உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு: டிரம்ப் எதிர்ப்பு

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு: டிரம்ப் எதிர்ப்பு

தோஹா: '' இந்தியா தன்னைத்தானே காத்துக் கொள்ள முடியும் என்பதால், அங்கு ஆப்பிள் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைவதை பார்க்க விரும்பவில்லை,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக போர் நிலவுகிறது. இதனால், சீனாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் அதிகரிக்க , அந்த போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமுள்ளதாக அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக் கூறியிருந்தார். ஏற்கனவே, ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்தியாவில் 3 தொழிற்சாலைகள் உள்ளன. இரண்டு தொழிற்சாலைகள் தமிழகத்திலும், மற்றொன்று கர்நாடகாவிலும் உள்ளது. இதில் இரண்டு தொழிற்சாலைகளை பாக்ஸ்கானும், மற்றொரு தொழிற்சாலையை டாடா நிறுவனமும் நிர்வகித்து வருகின்றன. இன்னும் இரண்டு தொழிற்சாலைகள் வர உள்ளன.இந்நிலையில், அரபு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப், தோஹாவில் நடந்த வர்த்தக நிகழ்ச்சியில் பேசியதாவது: ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக்குடன் எனக்கு சிறிய பிரச்னை உள்ளது. உங்களை நான் நன்றாக கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால், நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதாக கேள்விப்பட்டு உள்ளேன். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை விரும்பவில்லை. இந்தியாவின் நலன் குறித்து நீங்கள் எண்ணினால், அங்கு நீங்கள் தொழிற்சாலை அமைக்கலாம். உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. அங்கு பொருட்களை விற்பது கடினமாக உள்ளது.அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதாக இந்தியா கூறியது. வரி விகிதத்தை மாற்றுவதாக அவர்கள் தெரிவித்தனர்.பல ஆண்டுகளாக உங்களை நன்றாக கவனித்துக் கொண்டோம். சீனாவில் நீங்கள் கட்டிய தொழிற்சாலைகளை நாங்கள் பொறுத்துக் கொண்டோம். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை விரும்பவில்லை. தங்களின் நலனை இந்தியா காத்துக் கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Nathan
மே 16, 2025 03:41

சீனாவின் செருப்படியை கூட தாங்கிக் கொள்ளும் கோமாளி இந்தியாவில் முதலீடு செய்தால் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்


sankaranarayanan
மே 15, 2025 19:27

பிரதமர் கூடவே இருந்துவிட்டு அவர்க்கு குழி தோண்டும் ஆசாமி இவரை நம்பவே முடியாது நம்பவும் கூடாது எப்போது என்ன பேசுவார் என்று யாருக்குமே தெரியாது ஒரு பெரிய அரசியல் கோமாளி


Ganesh
மே 15, 2025 18:36

சூப்பர் சார், இப்படி தான் அமெரிக்கா கம்பெனி எல்லாத்தையும் ஒன்னு ஒண்ணா மூட வைக்கணும்.. முதல்ல சீனா ல ஆரம்பிச்சி நெறய லாபம் பார்த்தாங்களா? இப்போ இந்தியா கொண்டு வந்து கொஞ்சம் லாபமாவது பாக்கலாம்னு நெனைச்சாங்களா? இப்போ அவங்கள அமெரிக்கா கூப்பிட்டு போய் நெறய overhead சுமக்க வைச்சி அந்த கம்பெனி product விலையை ஏத்தி விட்டு அமெரிக்கா காரங்கலையையும் வாங்க விடாம... மத்த நாட்டுலயும் விக்க விடாம சூப்பர் அப்பு...


Raja k
மே 15, 2025 17:59

அய்யோ என்ன இப்போ இப்படி பேசுறீங்க டிரம்ப், நீங்கள் மோடியோடு வர்த்தகம் செய்ய ஒப்பு கொண்டதாவ்தானே மோடி பாகிஸ்தான் போரை கைவிட்டார், இல்லையென்றால் பாகிஸ்தானை பிரித்து மேய்ந்திருப்பார் மோடி, நீங்க இப்போது வர்த்தகம் செய்ய மாட்டேன் என்கிறீர்கள், மோடி என்ன பன்னுவார் இப்போது, மீண்டும் பாகிஸ்தானோடு டிரோன் விட்டு வேடிக்கை காட்டி பாகிஸ்தான் ஆக்கிரமித்த பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளை மீட்டு அகண்ட பாரதம் பன்னுவாரோ???


Ramesh Sargam
மே 15, 2025 17:55

இந்த டிரம்ப் என்ன கிறுக்கா? Modi is my best friend. ன்னும் சொல்றார். இந்தியாவில் ஆப்பிள் போன் தொழிசாலை அமைக்கவேண்டாம் என்று டிம் குக்கை மிரட்டறார். டிரம்ப்.


Rathna
மே 15, 2025 17:51

டிரம்ப்பின் மகன் நடத்தும் நிறுவனத்தில் பாக்கிஸ்தான் 60 மில்லியன் டாலர் bitcoin முதலீடு செய்து உள்ளது. அப்புறம் அவருக்கு எப்படி இந்தியாவை பிடிக்கும்? தனிப்பட்ட லாபத்திற்காக அரசாங்கங்களை மிரட்டும் நபர். அது இந்தியாவிடம் செல்லுபடியாகவில்லை.


Kumar Kumzi
மே 15, 2025 17:43

கோமாளி நாட்டை ஆட்சி செய்தல் எப்படி இருக்கும்


V.Mohan
மே 15, 2025 17:19

டிரம்ப் பலம்புவது ஏனென்றால் இந்தியாவில் சீனா நிறைய காலூன்றி விட்டது. அமெரிக்காவுடைய தேவையற்ற ஆடம்பர பொருட்களை யானை விலை கொடுத்து வாங்க இந்தியர்கள் தயாராக இல்லை அந்த வயிற்றெரிச்சல் இப்போது புரிகீறது. எப்படியும் காஸட்லியான ஐபோனை மேல்தட்டு உந்தியர்கள் மட்டுமே வாங்குவர். கிட்டத்தட்ட ஐபோன் குவாலிட்டியில் பெரும்பாலான சீன போன்கள் வந்துவிட்டன. இன்னும் சீல காலம் தான். அப்புறம் ஐபோன்ஐய்யய்யோ போன் ஆகிவிடும்.


veeramani hariharan
மே 15, 2025 16:52

Mr.Modiji exposed USA double game in recent Operation Sindhoor. Also, India informed them about imposing anti dumping duty on American products. They are not able to digest that now India is two steps to become Super power. Thats why this joker will try to blockage for us. Mr.Modiji and his team knows this very well and they are making their strategy accordingly


Haja Kuthubdeen
மே 15, 2025 16:46

இந்த ட்ரம்பிற்கு எதற்காக ஜி ஆதரவாளர்கள் முன்பு ஆ ஊ என்று குரல் கொடுத்தார்களோ...எல்லாம் இஸ்ரேலை நினைத்துதான்.அவர்களுக்கு தெரியாத ஒன்று இஸ்ரேல் பெயர்தான் வேறே தவிர அது அமெரிக்காதான் என்பது????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை