உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / ஆரோக்கியம் / ஆப்பிள் சீடர் வினிகரில் நன்மை..தீமை எது அதிகம்..?

ஆப்பிள் சீடர் வினிகரில் நன்மை..தீமை எது அதிகம்..?

ஆப்பிள் சீடர் வினிகர் என்பது புளித்த ஆப்பிள் சாறு, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனை மக்கள் செரிமானம், நெஞ்செரிச்சல், உள்பட தலைமுடி, சரும பராமரிப்பு, கல்லீரல் கொழுப்பை கரைப்பதற்கு என பலவற்றிற்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் ரத்த செல்களின் நுண்கிருமிகள் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கின்றது. தேன் சேர்த்து சாப்பிட்டால் ஆஸ்டியோபோரசிஸ் என சொல்லக்கூடிய எலும்பு பிரச்சனை குணமாகுமென கூறப்படுகிறது.

நன்மைகள் :

1.ஆப்பிள் சீடர் வினிகரை உடல் எடையை குறைக்க விரும்பும் பலர் எடுத்து கொள்கின்றனர். தினமும் சாப்பிடுவதற்கு முன்னால், இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து அருந்துவதுடன், குறைந்த கலோரி உடைய உணவுகள் எடுத்து கொள்வதால் உடல் எடை விரைவாக குறைவது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.2.உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவிபுரிகிறது. நீரிழிவுக்கு மருந்தாக பயன்படுத்த முடியாது. எனினும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

3.உடலில் உள்ள கொழுப்பு சத்தை குறைப்பதில் ஆப்பிள் சீடர் வினிகர் பயனிப்பதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. உடல் எடையை குறைப்பதுடன், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது. 4.பலர் வயிற்றெரிச்சல், நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கு நிவாரணமாகவும், தலையில் பொடுகு தொல்லை நீங்க இதனை பயன்படுத்துகின்றனர்.

தீமைகள் :

நன்மைகள் போலவே ஆப்பிள் சீடர் வினிகரால் சில தீமைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. 1.ஆப்பிள் சீடர் வினிகரில் அமிலம், வினிகர் அதிகமிருப்பதால், சிலருக்கு தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தலாம். மேலும், பற்களின் எனாமலில் அரிப்பை ஏற்படுத்தலாம்.2. ஆப்பிள் சீடர் வினிகரை, எப்போதும் தண்ணீருடன் கலந்து மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகளவில் ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் சிலருக்கு அஜீரணக்கோளாறு ஏற்படுவதுடன், குமட்டல் உணர்வு ஏற்படலாம்3.ஆப்பிள் சீடர் வினிகர், இன்சுலின், மலமிளக்கி மருந்துகளுடன் எதிர்வினையாற்ற கூடும். எனவே வினிகரை பயன்படுத்தும் முன் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !