நாக தோஷம் நீங்க அவசியம் போக வேண்டிய கோயில் இது | Templecity | Kanchipuram | Shivatemple
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பழையனூரில் மாகாளீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி உள்ளது. தூண்களின் இரண்டு பக்கமும் மகாகாளி மற்றும் விநாயகர் சன்னதிகள் உள்ளன. பலிபீடம் மற்றும் ரிஷபம் மண்டபத்தின் முன்புறம் உள்ளது. மகா மண்டபத்தின் வழியாக அர்த்த மண்டபத்துக்கு போகலாம். இங்கு வள்ளி தேவசேனாவுடன் ஆறுமுகர், அம்மன் மகா மண்டபத்தில் காட்சி தருகின்ற்னர். கருவறையில் மூலவர், கோஷ்டத்தில் திரிபுராந்தகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா அருள் புரிகின்றனர். அம்பாள் மரகதவல்லி வெளிப்பிரகாரத்தில் நின்ற கோலத்தில் தனி ஆலயத்தில் உள்ளார். வெளி பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, பைரவர் உள்ளனர். சிவ லோகேஷ் அர்ச்சகர் தொடர்புக்கு - 9080992799