உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் இலக்கு; மோகன் பாகவத் வலியுறுத்தல்

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் இலக்கு; மோகன் பாகவத் வலியுறுத்தல்

-நமது சிறப்பு நிருபர்-'வேற்றுமையில் ஒற்றுமை எனும் உண்மையை உணர்வதும், அவ்வப்போது உலகை அதை உணர வைப்பதுமே பாரதத்தின் இலக்கு' என நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ocqxce42&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நியூயார்க்கில் நடைபெற்ற 'யுனிவர்சல் ஒன்2026' விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: இந்தியா பல்வேறு வேறுபாடுகளுக்கு இடையே ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் நாடாகத் திகழ்கிறது; நமது தற்போதைய அரசியல் சூழல் சுயநலம் சார்ந்ததாக மாறிவருகிறது. ஹிந்து மதம் மனித குல ஒற்றுமையை நம்புகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று எந்து ஹிந்து நினைத்தாலும் அவர் ஒரு ஹிந்து கிடையாது. மதச் சடங்குகளில் வேறுபாடுகள் இருந்தாலும், மனிதநேயம் ஒன்றே என்பதைத்தான் இந்தியக் கலாசாரம் நமக்குக் கற்பிக்கிறது. வெவ்வேறு மத நடைமுறைகள் இறுதியில் ஒரே உண்மையையும் இறைத் தன்மையையுமே அடைகின்றன. வேற்றுமையில் ஒற்றுமையே நாட்டின் பலம்; வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு விசுவாசமாகவும், தங்களின் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கண்ணியம் உண்டு. மனிதர்களிடையே எந்த வேறுபாடும் இல்லை. பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். பாரதத்தைப் பொறுத்தவரை, இந்த ஒற்றுமையும் வேற்றுமையும், இரண்டுமே மரபணுவிலேயே உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இயற்கையின் உண்மையான தத்துவம். பாரதம் வரலாற்று ரீதியாகவே அனைத்து மதத்தினருக்கும் புகலிடம் அளித்து ஒற்றுமையாக வாழும் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

வேற்றுமையில் ஒற்றுமை!

மேலும் மோகன் பாகவத் பேசியதாவது: சுவாமி விவேகானந்தர் கூறினார்: ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குறிக்கோளை நிறைவேற்ற வேண்டியுள்ளது; ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு இலக்கை அடைய வேண்டியுள்ளது. பாரதத்திற்கு அளிக்கப்பட்ட இலக்கு என்ன என்றால், 'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் உண்மையை உணர்வதும், அவ்வப்போது உலகை அதை உணர வைப்பதுமே ஆகும். நாம் அனைவரும் ஒன்றே; அந்த ஒற்றுமைக்கு வேற்றுமை ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. எனவே, வேற்றுமையைக் கொண்டாட வேண்டும், மதிக்க வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே வேளையில், அந்த ஒற்றுமை உணர்வையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்; அது ஒரு மிக உண்மையான உணர்வாகும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.ரீல்ஸ் வீடியோ பாருங்கள்!நியூயார்க்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பரபரப்பு பேச்சுதினமலர் ரீல்ஸ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Kasimani Baskaran
ஆக 31, 2026 03:58

ஜிகாதிகளிடம் வேற்றுமையில் ஒற்றுமை பேசமுடியாது.. ஆயுதம் எடுக்காமல் அவனை திருத்த முடியாது - அவனிடம் அஹிம்சை பேசினால் அழிவது நாம்தான்.


Sundar R
ஆக 30, 2026 22:41

WHY THOSE PEOPLE OTHER THAN TRUE HINDUS ARE NOT CRITICIZING THE EV RAMASAMY AND ASK THE DRAVIDIANS TO STOP TALKING UTTER NONSENSE BEFORE A MIKE, IN FRONT OF THE PUBLIC ABOUT HINDUISM AND OUR BHARAT. WELL BEING OF ALL PEOPLE IS IMPORTANT.


Sundar R
ஆக 30, 2026 22:20

We respect the people of all religions. Because good people are there in all religions. But, ..... Elderly persons, Persons who know Palmistry and Astrology are saying with full belief that EVR WAS NOT TRUSTWORTHY AND THEREFORE HE IS NOT AT ALL A GOOD PERSON. BUT, WHY THOSE PEOPLE OTHER THAN TRUE HINDUS ARE NOT CRITICIZING THE EVR AND ASK THEM TO STOP TALKING NONSENSE BEFORE A MIKE, IN FRONT OF PUBLIC ABOUT HINDUISM AND OUR BHARAT. WELL BEING OF ALL PEOPLE IS IMPORTANT.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 30, 2026 19:15

நான் இருந்தது கோல்டன் சாண்ட்ஸ் 2 அல் மண்கூல், துபாய். இந்தியா ஜெயிச்சதுக்கு நாங்க கொண்டாடினோம், பொடிசு முதல் பெரிசு வரை, உங்க அமைதி கும்பல் ஒரு பய வரல, உங்க கும்பல் விசுவாசம் எல்லோருக்கும் தெரியும்


Haja Kuthubdeen
ஆக 30, 2026 20:22

கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் தங்கியிருப்பவர்கள் 95%தொழிலாளர்கள்.அதாவது சென்ட்ரிங் பிளம்பிங் கொத்தனார் எலக்ட்ரிக்கல் கார்பென்டர் போன்ற தொழில் அறிந்தவர்கள்.அங்கே போயி முஸ்லிமை தேடினால் எப்படி????மலையாளிகள் பேருக்கு சிலர் இருப்பர்...விளையாட் அளவுகோல் அல்ல...இந்தியா விளையாடும் முக்கிய போட்டிகள் இந்தியன் அசோஷியேசன்..கல்ச்சுரல் சென்டர்..மலையாளிகளின் சபை இங்கெல்லாம் பெரிய திரையில் கட்டணம் வசூலித்து நடத்துவார்கள்.அங்கெல்லாம் போயிருந்தால் தெரியும்.


எதிர்தமில்
ஆக 30, 2026 18:28

மோகனா ஜியும் காந்தி நேணு மாதிரி பேசுவதற்கு காங்கிரஸில் சேர்ந்துவிடலாம் 85%உ இந்துக்கள் உள்ள இந்தியாவில் ஜாதி ரீதியாக வருமான ரீதியாக பிளவுபடுத்தி அனைத்து கட்சிகளும் குளிர்காய்கின்றன..வேற்று மதத்தினர் இந்துக்கள் கோயில் சொத்தை சூறையாடுகின்றனரர்..இந்துக்களை காக்கும் கைககளாக பஜகவும் ஆர் எஸ் எஸ்ம் இல்லை


Iyer
ஆக 30, 2026 16:06

ஹிந்துமதம் ""ஒன்றுதான்"" மனிதகுல ஒற்றுமையை நம்புகிறது. வேறு எல்லா ABHRAHAMIC மதங்கள் அப்படி மனித குல ஒற்றுமையில் நம்புவதோ, நடைமுறைப்படுத்துவதோ கிடையாது. மிரட்டி கத்திமுனையில் யாரையும் ஹிந்துவாக மாற்றுவது கிடையாது. காசு பணம் பேராசை காண்பித்தும் யாரையும் ஹிந்துமதத்திற்கு மாற்றுவதும் கிடையாது. உலகம் முழுதும் - பல லக்ஷம் பேர்கள் இப்போது ஹிந்துமதத்தின் நம்பர்களை புரிந்துக்கொண்டு VOLUNTARY ஆக ஹிந்து மதத்தை கடைபிடிக்கிறார்கள்


தமிழ்வேள்
ஆக 30, 2026 13:11

தற்காப்புக்காக/ பிறர் அத்துமீறாமல் அடங்கி இருப்பதற்காக ஓரளவு வன்முறை


ஜெகதீசன்
ஆக 30, 2026 11:42

நாம் சுதந்திரம் அடைந்த போது நெடுங்கால அந்நிய ஆதிக்கத்தால் இந்தியாவில் பல காரணங்களால் மதம் மாற்றம் ஏற்பட்டது. அவசர கோலத்தில் நடந்த தேச பிரிவினையின் போது பெருமளவு


Haja Kuthubdeen
ஆக 30, 2026 10:54

அன்பருக்கு ஒரு உண்மைமை சம்பவம்.துபாயில் இருந்த தருணம்.ஈத் பண்டிகை கொண்டாட..புஜைரா என்ற இடத்திற்கு ஒரு கார்.. ஒரு வேன் மூலம் ஹிந்து நண்பர்கள் உட்பட சாலையில் போய் கொண்டு இருந்த போது பாக்கிஸ்தான் நபர்கள் வேண்டுமென்றே கூச்சலிட்டு ஓவர்டேக் செய்வதும் ராங்காக ஓட்டுவதுமா வம்பு...பொறுமை இழந்த நாங்கள் அந்த காரை வழிமறித்து வாக்குவாதம் தொடங்கி அடிதடி..அவனுங்க வெறும் ஐந்து பேர்..பின்னி பெடல் எடுக்க அடுத்த சிலநிமிடங்களில் போலீஸ் அனைவரையும் அள்ளி லாக்கப்..பெ.ருநாள் கொண்டாட்டம் சிறையில்.தயார் செய்து கொண்டுபோன உணவு வீன்.இரவு பத்து மணிக்கு மேல் அதிகாரி இருதரப்பையும் கண்டித்து உங்க சண்டைய உங்க நாட்டோடடு நிறுத்திக்கனும் என்று வழக்கு பதியாமமல் இறக்கத்துடன் விடுவித்தார்.நாடு என்று வந்துவிட்டால் பணிந்து போகமாட்டோம் என்பதற்கு இது உதாரணம்


Kumar Kumzi
ஆக 30, 2026 16:25

ஆனால் எப்போதுமே பாக்கிஸ்தானுக்கு தான் வாலை ஆட்டுவோம் ஹீஹீஹீ


Haja Kuthubdeen
ஆக 30, 2026 19:12

தனிப்பட்ட முறையில் எங்யோ வாங்கி இருக்கே..அந்த பயம் இருக்கட்டும் கும்கி


Barakat Ali
ஆக 30, 2026 10:26

மனித குல ஒற்றுமை வேணும் .... அனைவரும் சகோதரர்கள்ன்னு நல்ல விஷயத்தைத் தானே சொல்றாரு ?? ஏன் பலருக்கு ஆ வா எரியுது ??


Haja Kuthubdeen
ஆக 30, 2026 20:34

நல்லவிசயமோ கெட்டவிசயமோ ஆரம்பம் முதலே சில வலதுசாரிகளுக்கு முஸ்லிம் என்றாலே எட்டிக்காய்.நாங்களெல்லாம் ஹிந்து சகோதரர்களோ டு பேசி பழகி நட்போடு இருக்கோம்.உதாரணத்திற்கு எங்க ஊரு அரசு மேல்நிலை பள்ளி அருகே பெரிய பள்ளிவாசல்.மாணவர்கள் கடும் சூட்டில் தண்ணீர் தாகத்தால் கஸ்டபடுவது அறிந்து பள்ளிவாசல் உள்வளாகத்தில் கூலர் வசதியுடன் சுத்தமான குடிநீர் ..மாணவர்கள் அனைவரும் குறிப்பா எஸ் டி பிரிவினர் (இவர்களே அதிகம்)சர்வ சுதந்திரமா நீர் அருந்துவார்கள்.பள்ளி தேர்வில் முதல் மூன்று இடம் பிடிப்போருக்கு லட்சகணக்கில் ரொக்க பரிசு...பலன் அடைவோர் 90%ஹிந்துமத மாணவ செல்வங்கள்.குருபுத்தி கொண்டோர் எப்படி வேணும்னாலும் திட்டிட்டு போகட்டும்.


மேலும் செய்திகள்