உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் வேத கோஷம்

புதுடில்லி ஆர்.கே.புரம், செக்டார் 1-ல் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில், நவராத்திரி மஹோத்ஸவத்தின் ஆறாவது நாளை முன்னிட்டு, நேற்று செப்-27 மதியம் 3.00 மணிக்கு குரு ஸ்ரீ சந்திரசேகரன் தலைமையில் வேத கோஷம் நடைபெற்றது. வேதவிப்பன்னர்கள் மற்றும் ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று வேத பாராயணம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்ரீ ராமானந்த தீர்த்த சுவாமிகள் பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார்.---புதுடில்லியில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !