வானிலை மையம் அறிவிப்பு | Southwest monsoon intensity | Nilgiris, Covai | Oranch Alert
நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். இதன் காரணமாக இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலெர்ட் விடப்படுவதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளையும் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் சிறிது மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம் 37 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். செவ்வாய் காலை நிலவரப்படி அதிகபட்சமாக வால்பாறையில் 31 செ.மீ. மழை பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.