உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் ரஷ்யா, சீனா; அலறும் அமெரிக்கா!

இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் ரஷ்யா, சீனா; அலறும் அமெரிக்கா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரஷ்யா, சீனா தலைவர்களுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், 'இந்தியா - அமெரிக்கா மக்களின் நலன்களுக்காக, இருநாடுகளும் இணைந்து முன்னோக்கி செல்வோம்' என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதால், இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1l6fz6z5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரை சந்தித்து பேசினார். மூன்று தலைவர்களும் அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. மேலும், இந்தியா - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையும், பிரதமர் மோடி, அதிபர் புடின் தலைமையில் நடந்தது. இந்தப் பயணத்தின் போது, சீனா மற்றும் ரஷ்யாவுடன் பிரதமர் மோடி காட்டிய நெருக்கம், அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா மக்களின் நலன்களுக்காக, இருநாடுகளும் இணைந்து முன்னோக்கி செல்வோம் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்; அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான உறவு தொடர்ந்து புதிய உயரத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இது 21ம் நூற்றாண்டின் ஒரு வரையறுக்கப்பட்ட ஒரு உறவாகும். இந்த மாதம், நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் மக்கள், முன்னேற்றம் மற்றும் சாத்தியங்களை நாங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகிறோம்.புதுமை மற்றும் தொழில்முனைவோர் முதல் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் வரை, நமது இரு மக்களுக்கும் இடையிலான நீடித்த நட்புதான் இந்தப் பயணத்தை நீடித்து கொண்டு செல்கிறது. #USIndiaFWDForOurPeople (இந்தியா,அமெரிக்க மக்களுக்காக முன்னோக்கி செல்வோம்) எனும் ஹேஷ்டேக்கைப் பின்தொடர்ந்து, இதன் ஒரு பகுதியாக இருங்கள், எனக் குறிப்பிட்டுள்ளது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Asagh busagh
செப் 01, 2025 18:25

American economy is worth 32 trillion dollars. China, India and Russia are worth 18+4+2 trillions. Unfortunately, even a weaker US still towers over the three countries combined. The truth is far away from optics and news. Let's be grounded and realistic. Even though Trump is acting stupid, India should not accept the power order of China with Russia as a side-kick. Chinese are an enemy state who betrayed us continuously from the 1960s. They are snakes


Moorthy
செப் 02, 2025 16:55

correct


RAMAKRISHNAN NATESAN
செப் 01, 2025 16:04

இந்தியா அமெரிக்காவை ஒதுக்கவில்லை என்றாலும் வேறு பல நாடுகள் ஒதுக்கத்தயார் ....


ASIATIC RAMESH
செப் 01, 2025 14:53

நாம் பேரிக்காய் நாட்டிற்கு எந்தவித முக்கியத்துவமும் தராமல் இருந்தாலே இறங்கி வருவார்கள்.. கண்டிப்பாக விரைவில் நடக்கும். அப்போது தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் நாடுகளுடனான பேரிக்காய் நாட்டின் தொடர்பை ரத்து செய்ய வலியுறுத்தவேண்டும். நம்முடனும் அவர்களுடனும் சமமான நட்பு நமக்கு தேவையில்லை.


gprias
செப் 01, 2025 14:52

இப்படி பேசி பேசியே உடம்ப ரணகளம் அக்கிருவாங்க.


அருண் பிரகாஷ் மதுரை
செப் 01, 2025 14:40

பல ஆண்டுகளாக இல்லாத பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல் எப்படி டிரம்ப் அதிபர் பதவி ஏற்றுக்கொண்டதும் மீண்டும் நடந்தது..இந்திய ராணுவத்திற்கு அமெரிக்க ராணுவ தளவாடங்கள் வாங்க வைக்க டிரம்ப் செய்த சூழ்ச்சி என்றே தெரிகிறது..போர் முக்கிய கட்டத்தை எட்டி நாம் பாகிஸ்தான் ராணுவ நிலைகளை தாக்கிய போது பாக் ஏன் தனது உற்ற நண்பனான சீனாவை விடுத்து அமெரிக்கா உதவியை நாட வேண்டும்..போரில் பாக் தப்பித்தவுடன் எதற்காக பாகிஸ்தான் ராணுவ தளபதி அமெரிக்கா செல்ல வேண்டும்.. பாக் - அமெரிக்கா இடையே பல திரை மறைவு பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது.இனி எந்த நிலையிலும் அமெரிக்காவை நம்ப மோடி தயாராக இல்லை என்பதை அமெரிக்கா உணர துவங்கி விட்டது. அமெரிக்காவின் அழுத்தம் மோடியை அசைக்கவில்லை. ஆனால் மோடியின் மௌனம் டிரம்பை அதிர வைத்துள்ளது...உலகளவில் இந்தியாவின் வியாபார சந்தையை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் நன்கு உணர்ந்துள்ளது..இனி உலகை மோடி வழி நடத்தும் காலம் வரப்போகிறது.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 01, 2025 22:15

நல்ல தெளிவான பார்வை, ஆழமான அர்த்தமுள்ள கருத்து.


Palanisamy Sekar
செப் 01, 2025 14:37

நல்ல அமெரிக்க இந்திய உறவை கெடுத்துவிட்ட ட்ரம்பின் அதிமேதாவித்தனம் இப்போது சீன ரஷ்யாவுடன் இந்தியாவின் நெருக்கம் புதிய சகாப்தத்தை கொடுத்துவிட்டது. அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனம் இனி உலகத்தில் எங்குமே செல்லுபடியாகாது. உலகமே இந்தியாவின் அணுகுமுறையை உற்றுநோக்குகின்றது. அமெரிக்காவுக்கான எதிர்ப்பு இப்போது உலக அரங்கத்தில் அதிகரித்துவிட்டது. மிரட்டல் பாணியெல்லாம் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியோடு போயிற்று. இது புதிய உலகம் புதிய பாதை இந்தியா அதனை உலகத்திற்க்கே பாடமாக சொல்லிவிட்டது. அதனை செய்துகாட்டி மோடி இந்த நூற்றாண்டின் மாபெரும் தலைவராக திகழ்கின்றார்.


திகழ்ஓவியன்
செப் 01, 2025 14:31

உண்மை தான்


திகழ்ஓவியன்
செப் 01, 2025 14:29

என்னய்யா இது கொடுமை ஒரு அதிபருக்கு அந் நாட்டு நலனுக்காக செயல்படும் உரிமை இல்லையா? ட்ரம்ப் விதித்தது பரஸ்பர வரிதானே? மற்ற நாடுகள எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவு வரி விதிப்பது தான் பரஸ்பர வரிகள் என்று அழைக்கபடுகிறது.... அமெரிக்க வாகனங்களுக்கு இந்தியா 100% வரி விதிக்கிறது, அது நியாயமா?


vivek
செப் 01, 2025 16:32

நம்ம முட்டு திகழுக்கு ஒரு ஆஸ்திரியா ஸ்டாம்ப் ஒன்னு, ஆக்சுபோர்டு சிலை ஒன்னு பார்சல்


திகழ்ஓவியன்
செப் 01, 2025 14:27

இந்த வகையான கூட்டு சேர்க்கை உண்மையிலேயே நன்றாக இருக்கிறது. வரும் காலங்களில், இந்தியாவில் பல திடீர் கலவரங்கள் ஏற்படலாம். ஆனால், அதனை மோடி அரசு புரிந்து வைத்திருக்கும். வரும் தேர்தல்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், நிலைமை தலை கீழாகும்.


karupanasamy
செப் 01, 2025 15:02

வரும் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும் 200ரூபாய் ஊபீசுக்களை சுலுக்கெடுப்பார்கள்


சங்கி
செப் 01, 2025 15:33

திருட்டு திராவிட கோணப்புத்தி உனக்கு


வாய்மையே வெல்லும்
செப் 01, 2025 15:56

தூக்கமாத்திரை போட்டுட்டு விட்டத்தை பார்த்து கனவுகாண்பவர்களுக்கு மோடியின் வளர்ச்சியில் வயிறு எரியத்தானே செய்யும். உங்களை பார்த்தல் அந்தோ பரிதாபமுலு


சமீபத்திய செய்தி