உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் வம்சாவளி இந்தியர் ஜோஹ்ரான் மம்தானி

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் வம்சாவளி இந்தியர் ஜோஹ்ரான் மம்தானி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். அமெரிக்காவில் மிக முக்கியமான பிரபலமான நகரம் தான் நியூயார்க். இந்த நகரத்தின் மேயராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த நகரத்திற்கு மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் மும்முனைப் போட்டி நிலவியது. ஜனநாயகக் கட்சி சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க் நகரில் வளர்ந்த 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி போட்டியிட்டார். அவரை எதிர்த்து டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா போட்டியிட்டார். அதேபோல நியூயார்க்கின் முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ சுயேச்சையாக களம் இறங்கினார்.அக்., 25ம் தேதி ஓட்டுப்பதிவு தொடங்கி, நவ.,4ம் தேதி வரை நடந்தது. அனைத்து வேட்பாளர்களும் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியானது. நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி மாபெரும் வெற்றியை பதிவு செய்து, நகரத்தின் புதிய மேயராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.இந்த வெற்றியின் மூலம், நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையை ஜோஹ்ரான் மம்தானி மாம்டானி படைத்துள்ளார். அமெரிக்காவின் முக்கிய அரசியல் பதவிகளில் இளம் வயதிலேயே (34) இவர் பொறுப்பேற்றுள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இவர் நடத்திய தீவிர தேர்தல் பிரச்சாரம் இவருக்கு இந்த மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்து இருக்கிறது. ஜோஹ்ரான் மம்தானி அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். ஏனெனில் நியூயார்க் நகரம் அமெரிக்காவின் மிக முக்கியமான நகரமாகும். இந்த நகரில் நடக்கும் அரசியல் மாற்றம், நாடு முழுவதும் எதிரொலிக்கும். இந்த தேர்தல் சர்வதேச கவனத்தை பெற்றது. வெற்றி வாகை சூடிய, ஜோஹ்ரான் மம்தானிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நிதி தரமாட்டேன்!

மேயர் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரத்திற்கான நிதியை நிறுத்துவேன் என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி இருந்தார். ஒரு கம்யூனிஸ்ட் தலைமையில் இருந்தால் அது மோசமாகிவிடும். அவர் திறமையானவர் இல்லை. உலகின் மிகப்பெரிய நகரத்தின் மேயராக, மம்தானியை கொண்டுவர முடியாது என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். தற்போது மம்தானியின் வரலாற்று வெற்றி, அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் புஸ்வாணம் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Trichy
நவ 05, 2025 10:03

இது இந்தியாவுக்கு ஓன்னும் பயனில்லை, சந்தோச படவேண்டாம் , இது நியூயார்க் நகரை முஸ்லீம்மாக மாற்றுவதற்குக்கான முதல் படி.


Ramesh Sargam
நவ 05, 2025 09:48

ட்ரம்ப், மம்தானி தேர்தலில் வெற்றி பெற்றால் நிதி தரமாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்தார்? இப்பொழுது என்ன ஆகும்? நிதி இல்லாமல் மம்தானி நியூயார்க் நகரத்திற்கு என்ன செய்யமுடியும்? மம்தானி தனது ஆதரவாளர்களை சேர்த்துக் கொண்டு போராடவேண்டியதுதான். நீதிமன்றத்தை அணுகவேண்டியதுதான். ஒருவேளை நீதிமன்றம் மம்தானிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினால், ட்ரம்ப் நீதிமன்றத்துக்கும் நிதியை கொடுக்கமாட்டாரோ? என்ன மனிதரப்பா இந்த டிரம்ப்?


rasaa
நவ 05, 2025 09:41

சரி. மம்தாஜி வெற்றி பெற்றார். இனிதான் அமெரிக்க மக்களுக்கு உண்டு பிரச்சினை


Moorthy
நவ 05, 2025 09:40

எதிர்பார்க்கப்பட்ட முடிவுதான் அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பெரும் பணக்கார கடலோர மாநிலங்கள் மற்றும் நகரங்கள் , டிரம்ப் கு எதிரான ஜனநாயக கட்சி ஆதரவாளர்களே


duruvasar
நவ 05, 2025 09:36

அப்போ ஆந்திர வம்சாவளி திராவிடனின் கதி அதோகதிதானா ?


oviya vijay
நவ 05, 2025 09:46

அது சும்மா புஸ்வாணம். இங்கேதான் உதார். gummidipoondi தாண்டினால் ஒண்ணுமே தெரியாத தற்குறிகள்


சமீபத்திய செய்தி