உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எங்கள் நாடு விற்பனைக்கு இல்லை; டிரம்ப் ஆசைக்கு அணை போட்டார் கிரீன்லாந்து பிரதமர்

எங்கள் நாடு விற்பனைக்கு இல்லை; டிரம்ப் ஆசைக்கு அணை போட்டார் கிரீன்லாந்து பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கிரீன்லாந்தின் உரிமையும் கட்டுப்பாடும், அமெரிக்காவுக்கு அவசியம் என்று கூறிய டிரம்ப் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 'கிரீன்லாந்து எங்களுடையது; விற்பனைக்கு இல்லை' என அந்நாட்டு பிரதமர் மூட் எகெடே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.கிரீன்லாந்து, ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள தீவு நாடாகும். அரசியல் ரீதியாக ஐரோப்பாவுடன் இணைந்திருந்தாலும், புவியியல் ரீதியாக கிரீன்லாந்து வட அமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்ததாகும். இந்த நாட்டின் மக்கள் தொகை வெறும் 56,000 பேர் மட்டுமே. இது, ஐரோப்பிய நாடான டென்மார்க் ஆளுகைக்கு உட்பட்ட தன்னாட்சி உரிமை கொண்ட நாடாகும். கணிசமான நிலப்பரப்பு இருந்தாலும், மக்கள் அடர்த்தி மிகவும் குறைவாக இருக்கும் நாடுகளில் கிரீன்லாந்தும் ஒன்று. இதன் புவியியல் முக்கியத்துவம் கருதி, அமெரிக்கா தன் மிகப்பெரிய விமானப்படை தளத்தை இந்த நாட்டில் வைத்திருக்கிறது. பனிமலைகள், பென்குவின்கள், துருவக் கரடிகளுக்கு இங்கு பஞ்சமில்லை. கிரீன்லாந்தில் நிலவும் அதிக குளிர் காரணமாக இந்நாட்டில் பெரிய அளவு தொழில் வளர்ச்சி, கல்வி, தொலைத் தொடர்பு வசதிகள் கிடையாது. ஆண்டுதோறும் டென்மார்க் அரசு வழங்கும் மானியம் மட்டுமே இந்த நாட்டின் பிரதான வருவாயாக உள்ளது.தங்கள் நாட்டின் விமானப்படை தளம் இங்கு இருப்பதால், இதை தங்களுக்கே சொந்தமாக்க அமெரிக்கா விரும்புகிறது. கடந்த முறை அதிபராக இருந்தபோது டிரம்ப் இந்த கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார். இதற்கு கிரீன்லாந்தும், டென்மார்க்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் புதிய அதிபராக பதவி ஏற்க இருக்கும் டிரம்ப் மீண்டும் தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக, கிரீன்லாந்தின் உரிமையும், அதன் கட்டுப்பாடும் அமெரிக்காவுக்கு அவசியமாக உள்ளது' என டிரம்ப் கூறியிருந்தார்.அவரது இந்த கருத்துக்கு, கிரீன்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு, 'கிரீன்லாந்து எங்களுடையது. விற்பனைக்கு கிடையாது. ஒரு போதும் விற்பனை செய்ய மாட்டோம்' என்று பிரதமர் மூட் எகெடே கருத்து தெரிவித்துள்ளார். 'அமெரிக்காவின் விருப்பத்தை முறியடிக்க வேண்டும். இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும்' என்று பார்லிமென்டின் பாதுகாப்புக் குழுவின் தலைவர் ஜார்லோவ் கூறினார். டிரம்பின் கருத்துக்கு டென்மார்க் நாடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதற்கிடையே, 'பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனை நிறுத்தாவிட்டால், அதனை அமெரிக்காவே எடுத்துக் கொள்ளும்,'' என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். டிரம்பின் இந்த கூற்றுக்கு பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முனிலோ கண்டனம் தெரிவித்தார்.'பனாமா கால்வாயின் ஒவ்வொரு சதுர மீட்டரும் எங்களுடையது, அதைச் சுற்றியுள்ள பகுதியும் எங்களுடையது. பனாமாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தில் எந்த சமரசமும் செய்யப்பட மாட்டாது' என்று அதிபர் முனிலோ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Jagan (Proud Sangi)
டிச 24, 2024 19:46

