 01, 2026 21:48

Prime Minister Benjamin Netanyahu: The people of Iran should know, Israel stands with you. When Iran is finally free, the Jewish people and the Persian people will finally be at peace May the evil Islamic regime in Iran fall once and for all.


தங்கபாண்டி
ஜன 01, 2026 21:23

என்றைக்கும் போராட்டங்கள் வன்முறையாக மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாது


தியாகு
ஜன 01, 2026 22:07

போராட்டம் என்றாலே வன்முறையில்தான் முடியும் என்று கூட தெரியாத அப்பாவியா இருக்கியே.


SUBBU,MADURAI
ஜன 01, 2026 22:08

எந்த ஒரு நாடும் தன் நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கி ஆளும் போது மக்களின் போராட்டங்கள் கடைசியில் வன்முறையாக மாறத்தான் செய்யும் அதை தடுப்பது கஷ்டம்...


Thravisham
ஜன 02, 2026 09:00

தொண்டர்களை போலீசிடம் உதை வாங்கவைத்துதான் மட்டும் வராத ரயிலின் தண்டவாளத்தில் தலை வைத்து போராடுவது தலக்கு நல்லது.


புதிய வீடியோ