உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பணி நிரந்தரம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் பேரணியாக வந்து ரிப்பன் மாளிகை நுழைவாயிலை உடைத்து சென்றனர்..

25-08-2026 | 20:46


மேலும் இன்றைய போட்டோ

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அருகன்குளத்தில் அமைந்துள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலில், பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வாங்குவதற்காக தயாராகும் மண்பாண்டங்கள்..

28-08-2026 | 15:51


திருநெல்வேலி ஜங்ஷன் சிந்து பூந்துறை தாமிரபரணி ஆற்றில் விடப்படும் சாக்கடை நீரை தனியார் நிறுவனம் சுத்திகரிப்பு கருவிகள் மூலம் அங்கேயே சுத்திகரித்து நல்ல தண்ணீராக மாற்றும் முயற்சி நடந்தது...

28-08-2026 | 15:50


சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் கோவை ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டில் வட மாநிலத்தோர் இனிப்பு வழங்கி, கைகளில் ராக்கி கட்டி ரக்சாபந்தனை கொண்டாடினர்.

28-08-2026 | 15:50


திருப்பூர் மங்கலம் ஊராட்சி புக்குளிபாளையம் பகுதியில் இருந்து மேல்நிலை குடிநீர் தொட்டி உடைத்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது.

28-08-2026 | 15:50


தமிழகம், கேரளம் எல்லையில் காரமடை அருகே உள்ள முள்ளி சோதனை சாவடியில் உர கடத்தலை தடுப்பதற்கு வேளாண்மை துறை சார்பில் கள ஆய்வில் வேளாண்மை உதவி இயக்குனர் மேகலா தேவி ஆய்வில் ஈடுபட்டார்.

28-08-2026 | 15:48


கோவை பாலக்காடு மெயின் ரோட்டில் மைய தடுப்புகள் இடையே உள்ள சந்து வழியாக பாதசாரிகள் ரோட்டை கடக்க முயன்று வருவதால் வாகன ஓட்டிகள் தடுமாறுவதோடு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இடம்: குனியமுத்தூர்.

28-08-2026 | 15:48


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகளுக்கு குறைக்கேட்புக்கூட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் நடந்தது

28-08-2026 | 15:47


நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஆண்டு திருவிழா நாளை மறுநாள்( ஆக.,29) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக சர்ச் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

27-08-2026 | 22:26


ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.பராவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பள்ளி மாணவியர் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.

27-08-2026 | 22:26