கோவை புதிய போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அதிரடி | COP Saravana Sundar Press Meet | Covai
கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், சென்னை டி.ஜி.பி அலுவலக ஐ.ஜி யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வந்த சரவண சுந்தர், ஐ.ஜி யாக பதவி உயர்வு பெற்று கோவை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கோவையில் அனைத்து குற்றங்களையும் தடுக்கும் வகையில் பீட் ஆபீஸ் திட்டம் அமல்படுத்தப்படும். இதன் மூலம் போலீசாரின் பணிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் முற்றிலும் தடுக்கப்படும். பழைய போலீஸ் கமிஷனர் அமல்படுத்திய அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்.