உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வியட்நாமை சுழன்றடித்த கஜிகி: 7000 வீடுகள் சேதம், விமான நிலையங்கள் மூடல்

வியட்நாமை சுழன்றடித்த கஜிகி: 7000 வீடுகள் சேதம், விமான நிலையங்கள் மூடல்

ஹனோய்: வியட்நாமை தாக்கிய கஜிகி சூறாவளிக்கு 3 பேர் பலியாகி இருக்கின்றனர். அங்குள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சீனாவின் தெற்கே வெப்ப மண்டல புயல் கஜிகி, வியட்நாமை நோக்கி நகர்ந்து தற்போது தாக்கி உள்ளது. சூறாவளியாக மாறி காற்றுடன் கடும் மழையும் பெய்ய, நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் 3 பேர் சிக்கி பலியாகி உள்ளனர். ஏராளமானோர் மாயமாகி இருக்கின்றனர்.7000 வீடுகள், 28, 800 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. 18,000 மரங்கள் சாய்ந்துள்ளன. தன்ஹோ பகுதியில் மட்டும் 331 மின்கம்பங்கள் சரிந்துள்ளன. தன்ஹோ, தாய் நுயுன் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் மின்சாரம் வினியோகம் இல்லை.மணிக்கு 130 கிமீ வேகத்தில் சுழன்றடித்த கஜிகி சூறாவளி ஹனோய் உள்ளிட்ட பல நகரங்களை கடுமையாக தாக்கியது. கிட்டத்தட்ட 44,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 16,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் இறங்கி இருக்கின்றனர். இரண்டு உள்நாட்டு விமான நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. 35 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.வியட்நாமில் இருந்து சர்வதேச நாடுகளுக்குச் செல்லும் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்நாட்டு தேசிய காலநிலை மையம் கூறி உள்ளதாவது; வடக்கு வியட்நாமின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சில பகுதிகளில் 150 மிமீ அளவுக்கு மழை பதிவாகக்கூடும். பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.நிலைமை மிகவும் பாதுகாப்பற்ற, அபாயகரமான சூழலில் இருக்கிறது. வாகனங்களை யாரும் இயக்க வேண்டாம். மீன்பிடிக்கவோ, சுற்றுலா பகுதிகளை ரசிக்கவோ உகந்த சூழல் தற்போது இல்லை.இவ்வாறு வியட்நாம் காலநிலை மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