கனடாவே அமெரிக்காவுடன் சேர உள்ளது


raju
டிச 24, 2024 15:21

survival of the fit


ponssasi
டிச 24, 2024 14:34

பனாமா கால்வாய் வடிவமைப்பு செய்தது அமெரிக்கா, செலவு செய்தது அமெரிக்கா, தொழிலார்கள் அமெரிக்கா. அதில் பணிபுரிந்த காலத்தில் உயிரிழந்த சுமார் 56000 பேர் அமெரிக்கர்கள். பனாமா அரசு அந்த நன்றியை அமெரிக்க கப்பல்களுக்கு காட்டவேண்டும். யாருக்குமே கோபம் வருவது இயல்பு. இந்தியா இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவியுள்ளது, ஆனால் ஒரு துறைமுகத்தை சீனானுக்கு கொடுத்ததால் நம் மனம் எவ்வளவு புண்பட்டது என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 24, 2024 13:03

பனாமா கால்வாய், கனடா, கிரீன்லாந்து, எகிப்தின் சினாய் பகுதி, சூயஸ் கால்வாய், கத்தார் ஆகிய ஆறு இடங்களையும் அமெரிக்கா கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் உலகின் பொருளாதாரம் நிலை பெரும், வன்முறை குறையும். இது புரிந்தவன் பிஸ்தா.


N.Purushothaman
டிச 24, 2024 13:31

அதை நோக்கி தான் ட்ரம்பின் பேச்சும் இருக்கிறது...


Santhakumar Srinivasalu
டிச 24, 2024 12:51

மீண்டும் பெரியண்ணன் சர்வாதிகார அகம்பாவம் கொண்டு வர முயற்சி நடக்கிறது!


N.Purushothaman
டிச 24, 2024 12:27

க்ரீன் லேண்ட் ,மற்றும் பனாமா கால்வாய் எல்லாம் கொடுக்க முடியாது ..வேணும்ன்னா முரசொலி படிக்கிற சில பேத்தை கூட்டிகிட்டு போயிடுங்க .....வித விதமா ஊழல் செய்யறது எப்படிங்கிறதை உங்க ஆளுங்களுக்கு சொல்லி கொடுப்பாங்க ....


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 24, 2024 12:21

கிறீன்லாந்தில் மொத்தமாக 58,000 நபர்களுக்கும் குறைந்த அளவே மக்கள்தொகை. மொத்தமாக ஒரு 10-15 கப்பல் லோடு. டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு காலனி ஆதிக்க அடிமை நாடு. டென்மார்க் கொடுக்கும் இலவச பணத்தில் வாழும், மீன் பிடிப்பதை தவிர வேறு ஒன்றும் தெரியாத நபர்கள் வாழும் இடம். குழந்தைகள், முதியவர்களை கழித்தால் மொத்தமாக சராசரியாக 30,000 நடுத்தர வயதினர் இருப்பார்கள். முக்கியமாக அங்கேயே தங்கி இருப்போர் இன்னும் குறைவு. இதில் முக்கியமான விஷயம் கிறீன்லாந்து காலனி டென்மார்க்கை விட அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மிக அருகில் உள்ள நிலப்பரப்பு. இது கிட்டத்தட்ட அர்ஜென்டினா - பால்க்லாந்து போன்ற அமைப்பு. பால்க்லாந்து பிரிட்டனின் காலனி. அதற்காக அர்ஜென்டினாவுடன் 20 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் போர் செய்தது சிலருக்கு நினைவிருக்கலாம்.


RAVINDRAN.G
டிச 24, 2024 10:48

ட்ரம்பின் இந்த அடாவடி பேச்சு எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. அமெரிக்காவை ஒன்னும் இல்லாம ஆக்கப்போறாரோ. ட்ரம்பின் நாக்கை அடக்கணும் . இந்த பெரியண்ணன் போக்கு மாறணும்


பெரிய ராசு
டிச 24, 2024 10:39

இந்திய பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனை நிறுத்தாவிட்டால், இந்தியாவை அமெரிக்காவே எடுத்துக் கொள்ளும்... டொனால்ட் டிரம்ப்


Rpalni
டிச 24, 2024 14:21

சொரியார் ராம்சாமி இருந்திருந்தால் வரவேற்றிருப்பார்.


Rpalni
டிச 24, 2024 10:32

இருந்திருந்தால்


முக்கிய வீடியோ