உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியாத்: சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கஞ்சா கடத்திய குற்றத்திற்காக, நாட்டின் தெற்கு பகுதியான நஜ்ரானில் 4 சோமாலியர்கள் மற்றும் 3 எத்தியோப்பியர்கள் நேற்று தூக்கிலிடப்பட்டனர். மேலும், ஒரு சவுதி குடிமகனுக்கு, தனது தாயைக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சவுதி அரேபியாவில் 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் 154 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டனர். 2022ல் 19 பேருக்கும், 2023ல் 2 பேருக்கும், 2024ல் 117 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டனர். கடந்த 2024ம் ஆண்டு 338 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.சவுதி அரேபியா 2022ம் ஆண்டு இறுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனையை மீண்டும் அமல்படுத்தியது. இதற்கு முன் மூன்று ஆண்டுகளுக்கு இத்தகைய குற்றங்களுக்கு மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

pmsamy
ஆக 04, 2025 07:26

சட்டங்களில் சிறந்தது சவுதி அரேபியா. இந்தியா அதன் கால் தூசிக்கு நிகராகாது. இந்தியாவில் குற்றம் செய்தவர்களை பல ஆண்டு காலமாக சோறு போட்டு சிறையில் வைத்து வழக்கு நடத்திக் கொண்டிருக்கும் படு கேவலமான ஜென்மங்கள் இந்தியர்கள்.


Venkataraman
ஆக 03, 2025 23:13

இதே மாதிரியான தண்டனையை நமது நாட்டிலும் நிறைவேற்ற வேண்டும். போதை பொருள் கடத்துவது மட்டுமல்லாமல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் செய்வது குறையும். சட்டத்தின் மேல் பயம் வரும். இப்போது சட்டங்கள் மிகவும் பலவீனமாக இருப்பதால் குற்றங்கள் பெருகி விட்டன.


Iyer
ஆக 03, 2025 23:03

போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை நியாயம்தான். ஆனால் இந்த நாடுகளில் - பிடிபடுபவர்கள் பெரும்பாலோர் நிரபராதிகள் தான். மரண தண்டனை கொடுப்பதற்குமுன் - குற்றம் சாட்டப்பட்டவர் முழுவதும் - மனதாலும் உடலாலும் - குற்றத்தில் பங்கெடுத்துள்ளது நிரூபிக்கப்படவேண்டியது மிக மிக அவசியம்


Natarajan Ramanathan
ஆக 03, 2025 22:58

உலகில் உள்ள அனைத்து துலுக்கனையும் தூக்கில் போடும்வரை எந்த கடத்தலும் ஒழியாது.


Ramesh Sargam
ஆக 03, 2025 20:12

மரண தண்டனை கொடூரம்தான். இருந்தாலும் ஒருசில கொடூர குற்றவாளிகளுக்கு இந்த கொடூர தண்டனை கொடுக்கவேண்டியதுதான். இந்தியாவிலும் இப்படி வரவேண்டும்.


SANKAR
ஆக 03, 2025 20:35

154 d in seven months...but narcotic business still continues there.why it did not stop after first 10 executions? THINK.Desire for big money is more than desire for life.existence of any punishment for anything all over the world made this world crime free?!


KRISHNAN R
ஆக 03, 2025 20:11

இங்கு வராது.. காரணம் வெட்ட வெளிச்சம்


Thravisham
ஆக 03, 2025 20:10

எங்கு தண்டனைகள் மிக கடுமையாக உள்ளதோ அங்கு குற்றங்கள் குறைவு. விதோட்டில் வந்தவரை அன்றே மடக்கியிருந்தால் இன்று நாடு செழிப்பாக இருந்திருக்கும்


என்றும் இந்தியன்
ஆக 03, 2025 20:08

இந்தியாவில் இதே மாதிரி சட்டம் உடனே அனுசரிக்க வேண்டும்


D Natarajan
ஆக 03, 2025 19:15

இந்தியாவில் மரண தண்டனை என்றால் வெத்து வேட்டு . ராஜிவ் காந்தியை கொன்னவர்களை தப்பித்து விட்டு விடுதலை அடித்து விட்டார்கள் . இந்திய நீதி துறை மிக மோசமானது. மரண தண்டனை என்றால் இந்தியாவில் விடுதலை என்று அர்த்தம்.


SANKAR
ஆக 03, 2025 19:39

a small correction they spent nearly THREE DECADES in prison losing their youth and life which is worse than capitalpunishment


Shankar
ஆக 03, 2025 19:01

இதே குற்றங்கள் நம்ம நாட்டில் செய்திருந்தால் இந்நேரம் குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்து தங்களுடைய கடத்தல் தொழில்களை செவ்வனே செய்துகொண்டிருப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை