உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 6 ஆண்டுகளில் முதல் முறையாக முடங்கியது அமெரிக்க அரசு நிர்வாகம்: காரணம் என்ன?

6 ஆண்டுகளில் முதல் முறையாக முடங்கியது அமெரிக்க அரசு நிர்வாகம்: காரணம் என்ன?

வாஷிங்டன்: கடந்த 6 ஆண்டுகளில் முதல் முறையாக, அமெரிக்க அரசு நிர்வாகத்தின் பெரும்பாலான செயல்பாடுகள் முடங்கியது. இதனால் அரசு ஊழியர்கள் 7.50 லட்சம் பேர் கடுமையான பாதிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.அமெரிக்காவில் வழக்கமாக ஒருமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. செலவினங்கள் தொடர்பான மசோதாவை அந்நாட்டு பார்லிமென்டில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றால் தான், அடுத்த ஆண்டுக்கான அரசின் செலவினங்களுக்கு நிதி அங்கீகரிக்கப்படும்.இந்த சூழலில், செனட் ஒரு தற்காலிக நிதி மசோதாவை நிறைவேற்ற தவறியதை தொடர்ந்து, ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க அரசு அலுவலகங்களில் செயல்பாடுகள் முடங்கின. இது நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தியது. செனட் சபையில் தற்காலிக நிதி மசோதாவுக்கு ஆதரவாக 55 சதவீத ஓட்டுக்களும், எதிராக 45 சதவீத ஓட்டுக்களும் பதிவாகின. ஒரு மசோதா நிறைவேற 60 சதவீத ஓட்டுக்கள் தேவை. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்துள்ள நிலையில் அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது. இதனால் அமெரிக்க நேரப்படி புதன் கிழமை (அக் 1) நள்ளிரவு 12.01 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும். இதனால் அத்தியாவசியமற்ற பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்கள் 7.50 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் ஒரு நாளைக்கு 400 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.

கடந்த கால வரலாறு

டிரம்பின் கடந்த ஆட்சி காலத்தில், செலவின மசோதா தோல்வி அடைந்த காரணத்தினால், 35 நாட்கள் அமெரிக்க நிர்வாகம் முடங்கியது. கடந்த 2013ம் ஆண்டு ஒபாமா நிர்வாகத்தில் செலவின மசோதா தோல்வி அடைந்த காரணத்தினால் 16 நாட்கள் நிர்வாகம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

V.Mohan
அக் 01, 2025 19:38

மாண்புமிகு அரசர் துக்ளக் பாணியில் அமெரிக்க அதிபர்கள் நாட்டை ஆண்டும் கூட ஏன் அமெரிக்க டாலர் மதிப்பிழக்காமல் உள்ளது என்பது எல்லாருடைய சந்தேகமாக உள்ளது. என்னுடைய அநுமானம் என்னவென்றால் எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகள் தான் இதற்கு காரணம். இந்த எண்ணெய் உற்பத்தி நாடுகளிடம் உள்ள செல்வத்தை முதலீடு செய்ய பெரிய நாடு தேவை. எண்ணெய் நாடுகளுக்கு வட்டிக்கு பதிலாக மரியாதையும், கெளரவமும் தரப்பட்டதால் அவர்கள் டாலருக்கு முக்கியத்துவம் தந்தனர். அப்படியே எல்லாரும் ஒப்புக்கொள்ளும் செலாவணி யாக மாறிவிட்டது.


ஆரூர் ரங்
அக் 01, 2025 19:47

அரபு GCC நாடுகள் ஒப்புக்காக ராணுவப்படை வைத்திருக்கின்றன. உண்மையில் அமெரிக்காதான் அவர்களுக்கு பாதுகாப்பே. அதற்கு மறைமுக கட்டணம் போல அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளன. குவைத் தனது எதிர்கால FUTURE FUND என குவித்து அமெரிக்க பிளாக்ராக் AMC கில் முதலீடு செய்துள்ளது ஏராளம்.


சாமானியன்
அக் 01, 2025 18:55

புரியாத பொருளாதாரம். இவ்வளவு இருக்கும்போது எப்படி டாலர் உலகத்தின் முதல் கரண்சியாக வெகுகாலமா இருக்குதே ? அது எப்படி !


பெரிய குத்தூசி
அக் 01, 2025 18:52

அமெரிக்கா வருசத்துக்கு ஒரு வாட்டி இந்த ட்ராமா வை செய்துகொண்டு உள்ளனர். கேட்டு கேட்டு போர் அடிச்சிடிச்சிபா


என்றும் இந்தியன்
அக் 01, 2025 17:58

அமெரிக்கான்னா அப்படி அமெரிக்கான்னா இப்படி என்று டப்பா அடித்தார்களே இன்று வரை???உண்மையான அமெரிக்க என்ன என்று இப்போது காட்டிவிட்டது ஒரு பிச்சைக்கார நாடு இந்த அமெரிக்கா US government owes to its lenders, currently amounting to $36.2 trillion. This represents 122 percent of the countrys annual economic output or gross domestic product GDP, and it is growing by about $1 trillion every three months Indian Rupee 3,21,06,57,25,26,60,000.00 Indian Rupee அதாவது ரூ 321 கோடி கோடி சரியான பிச்சைகார நாடு


Bala
அக் 01, 2025 17:36

இவிங்களுக்கு இதே வேலையா போச்சு , 6 மாசத்துக்கு ஒரு தடவ இந்த ட்ராமா பண்றது


Bala
அக் 01, 2025 17:35

சும்மா வருமா சுகுமாரி


Field Marshal
அக் 01, 2025 16:29

செந்தில் பாலாஜி டெபுடேஷனில் சென்று டிரம்புக்கு வழிகாட்டலாம்


jaya
அக் 02, 2025 10:30

அண்ணே ட்ரம்பையே ஆட்டைய போட்ருவாரு


Sivagiri
அக் 01, 2025 16:05

ஆக , அமெரிக்காவில் , பைசா இல்லாமல் ஒரு பயலும் ஒரு நிமிஷம் கூட வேலை செய்ய மாட்டாய்ங்க போல ,


Field Marshal
அக் 02, 2025 20:00

மணிக்கு 25 டாலர் குறைந்த பட்ச கூலி


முக்கிய வீடியோ