உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையே இல்லை; நம்பச் சொல்கிறார் யூனுஸ்!

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையே இல்லை; நம்பச் சொல்கிறார் யூனுஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக எந்த வன்முறையும் நிகழவில்லை என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்து உள்ளார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கத் துவங்கியது. ஹிந்து கோவில்கள் இடிக்கப்படுவதும், ஹிந்துக்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகவே உள்ளது. ஹிந்து கோவில்களில் சிலைகள் சேதமடைந்திருக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டும் இருக்கிறது.தற்போது அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியில் இருக்கிறது. ஹிந்து கோவில்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி மத்திய அரசு பலமுறை வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர், ஜெட்டியோவைச் சேர்ந்த மெஹ்தி ஹசனுடன் ஒரு நேர்காணலில் முகமது யூனுஸ் கூறியதாவது: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் ஹிந்துக்கள் தாக்கப்படுவதாக வெளியாகும் அனைத்து செய்திகளும் போலியானவை. அந்த போலி செய்திகளை நீங்கள் நம்ப கூடாது.சில நேரங்களில் சில மோதல்கள், சில குடும்பப் பிரச்னைகள், நிலப் பிரச்னைகள் மற்றும் ஏதாவது இருக்கலாம். இதுபோன்ற மோதல்களுக்கு வகுப்புவாத சாயம் பூசுவது சரியல்ல. இந்த விஷயத்தில் வங்கதேச இடைக்கால அரசு மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.ஏனென்றால், இந்தியா எப்போதும் வலியுறுத்தி வரும் ஒரே விஷயம் இதுதான்.நான் அவர்களை ஒரு சமூகமாக சந்திக்கும் போது, ​​'நான் ஒரு ஹிந்து, அதனால் என்னைப் பாதுகாக்க வேண்டும். நீங்கள் வங்கதேசத்தை விட்டு செல்ல வேண்டாம் என்று நான் கூறுவேன். எப்போதும் 'நான் இந்த நாட்டின் குடிமகன். மக்களுக்கு அரசு வழங்க வேண்டிய அனைத்து பாதுகாப்புகளையும் உறுதி செய்வேன். இவ்வாறு முகமது யூனுஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Nagarethinam
அக் 13, 2025 17:59

younus is a criminal, his end will be more painful....


KRISHNAN R
அக் 13, 2025 12:39

ஏமாற்று வேலை


naranam
அக் 13, 2025 00:42

இந்தியா நம்பக் கூடாது.


மணிமுருகன்
அக் 12, 2025 23:58

முதலில் வங்காள தேசத்தில் நல்ல ஆட்சி அமைய ஏற்ப்பாடுிகள் செய்யவும் ஆதி தொட்டு பதவி சண்டை நடந்துக் கொண்டு உள்ளது நல்ல அரசை அமைத்து மக்களைக் காக்க நடவடிக்கை எடுங்கள்


RAMESH KUMAR R V
அக் 12, 2025 21:15

இப்படிப்பட்டவரின் நோபல் பரிசு திரும்ப பெறவேண்டும்


ஆரூர் ரங்
அக் 12, 2025 20:24

இதையெல்லாம் நம்ப நாங்க ஸ்டாலினுமில்லை. ராகுலுமில்லை.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 12, 2025 21:20

இவர் நோபல் பரிசு வாங்கியுள்ளார். படிச்ச டிகிரியை கோர்ட்டில் ஒளித்து வைக்கலை.


என்றும் இந்தியன்
அக் 12, 2025 20:03

முஸ்லீம் என்றால் இப்படித்தானிருக்கவேண்டும் என்று உதாரண புருஷனாக உள்ளார். உ-ம் : நீதிபதியின் தீர்ப்பு - அவன் அவனை கொல்லவில்லை அந்த கத்தி தான் அவனை கொன்றது ஆகவே கத்திக்குத்தான் சிறைத்தண்டனை அவனுக்கு விடுதலை. இப்படி இருக்கின்றது முகமது யூனுஸ் உளறல் . குரானில் அது தானே எழுதியிருக்கின்றது "முஸ்லீம் அல்லாத ஒருவனின் கையை வெட்டு இல்லை கழுத்தை வெட்டு"“Kill them wherever you find them.” Quran 2:191


Nava
அக் 12, 2025 20:00

இவன் ஒரு கபட வேடதாரி பபூன் இந்தியாவுக்கு எதிரானவன்


சுலைமான்
அக் 12, 2025 19:34

இவருக்கு நோபல் பரிசு கொடுத்து அதன் மதிப்பை கெடுத்தது யார்? இவரைப் போன்ற சிறுபான்மை தான் நோபல் பரிசு போல


GMM
அக் 12, 2025 19:30

இடைக்கால அரசா? அதிகாரியா? இடைக்காலம் எவ்வளவு காலம் வரை? சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறை இல்லை , ஆனால் மக்களுக்கு எதிராக வன்முறை நடைபெறும்? யூனுஸ் ஒரு பொம்மை என்பது தெளிவு. நோபல் பரிசு வெட்கி தலை குனியும். சாதாரண அரசு ஊழியருக்கு கூட தகுதியற்ற நபர். ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்றால் இந்தியா போல் ஆய கலைகள் 64 யை மக்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். வறுமைக்கு பிறந்த கூட்டம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை